Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இறுதிக் களத்தில் 3,794 வேட்பாளர்கள் - 339 பேர் வாபஸ் பெற்றனர்

Featured Replies

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இறுதிக் களத்தில் 3,794 வேட்பாளர்கள் - 339 பேர் வாபஸ் பெற்றனர்

 
 
கோப்பு படம்
கோப்பு படம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 794 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு இறுதி நாளான நேற்று 339 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டி யிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிந்தது. இறுதி நாள் நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 6 ஆயிரத்து 352 ஆண்கள், 795 பெண்கள், 4 மூன்றாம் பாலினத்தவர் என 7 ஆயிரத்து 151 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஒரு வேட்பாளர் 4 மனுக்கள் தாக்கல் செய்ய தேர்தல் விதி களில் இடம் உள்ளது. அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் 2,3,4 மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும், அக்கட்சிகளின் சார்பில் மாற்று வேட்பாளர்களும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து, ஏப்ரல் 30-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடந்தது. அப்போது, பல்வேறு காரணங்களுக்காக 3 ஆயிரத்து 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில், பாமகவின் தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்கள், பாஜ கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட் பாளரது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. பென்னாகரம் தொகுதி பாஜ வேட்பாளரின் மனு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் நிராகரிக்கப் பட்டது.

இதையடுத்து, 30-ம் தேதி நிலவரப்படி 4 ஆயிரத்து 133 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். இத்தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் மனுக்களை மே 2-ம் தேதி மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தொடர்ந்து, நேற்று காலை முதல் பலர் தங்கள் மனுக்களை வாபஸ் பெறத் தொடங்கினர். குறிப்பாக, சுயேச்சைகள் பலர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். நேற்று இரவு நிலவரப்படி 339 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றிருந்தனர். களத்தில் 3 ஆயிரத்து 472 ஆண்கள், 320 பெண்கள், 2 மூன்றாம் பாலினத் தவர் என 3 ஆயிரத்து 794 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின், உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பென்னா கரம் தொகுதியில் பாமக இளை ஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார் கோவி லில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திருச்செந்தூரில் சமக தலைவர் ஆர்.சரத்குமார் ஆகி யோர் முக்கியமானவர்கள்.

முதல்வர் ஜெயலலிதா போட்டி யிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 வேட்பாளர்கள், அடுத்ததாக அரவக்குறிச்சியில் 36, பெரம்பூரில் 33 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த பட்சமாக கூடலூர் மற்றும் மயிலாடு துறையில் 8 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் பிரச்சாரம் மே 14-ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மே 16-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. மே 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3794-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-339-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article8550178.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.