Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ15 பாதையை திறக்க கோரி இன்று வாகரையில் கண்டனப்பேரணி

Featured Replies

ஏ15 பாதையை திறக்க கோரி இன்று வாகரையில் கண்டனப்பேரணி

- பண்டார வன்னியன் குசனையலஇ 29 னுநஉநஅடிநச 2006 12:16

வாகரை பள்ளிக்கூடத்தில் காலை 10:00மணியளவில் ஆரம்பமான கண்டனப் பேரணி வாகரை வைத்தியசாலையில் முடிவடைந்தது. இக்கண்டண பேரணி முடிவில் வெகுஜன அமைப்புகளின் ஒன்றிய தலைவர் திரு.நிக்சன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

கண்டன அறிக்கை வருமாறு:

வாகரையில் வாழும் மக்களின் அவசர வேண்டுகோள்

28.12.2006

தற்பொழுது வாகரைப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களும் திருகோணமலை

மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுமாக 3000 குடும்பங்களைச்சேர்ந்த 15.000 பேர்

வசித்து வருகிறோம். நாங்கள் இங்கு அனுபவித்து வரும் பிரச்சினைகளைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். அவற்றை நிவர்த்தி செய்து தருமாறு தங்களிடம்

தயவான வேண்டுகோள் விடுக்கிறோம்;;;;;;;;;;;;.

அவையாவன.

1. கடந்த இரண்டு மாதகாலமாக யு.15 பாதை மூடப்பட்டுள்ளதால் எமக்கும் பிற

பிரதேசங்களுக்குமான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது எனவே இப் பாதையை

திறந்து பேருந்து போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து தருதல்.

2. இடம்பெயர்ந்த மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்க வழிசெய்தல்.

3. சுகாதாரப்பிரச்சினை, மருத்துவ சேவை அம்புலன்ஸ் சேவை என்பவற்றை உறுதிப்படுத்தல்.

4. கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சீரற்றிருக்கும் மாணவர்களின் கல்வியை கருத்திற் கொண்டு பாடசாலைகளை நடாத்த நடவடிக்கை எடுத்தலும்,

தடைப்பட்ட 5ம் தர புலமை பரிசில், மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளை

நடாத்த ஒழுங்கு செய்தலும்.

5. மக்கள் குடியிருப்புக்கள,; பொது இடங்கள் மீதான எறிகணைத் தாக்குதல்களை நிறுத்தி

மக்களின் உயிர், சொத்துடமைகளை பாதுகாத்தல்.

6. வாகரை வைத்தியசாலை, பாடசாலை இரண்டையும் அண்டிய பிரதேசத்திற்கு பாதுகாப்பு

உத்தரவாதம் பெற்றுத்தருதல்.

7. சம்ப+ரில் திட்டமிட்ட ரீதியில் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் மக்களின் வாழ்விடங்களை அழித்து மீழ்குடியேற முடியாதவாறு “அனல் மின் நிலையம”; ஒன்றை

அமைக்கும் சதி முயற்சி நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம் எனவே

இதனை தடுத்து நிறுத்தி மக்கள் மீள் குடியேறி இயற்கையான சூழலில் வாழ வழி செய்தல்.

ஆகிய வேண்டுகோள்களை நிறைவேற்றித்தருமாறு பணிவுடன் கேட்டடுக்கொள்கின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

வாகரை வாழ் மக்கள்

பிரதிகள், (கையெழுத்து பிரதி இணைக்கப்படுகிறது)

1)அதி மேதகு ஜனாதிபதி அவர்கள்

2)செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை.

3)எதிர்க்கட்சி தலைவர்.

4)மட்டக்களப்பு அரசாங்க அதிபர்.

5)பிரதேச செயலாளர் கோ.ப.வ. வாகரை

6)தலைவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.

7)மனித உரிமைகள் ஆணைக்குழு.

8)சர்வதேச செஞ்சிலுவை சங்கம்.

9)இலங்கைக்கான இந்திய தூதுவராலயம்.

10)போர் நிறுத்த கண்காணிப்புக்குழு.

http://www.sankathi.org/news/index.php?opt...87&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.