Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது!

Featured Replies

கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது!

சர்வதேச ரீதியில் கிரடிட்கார்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மூவரை தாய்லாந்து புக்கெட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடை த்த தகவலையடுத்து புக்கெட் நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 5,000இற்கும் அதிகமான கிரடிட் கார்ட்கள் மூலம் பல மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரின் வாடகைக் காரிலிருந்து 1750 கிரெடிட் கார்ட்களை கைப்பற்றியதாக புக்கெட் பொலிஸ் லெப்டினன்ட் கேர்ணல் பூன்லெட் ஒன்ங்கெலன்ட் தெரிவித்தார்.

அதோடு, இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரடிட் கார்ட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

-Media corp.Singapore-

  • தொடங்கியவர்

வங்கிக்கடன் அட்டை மோசடிகளில் இலங்கையர்கள்.!

தாய்லாந்து பாங்கொக்கில் வங்கி கடன் அட்டை credit card) மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கையர்களிமிருந்து 5340 வங்கி கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தாய்லாந்து குற்றமோசடித்தடுப்பு பொலிசார் இன்று தெரிவித்தனர்.

இலங்கைப்பிரஜைகளான ஞானகாந்தன் சிவகாந்தன் வீரசிங்கம் சிறிகாந்த், கணேசமூர்த்தி ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை தாய்லாந்து Phரமநவ நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

ஏ.ரி.எம்.வங்கி இயந்திரம் ஒன்றில் வங்கி அட்டையை செலுத்தி பணத்தை எடுத்துக்கொண்டிருந்த போது வங்கி அட்டை இயந்திரத்திற்குள் சிக்கி கொண்டதாகவும் அதை வெளியில் எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த போது இவர்கள் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் இவர்களை சோதனை செய்த போது இவர்கள் வசம் 1700 அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர்களின் வாடகைக்கார் தங்கியிருந்த விடுதி ஆகியவற்றை சோதனையிட்ட போது மொத்தம் 5350 வங்கி கடன் அட்டைகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வங்கி அட்டைகள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டில் வழங்கப்பட்டவை என்று இவைகளிலிருந்து உடடியாக 400மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறுவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் 11மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் ஏற்கனவே வங்கி இயந்திரங்களிலிருந்து பெற்றிருந்தார்கள் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

ஞானகாந்தன் சிவஞானம், வீரசிங்கம் சிறிகாந்த் ஆகியோர் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள் என்றும் இவர்கள் அடிக்கடி தாய்லாந்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்றும் மூன்றாவது நபரான கணேசமூர்த்தி லண்டனிலிருந்து வந்திருந்தார் என்றும் இவர் இலங்கை பிரஜையாக இருந்த போதிலும் லண்டனில் அகதி அந்தஸ்த்து கோரி அங்கு அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இங்கிலாந்து பிரயாண பத்திரம் (வசயஎநட னழஉரஅநவெள.) மூலம் தாய்லாந்து நாட்டிற்கு வந்திருந்தார் என்றும் தாய்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஏற்கனவே பலதடவை தாய்லாந்திற்கு வந்து வங்கி கடன் அட்டை மோசடியை செய்ததாகவும் இவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆகக்குறைந்தது 15வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தாய்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வங்கி கடன் அட்டை மோசடிகளில் இலங்கையர்கள் பெருமளவில் சம்பந்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. லண்டன் சிங்கப்பூர், தாய்லாந்து கனடா இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெறும் வங்கி கடன் அட்டை மோசடிகளில் இலங்கையர்களும் பெருமளவில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

லண்டன் சிங்கப்பூர் தாய்லாந்து கனடா, இந்தியா, சுவிஸ்லாந்து, உட்பட பல நாடுகளில் வங்கிக்கடன் அட்டை மோசடி தொடர்பாக இலங்கையர்கள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். லண்டனிலேயே இந்த மோசடி பெருமளவில் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் ஓக்டோபர் மாதத்தில் இந்தியா சென்னை நகரில் வங்கிக்கடன் அட்டை மோசடி தொடர்பாக இலங்கைச்சேர்ந்த எஸ்.காந்தன்(32வயது) கே.பாஸ்கரன் 24வயது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தனியார் வங்கி இயந்திரம் ஒன்றில் பணமோசடி செய்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

-Tamilnews24.com-

எப்படி இவ்வளவு கார்ட் கிடைத்தது. லண்டனில் தமிழ் மக்களின் கார்ட்களாகவும் இருக்கலாம்

கவனம்

அடியுங்கோ அடியுங்கோ அடிச்சுஇலங்கை தமிழனுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் வெளிநாட்ட்லில கெடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.