Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தேர்தல் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்களிக்க வராத மு.க.அழகிரி

 
 
alagiri_2490419h.jpg
 

திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக அக்கட்சியின் கடந்த கால ஆட்சியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அவரும் அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டு பின்னர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.

அதனால், அவர் திமுக மீது அதிருப்தியில் இருந்தார். இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் அரசி யல் செயல்பாடுகள் இன்றியும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மு.க.அழகிரி வாக் களிக்கவில்லை. அவர், அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் மதுரை சத்தியசாய் நகரில் வசிக்கின்றனர். இவர்களுக்கான வாக்கு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் உள்ளது. நேற்று இவர்கள் வாக் குச்சாவடிக்கு வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் வாக்களிக்க வரவில்லை.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/article8610465.ece

  • தொடங்கியவர்

2011-ஐ விட அதிக தமிழர்கள் 2016-ல் வாக்களித்திருக்கிறார்கள்! - வாக்குசதவிகித பின்னணி

 

600x398.jpg

'தேர்தல் ஆணையம் செய்த செலவுகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. மக்கள் இந்த தேர்தல் அரசியல், அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். வாக்கு சதவீதம் 78.02 (2011) சதவீதத்திலிருந்து 73.76 சதவீதமாக வருந்ததக்க அளவில் குறைந்துவிட்டது' என்று குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ள இத்தருணத்தில், 'இல்லையில்லை... உண்மையில் அறிவியல் பூர்வமாக ஆராய்வோமானால் வாக்கு சதவீதம் உயர்ந்துதான் இருக்கிறது' என்கிறது அந்த ஒற்றைக் குரல். அதற்கு அவர்கள் முன் வைக்கும் கணக்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படிதான் இருக்கிறது.

வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது:

அறப்போர் இயக்கம், தொடர்ந்து தமிழக அரசியலை, அரசியல்வாதிகளை கண்காணித்து, அவர்கள் செய்யும் தவறுகளை வெளியிடும் ஒரு அமைப்பு. அண்மையில் கூட அந்த அமைப்பு, நட்சத்திர வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த சொத்துக் கணக்கை ஆராய்ந்து,  அதில் உள்ள தகிடுதத்தங்களை வெளிப்படுத்தியது. அந்த அமைப்பு, வாக்காளர்களின் சதவீதத்தை ஆராய்ந்து இந்த தேர்தலில் உண்மையாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று கூறுகிறது.

முன் வைக்கப்படும் ஆதாரங்கள்

350.jpg2011 ம் ஆண்டு வாக்களித்தவர்களின் சதவீதம் 73.9. எண்ணிக்கையில் சொல்லவேண்டுமென்றால், 3.67 கோடி வாக்காளர்கள். அப்போது தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியலில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.72 கோடி. அதாவது 4.72 கோடி வாக்காளர்களில், 3.67 கோடி பேர் வாக்களித்து உள்ளார்கள்.

தமிழகத்தின் மக்கள் தொகை ஐந்து ஆண்டுக்கு 9 சதவீதம் என்ற அளவில் உயர்கிறது. இந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில், அதே அளவு சதவீதம் மக்கள் 18 வயதை பூர்த்தி செய்து வக்காளர் பட்டியலில் இடம் பிடித்து இருப்பார்கள். அப்படியானால், 5.15 கோடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் கிராம அளவில் வேலை செய்ததால், 5.79 கோடி மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்து உள்ளார்கள். அதில் 4.27 கோடி மக்கள் வாக்களித்து உள்ளார்கள். அதாவது, 26 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளார்கள். இது உண்மையில் வளர்ச்சிதான்.

இன்னும் எளிமையாக, புரிந்து கொள்ளும்படி கூற வேண்டுமென்றால், ஒரு கிராமத்தில் 100 பேர் வாக்களிக்கும் வயதுடையவர்கள் இருக்கிறார்கள் என்றால், சென்ற முறை அதில் விடுபட்டவர்கள் அதிகம். 80 பேர் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்து இருந்தார்கள். அதில் 60 பேர் மட்டுமே வாக்களித்தார்கள். அதாவது 75 சதவீதம். ஆனால், இம்முறை 100 க்கு 95 சதவீதம்பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்கள். அதில் 70 பேர் வாக்களித்து விட்டார்கள்.  அதாவது 73 சதவீதம்.

சென்ற முறை வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், இம்முறை வாக்காளர் பட்டியலில் தகுதியான பெரும்பாலானவர்கள் இடம்பிடித்துவிட்டார்கள். அதில், கணிசமானோர் வாக்களித்தும் விட்டார்கள் என்பது அறப்போர் இயக்கம் முன்வைக்கும் வாதம்.

தேர்தல் ஆணையத்தின் தோல்வி:


இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசிய போது, “வாக்காளர்கள் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் பேர் சேர்ப்பதில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்று இருந்தாலும், அதில் இடம் பெற்று இருந்த அதிகம் பேரை வாக்களிக்க வைப்பதில் தவறிவிட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்.” என்கிறார்.

அவருடன் உரையாடியதிலிருந்து....

என்னதான் வாக்காளர் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் பெயர் சேர்த்து இருந்தாலும், அதே எண்ணிக்கை வாக்கு சதவீதத்தில் பிரதிபலிக்கவில்லைதானே...?

ஆம். நாங்கள் நிறுவ வருவதும் அதுதான்.  சென்ற முறை அதிக தகுதியான வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருந்தது. ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் உழைத்ததன் பயனாக அதிகம்பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்கள். அதில் கணிசமானோர் வாக்கும் அளித்துள்ளார்கள்.

சென்னையில் குறைவான வாக்கு சதவீதத்திற்கு என்ன காரணம்...?

படித்தவர்கள், வெற்றி பெறக் கூடிய மாற்று சக்திகளை தேடுகிறார்கள். அப்படி யாரும் இல்லாதபோது வாக்களிக்க தவறிவிடுகிறார்கள். சென்னை வாக்கு சதவீதத்தையே ஆராய்ந்தீர்கள் என்றால், அதிகம் படிக்காத மக்கள் வசிக்கும் பகுதி என்று குறிப்பிடப்படும் வடசென்னையில் 63 சதவீத மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால், படித்த மக்கள் வசிக்கும் தென் சென்னையில் 57 சதவீதம்தான்.

153189.jpg



ஆனால், வெற்றி பெறக் கூடிய மாற்று சக்தியை தேடுவதே முரண்தானே... இவர்கள் வாக்களித்தால்தானே மாற்று சக்திகள் வெற்றி பெற முடியும்...?

ஆம். ஆனால் படித்த மக்கள் அப்படிதான் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் நம்பிக்கை அளிக்கும் சுயேட்சைகளுக்காவது வாக்களித்து இருக்க வேண்டும். ஆனால், அதையும் இவர்கள் செய்யவில்லை.

ஆம். யார் மீதும் நம்பிக்கை இல்லையென்றால் நோட்டாவிற்காவது வாக்களித்து இருக்கலாம்தானே...?

உண்மைதான். ஆனால், நோட்டாவை வலிமைப்படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு நோட்டாவிற்கு விழுந்தால்,  அந்தப் பகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று நோட்டாவை ஆதரிப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது நியாயமானதும் கூட.  ஆனால், நோட்டாவிற்கு அதிக அளவில் வாக்களித்தால்தான் இந்த கோரிக்கையை நாம் முன் வைக்க முடியும். எதுவும் செய்யாமல் நோட்டாவை வலிமைப்படுத்த வேண்டும் என்று மட்டும் நாம் கோருவது  எப்படி நியாயமாகும்

நாம் மாற்றத்தை விரும்புகிறோம் என்றால், ஜனநாயகத்தில் இருக்கின்ற எல்லா வழிகளையும் பயன்படுத்தி தான், நாம் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர முடியுமே அன்றி, வெறும் வெற்று கோஷங்களால் அல்ல  என்றார்.

ஆம் தானே...!

http://www.vikatan.com/news/coverstory/64276-2016-more-voters-cast-their-vote-than-2011.art

  • தொடங்கியவர்

"கருத்துக்கணிப்பு முறைகளில் வெளிப்படைத்தன்மை தேவை"

 

2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை உடன் முடிந்துவிட்ட நிலையில், தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும். அதற்கான அணுமுறைகள் என்ன. கருத்துக்கணிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள் குறித்து எமது பிபிசி செய்தியாளருடன் விரிவாகப் பேசியுள்ளார் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரும், இதற்கு முன், பல ஆண்டுகளாகக் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருபவருமான டாக்டர் சா.ராஜநாயகம்.

''தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் கருத்துக்கணிப்பு எடுப்பது தான் சரியாக இருக்கும்.

கருத்துக்கணிப்பு வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். புள்ளியல் சார்ந்த அணுகு முறை,நெறிமுறைகளைக் கையாண்டாலே போதுமானது.

ஆனால், அதை எத்தனைப் பேர் அந்த முறையைக் கையாளுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

மேலும், கருத்துக்கணிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. கருத்துக்கணிப்பு எடுப்பவர்களுக்கே ஒரு தெளிவுஇல்லை'' என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசியர் டாக்டர் சா.ராஜநாயகம்.

http://www.bbc.com/tamil/india/2016/05/160517_rajanayagam_interview_full

  • தொடங்கியவர்

தென்காசியில் 56-வது வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு

 
 
கோப்புப் படம்
கோப்புப் படம்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 56-வது வாக்குச்சாவடியில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மறுவாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மறுவாக்குப்பதிவில் வாக்களிக்க தகுதியுள்ள 972 பேர் இன்று வாக்களிக்கின்றனர்.

காலை 11 மணி நிலவரப்படி 31.48% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

மறுவாக்குப்பதிவு ஏன்?

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பொன்னமரன் நடுநிலைப்பள்ளியில் எண் 56, 57 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றிருந்தன.

இதில் 56 ஆவது வாக்குச்சாவடிக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை 972. அதில் 592 வாக்குகள் மட்டுமே பதிவாகின. ஆனால், வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் பதிவான மொத்த வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் திரையில் காட்டப்பட்டன. அப்போது 52 வாக்குகள் கூடுதலாகப் பதிவானது தெரியவந்தது.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். இந்நிலையில், தென்காசி தொகுதியின் 56-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தென்காசி 56-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

52 மாதிரி வாக்குகள் பதியப்பட்டிருந்தன. இந்த மாதிரி வாக்குகள் அழிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த சாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ம் தேதி நடந்து முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-56%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article8614543.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.