Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது: யோ.யோகி.

Featured Replies

எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது: யோ.யோகி.

எமது இனம் விடுதலையை வென்றெடுப்பது வரலாற்றில் தவிர்க்க முடியாதது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார்.

இரண்டாம் லெப். ஜீவன் பயிற்சிப் பாசறையின் 23 ஆம் அணிக்கான பயிற்சி நிறைவு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பயிற்சி ஆசிரியர் பொதிமைமலர் தலைமையில் முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர் யோ.செ.யோகி ஏற்றிவைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் தமிழன்பனும், இரண்டாம் லெப். ஜீவனின் உருவப்படத்திற்கான பொதுச்சுடரினை மணலாறு சிறப்புத் தளபதி குமரனும் ஏற்றிவைத்தனர்.

மணலாறுப் பகுதி தலைமைச் செயலகப் பொறுப்பாளர் மதுவன், தலைமைச் செயலக உதவிச்செயலர் ஜனார்த்தனன், கடல் புலிகளின் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் ரங்கன் ஆகியோர் மலர்மாலையை அணிவித்தனர்.

கொள்கை முன்னெடுப்புப் பொறுப்பாளர் இளங்கோ மலர்வணக்கத்தினை தொடங்கி வைத்தார்.

பயிற்சியின்போது நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யோ.செ.யோகி நிகழ்த்திய சிறப்புரை

நிலங்களை எதிரிகள் ஆக்கிரமிப்பதால் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது.

அப்படி எங்கும் நிகழ்ந்ததும் இல்லை. எமது விடுதலைப் போராட்டம் நிலங்களை இழந்தும் இழந்ததை விட அதிக நிலங்களை மீட்டும் பெரும் படைத்தளங்களை அழித்தும் வென்ற வரலாறு இருக்கிறது.

இது எப்போதும் நிகழும். எமது இனம் பல இடர்களை துயர்களை அனுபவிக்கும் நிலைகள் வந்தாலும் நிச்சயம் விடுதலையை வென்றெடுக்கும் அது வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு கட்டமாக இருக்கும்.

நம்பிக்கையுடன் நிச்சயம் நாம் தமிழீழத்தை அமைப்போம். அதற்காக உழைக்க வேண்டிய கடப்பாடு எம் அனைவருக்கும் உண்டு. நாங்கள் என்றும் வீழ்ந்துவிடப் போவதில்லை. நிச்சயம் எமது இலக்கை நாம் எட்டியே தீருவோம் என்றார்.

www.puthinam.com

  • தொடங்கியவர்

"தமிழீழத்தை நோக்கிய பயணம்" - ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழ்.

தமிழீழ குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் ஆரம்பத்தை "தமிழீழத்தை நோக்கிய தமது பயணத்தின் உறுதிப்பாட்டை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தும் புத்தாண்டின் முதல் முயற்சி" என ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை நேற்று தமிழீழ ஆட்பதிவு திணைக்களம் தனது முதலாவது அடையாள அட்டையை தமிழீழ தேசியத் தலைவருக்கு வழங்கி தமது செயற்பாட்டை தொடங்கியிருந்தமை தெரிந்ததே.

www.pathivu.com

தவறான தலையங்கம்! கவனிப்பார்களா புதினத்திற்கு முதுகு சொறியும் செய்தி எழுதும் பன்னாடைகள்.

"கடமையை உணர்ந்து உழைக்கும் வரை விடுதலையும் இல்லை வரலாற்றில் இடமும் இல்லை" என்பது தான் யோகியின் பேச்சில் இருந்து புலம் பெயர்ந்துள்ள கள்ளத் தோணிகள் அறிய - உணர வேண்டியது. இன்றய அவல யதார்த்தத்தை பிரதிநிதிப்படுத்தும் தலையங்கமும் அது தான்.

தாயகத்தில் உள்ளவர்களை பொறுத்தவரை களநிலமை அவர்களை பங்களிக்க வைக்கும் நிர்ப்பந்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் பங்களிக்க சொல்லி மேடையில் பேசித்தான் நடக்கும் என்றில்லை. ஆனால் புலம்பெயர்ந்தவர்களை பொறுத்தவரை அங்கு நடக்கும் அவலத்தை நேரே அனுபவிக்காதவர்கள் என்றவகையில் ஒருவகை கற்பனை உலகில் வாழுபவர்கள்.

புதினம் புலம்பெயர்ந்த கள்ளத்தோணிகளை நோக்கித்தான் நடத்தப்படுகிறது. எனவே அவர்களிற்கு ஏற்றவாறுதான் அவர்கள் எழுத வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.