Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

:lol: பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு

Featured Replies

b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே.

ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது.

இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு

1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள்

2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety)

3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs )

4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs)

5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)

6. ஆளில்லா வேவு விமானங்கள்

7. தாங்கிகளுக்கான வெடிப்பொருட்கள்

8. சாதாரண ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்

9. மீளவடிமைக்கப்பட்ட 22 Al Zarar தாங்கிகள்

10. கவச வாகனங்கள் மற்றும் ஜீப்கள்

மேற்படி ஆயுதங்களுக்கான கொள்வனவு உத்தரவுகளை சமர்ப்பித்திருந்தது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களால் பலநாடுகள் சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்கள் விற்பனை செயவதை விரும்பாத நிலையில் பாகிஸ்தானிடம் முழுமையாக வாங்கவேண்டிய நிலையில் சிறீலங்கா அரசு உள்ளது.

சிறீலங்கா அரசுகோரும் சில ஆயுதங்களை பாகிஸ்தானியர்கள் முகவர்களாக நின்று பழைய சோவியத் குடியரசுகளிடம் வாங்கிக்கொடுக்க உடன்பட்டிருந்தனர். இவையாவற்றிலும் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ள அதேசமயம், தேவைக்கு அதிகமான தரகுக் கூலியும் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வந்து சேர்ந்த வெடிகுண்டுகளுக்கான இலத்தரனியல் பியூஸ்களில் அரைவாசி இயங்காத நிலையில் 'வானத்தில் இருந்து வெடிக்காது கற்கள்போல பாரிய வெடிகுண்டுகள் வீழ்ந்தன' என்று சிறீலங்கா படைத்துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் நவீன ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் மூலம் புலிகளுக்கெதிராக வெற்றிகரமாக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவரும் அவரது சகோதரருமான லெப்.கேணல் கோத்தபாயவும் நண்பரான இராணுவத் தளபதியும் திட்டமிட்டிருந்தமை தெரிந்ததே.

சிறீலங்கா அரசின் ஆயுதக் கொள்வனவு பட்டியல் 250 மில்லியன் டொலர்களை எட்டும் என்ற நம்பிக்கையுடன் பாகிஸ்தானிய ஆயுத முகவர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.உக்கிரைனிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறி பாகிஸ்தானால் பாரிய தரகை பெற்றபின் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் உண்மையில் பாகிஸ்தான் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டவை என்றும் சொல்லப்படுகிறது.

சிறீலங்கா அரசிற்கு பாகிஸ்தான் வழங்கும் தரம் குறைந்த இப்பாரிய ஆயுதங்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் நுட்பமான சிறியரக ஆயுதங்களுடன் போட்டிபோடுதல் கடினம் என அதே இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இராணுவத்தொழில்நுட்பம் சீனாவிலிருந்து அதிகம் பெறப்பட்டது என்பதும் மிகத்தரமானதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

:lol::lol::lol:

Edited by mooki

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.