Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அனல் மின் நிலையம்அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

Featured Replies

திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அனல் மின் நிலையம்அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

[sunday December 31 2006 08:34:18 AM GMT] [pathma]

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அனல் மின் நிலையத்தை திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு சம்பூரில் அமைப்பதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த அனல் மின் நிலைய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் இந்திய அரசு, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில்,

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பதை விரும்பவில்லை என்று தெரிவித்தள்ளது. இதற்கு பிரதான காரணியாக சம்பூருக்கும் திருகோணமலை துறைமுகத்திற்கும் இடையில் உள்ள தூரம் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சக்கி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கருத்து தெரிவிக்கையில்,

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் மேலதிக நிலங்களை இணைப்பதற்கு இலகுவானது என்றும் இந்தியா பொறியியலாளர்கள் இடத்தை பார்வையிட்டு விட்டு அரசுக்கு தெரிவிக்குமாறும் நான் கேட்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ் மக்களை மூதூர் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டும் இரகசிய அரசியல் நடவடிக்கை என்று தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ் மக்களை அவர்களின் பிரதேசத்தில் இருந்து நிரந்தரமாக வெளியெற்றும் திட்டம் எனவும், இராணுவ நடவடிக்கை மூலம் புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையும் ஆகும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி மூலம்: http://www.eelampage.com/?cn=30284

உண்மையான செய்தி புதினத்தினது. தயவுசெய்து அடையாளம் கண்டு இதில் கொப்பி செய்து போடுங்கள். நோகாமல் தளம் நடத்துகிறவர்களுக்கு தயவுசெய்து இதில் இடம் கொடாதீர்கள்.

நல்ல செய்தி இந்தியாவின் இம்முடிவு தூய நோக்கத்துடன் எடுக்கப்படிருக்குமாயின் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.