Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

69% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு ஆபத்து - தமிழ்நாட்டில்

இட ஒதுக்கீடு 7 members have voted

  1. 1. இட ஒதுக்கீடு தேவை?

    • ஆம்
      4
    • இல்லை
      3
  2. 2. இட ஒதுக்கீடு தேவையில்லையெனில், அனைவருக்குமான கல்வி வாய்ப்புகள் சீரான முறையில் அனைவருக்கு கிடைகிறதா

    • சமசீரான கல்வி வாய்ப்பு கிடைகிறது
      0
    • சமசீரான கல்வி வாய்ப்பு சிடைக்கவில்லை
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

புதுடெல்லி

அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் 1973-ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெற்ற சட்டங்களையும் ஆய்வு செய்யும் உரிமை நீதி மன்றத்திற்க்கு உண்டு என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசு கொண்டுவந்த 69% இட ஒதுக்கீடு உட்பட எராளமான சட்டங்களின்எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் மூலம் நீதி மன்றத்துக்கும், நாடளு மன்றத்திகும் இடையே மோதல் நிலையும் உருவாகி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இட ஒதுக்கீடு தேவை என்பதே என் கருத்து

  • தொடங்கியவர்

இட ஒதுக்கீடு குறித்து சுப்பீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பின் மூலம் மத்திய அரசின் இரட்டை நாடகம் அம்பலம் ஆகிவிட்டதுஎன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

" உச்ச நீதி மன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையின் தன்மை அதில் உள்ளடக்கிய சட்டங்களை நீதிமன்ற பரிசீலனைக்குஎடுத்துக்கொள்வ

இந்த இட ஒதுக்கீடு யாருக்கு, எதற்கு ? யாராவது புரிய வைப்பீர்களா ?

Edited by lisa01

  • தொடங்கியவர்

LISA01,

இட ஒதுக்கீடு என்பது,

இங்கு சில நூற்றாண்டுகளாக வருணாசிரம நடைமுறையை மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் சமூகத்தின் ஒரு பிரிவினர்(பிராமனன்- ஆரியர் என்போர் (மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து குடியே ) எற்படுத்தி, பிறப்பால் தாமே உயர்ந்தவர் என்றும் கல்வி கற்பதும், கற்ப்பிப்பதும் தமக்கு உரியது என்றும் ஏனையோர் அவரவர் குல தொழில்களை செய்ய வேண்டும் என்றும் கடவுளின் பெயரால் கருத்து பரப்பி ஏனையோரை கல்வியரிவு பெரமுடியாமல் தடுத்து விட்டனர். இவ்வாறு காலம் காலமாக பிற்படுத்த பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்க்கு அவர்களின் விகிதாச்சார அளவுபடி அனைத்து துரைகளிலும் வாய்ப்பளிப்பதற்க்கு இட ஒதுக்கீடு ஏற்ப்படுத்தபட்டது. இவ்வாறு இட ஒதுக்கீடு செய்தும் பிராமணர்கள் இன்றும் அதிக அளவு அதிகாரம் கொண்ட துறைகளில் கோலோச்சுவதால் வெவ்வேறு வடிவங்களில் அதற்க்கு எதிரான இன்றும் ஈடுபடுகின்றனர். - தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்துகருணாநிதி

ராஜினாமா செய்ய ஜெயலலிதா கோரிக்கை

ஜனவரி 12, 2007

சென்னை: தமிழக இட ஒதுக்கீட்டு சட்டத்தை பாதுகாக்கத் தவறிய முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இந்திய அரசியல் அமைப்பின் 9வது அட்டவணையில் 1973ம் ஆண்டுக்குப் பின் சேர்க்கப்பட்ட அனைத்து சட்டங்கள், சட்ட திருத்தங்களையும் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடிவும் என உச்ச நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

jaya070112qm2.jpg

தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தையும் மறு ஆய்வு செய்யவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு எனவும் அறிவித்துள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதை விசாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எனது முயற்சியால் தான் 1994ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான 69 இட ஒதுக்கீடு சட்டம் உருவாக்கப்பட்டது. அது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட எனது அரசே காரணம்.

இப்போது அந்த இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 9வது அட்டவணை குறித்த வழக்கு விசாரணை நடந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜராக வேண்டிய அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து உருவாகி வருகிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே நான் எச்சரித்தேன். இந்த விஷயத்தில் மத்திய அரசின் இரட்டை வேடத்துக்கு கருணாநிதியும் ஆதரவாக இருந்தார். வழக்கை உறுதியாக நடத்தாமல் மத்திய அரசும் கருணாநிதியும் ஏமாற்றிவிட்டனர்.

50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது, பொருளாதாரரீதியில் வசதி படைத்தவர்களை இட ஒதுக்கிட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் இந்த ஆண்டில் இருந்தே கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முழுமையான இட ஒதுக்கீட்டை அமலாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது பழங்கதையாகிவிட்டது.

தங்களுக்கு வாக்களித்த மக்களை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நாடகம் போட்டு நன்றாக ஏமாற்றிவிட்டது. கருணாநிதியின் அலட்சியப் போக்காலும் மத்திய அரசின் இரட்டை வேடத்தாலும் இட ஒதுக்கீடு சட்டமே ஆபத்துக்குள்ளாகிவிட்டது. இந்த விஷயத்தில் தமிழர்களை வஞ்சித்த, முதுகில் குத்திய கருணாநிதி அதற்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தமிழர்களை ஏமாற்றிய கருணாநிதியை பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் தூண் அறிஞர் அண்ணாவின் ஆன்மாக்கள் நிச்சயம் மன்னிக்காது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

http://thatstamil.oneindia.in/news/2007/01/12/jaya.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.