Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள்.

இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள்.

சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத்தை பார்த்த பிறருக்கும் ஆசை ஏற்பட்டது. அவர்கள் கிட்னி புரோக்கர்களை நேரிலேயே அணுகி தாங்களும் கிட்னி கொடுக்க தயார் என்று முன் வந்து இருக்கிறார்கள்.

சுனாமி பாதித்து எர்ணாவூர் பகுதிக்கு வந்த பின்பும் அவர்களை புரோக்கர்கள் பின் தொடர்ந்து வந்து ஆசை காட்டி கிட்னி பெற்று இருக்கிறார்கள்.

செல்வி (35) என்ற பெண் மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றதாக கூறினாள். அவள் கூறியதாவது:-

எனது கணவர் செல்லப்பா. பெட்டி கடை வைத்திருக்கிறார். அவரது வருமானம் போதுமானதாக இல்லை. இந்த நிலையில் மகள் திருமண செலவுக்கு பணம் இல்லாமல் வருத்ததுடன் இருந்தோம்.

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் பலர் `கிட்னி' கொடுத்து பணம் பெற்று இருந்தனர். புரோக்கர் என்னிடமும் வந்து கேட்டார். முதலில் தயங்கினேன். கடைசியில் மகளை கரை சேர்க்க வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். புரோக்கர் தந்த ரூ.50 ஆயிரத்தை வைத்து திருமணத்தை நடத்தினேன்.

கிட்னியை விற்று நடத்தி வைத்த திருமணமும் நிலைக்கவில்லை. மகள் கணவருடன் வாழாமல் வாழா வெட்டியாக என் வீட்டுக்கு வந்து விட்டாள். இப்போது அவளையும் சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. நான் கிட்னி ஆபரேஷன் செய்ததால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை. முன்னை விட இப்போது மேலும் கஷ்டப்படுகிறேன்.

இவ்வாறு ராணி கண்ணீர் மல்க கூறினாள்.

இது போல், 5 குழந்தைகளின் தாயான ராணி (35), ரூ.50 ஆயிரத்துக்கு கிட்னி விற்றாள். கணவருக்கு காச நோய் இருப்பதால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் 5 குழந்தைகளையும், நோய் வாய்ப்பட்ட கணவரையும், காப்பாற்ற `கிட்னி' விற்றதாக ராணி கூறினாள்.

ரஜினா (25) என்ற பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு புரோக்கர் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு கிட்னி விற்று இருக்கிறாள். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே கணவருக்கு வருமானம் இல்லாததால் குழந்தைகளை படிக்க வைக்கவும், திருமணம் செய்யவும், `கிட்னி' விற்றோம் என்று தெரிவித்தனர்.

நன்றி-மாலைமலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரூ. 50 ஆயிரத்துக்கு வாங்கி லட்சக்கணக்கில் விற்றனர்

எர்ணாவூரில் மீனவ பெண்களிடம் கிட்னி புரோக்கர்கள் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை விலை பேசியுள்ளனர். இதற்கு ஒப்புக்கொள்ளும் பெண்களே புரோக்கர்கள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கையெழுத்து வாங்கி கொள்வார்கள்.

கிட்னி தேவைப்படும் நோயாளிகளுக்கு மீனவ பெண்களின் கிட்னியை பலலட்சம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஒரு கிட்னி ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை விலை பேசப்பட்டுள்ளது. வசதிபடைத்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு நோயாளிகள் என்றால் இந்த தொகை இன்னும் அதிகரிக்கும். ஆனால் கிட்னி கொடுத்த பெண்களுக்கு ஆயிரக்கணக்கில்தான் பணம் கிடைக்கும்.

எர்ணாவூர் தவிர கொருக்கு பேட்டை, போஜராஜநகர், மூலகொத்தம், பேசின் பிரிட்ஜ், காசிமேடு பகுதிகளிலும் ஏராளமான தொழிலாளர்கள் `கிட்னி' விற்று இருக்கிறார்கள்.

`கிட்னி' விற்ற தொழிலாளர் கள் பலர் பணம் தீர்ந்த பின்பு வேலைக்கு செல்ல முடியு மாலும் உடல் நலம்இன்றியும் அவதிப்படுகிறார்கள். புரோக்கர்களின் ஆசை வார்த்தையை நம்பி மோசம் போய்விட்டோம் என்று பாதிக்கப்பட்டவர்கள் வருத்தத் துடன் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் `கிட்னி'யை விற்கும் மீனவ பெண்கள்: அதிகாரிகள் நேரில் விசாரணை

சென்னை, ஜன. 13-

சென்னையை அடுத்த எண்ணூர் எர்ணாவூரில் சுனாமி குடியிருப்புகள் உள்ளன. சுனாமியின் போது வீடுகளை இழந்த மீனவர்கள் இங்கு குடி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வகிக்கிறது. இங்கு வசிக்கும் மீனவர்கள் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாததாலும், வறுமையின் கொடுமையாலும் பல்வேறு இன்னலுக்கு ஆளா கிறார்கள்.

வறுமையின் கொடுமை காரணமாக மீனவ பெண்கள் சிலர் `கிட்னி' யை ரூ.40 ஆயி ரத்துக்கு விற்று இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பெண் கள் கிட்னி விற்று இருப்பதாக தெரிய வருகிறது. கிட்னி விற்ற பெண்கள் அனைவருமே 18 வயது முதல் 30 வயதுக்குட் பட்டவர்கள். இன்னும் பலர் கிட்னியை விற்க முன் வந்துள்ளனர்.

புரோக்கர்கள் மூலம் சென்னை, மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு இவர்கள் கிட்னி விற்றுள்ளனர். எர்ணாவூர் சுனாமி குடியி ருப்பை சேர்ந்த கல்பணா என்ற 18 வயது பெண் ரூ.40 ஆயிரத்துக்கு தனது கிட்னியை விற்று இருக்கிறாள்.

இவளுக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருக்கு சரியான வருமானம் இல்லாததால் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கல்பனா ரூ.40 ஆயிரத்துக்கு கிட்னியை விற்றாள். மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கிட்னி ஆபரேஷன் நடந்தது.

கிட்னி ஆபரேஷன் செய்ததால் 6 மாதத்துக்கு கணவருடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. கடினமான வேலை செய்யக்கூடாது என டாக்டர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

வீடு திரும்பியதும் கல்பனா தனது கணவரிடம் இதை தெரிவித்தாள். அவர் மனைவி வாங்கி வந்த ரூ.40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு துரத்தி விட்டார். கல்பனா தனது 2 குழந்தைகளுடன் காசி மேட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டாள்.

மகளின் வேதனை குறித்து தாய் சரோஜா கூறியதாவது:-

சிறுவயதிலேயே பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு கிட்னியை ரூ.40 ஆயிரத்துக்கு கொடுத்து இருக்கிறாள். அவளுக்கு கிட்னி ஆபரேஷன் செய்ததால் இன்னும் வலி இருக்கிறது. அவள் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அதையும் மீறி கணவர் தொந் தரவு செய்து இருக்கிறார். அவள் மறுத்ததால் பணத்தை பறித்துக் கொண்டு கணவர் துரத்தி அனுப்பி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திலகவதி என்ற 30 வயது பெண் ரூ.40 ஆயிரத்துக்கு கிட்னி விற்று இருக்கிறாள். இவளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திலகவதி கூறுகையில், எனக்கு பணம் தேவைப்பட்டதால் கிட்னி விற்றேன். சுனாமியால் இடம் பெயர்ந்து கடலுக்கு அப்பால் உள்ள குடியிருப்புக்கு வந்து விட்டதால் கணவரால் மீன் பிடிக்க செல்லவில்லை என்றாள்.

வறுமையை பயன்படுத்தி சிலர் பெண்களை ஏமாற்றி `கிட்னி'யை அபகரிப்பதாக எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு மீனவர் நல சங்க தலைவர் மரியசெல்வம் குற்றம் சாட்டினார். `கிட்னி' விலை பேசுவதற்காக ஏஜெண்டுகள் பலர் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகிறார்கள். அவர்கள் பெண்களை ஏமாற்றி சம்மதிக்க வைப்பதாக புகார் எழுந்துள்ளது.

`கிட்னி'ஆபரேஷன் செய்த ஆஸ்பத்திரிகளின் பெயரை வெளியிட அவர்கள் மறுத்து விட்டார்கள்.

கிட்னியை தானமாக கொடுக்க முடியாதவர்கள் தலைமுடியை விற்று இருக்கும் பரிதாபமான தகவலும் வெளியாகி உள்ளது. பல பெண்கள் ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை தலைமுடி விற்று இருக்கிறார்கள். இந்த குடியிருப்பில் வசிக்கும் பல பெண்கள் மொட்டை அடித்து தலையை முக்காடு போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

மேகலா என்ற வயதான பெண் கிட்னி விற்க முன் வந்தாள். அவள் ஏஜெண்டை அணுகிய போது அவளுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதால் கிட்னி பொருந்தாது என்று கூறி விட்டனர். இதனால் மேகலா தனது கடனை அடைக்க தலை முடியை ரூ.500-க்கு விற்று இருப்பதாக கூறினாள். இவள் மறுபடியும் விற்பதற்காக முடி எப்போது வளரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறாள்.

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவர்களால் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. அவர்கள் அங்கிருந்து காசிமேடு வந்து தான் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டும். இதற்கு ஆட்டோ போன்ற வாகன செலவு ரூ.30 பிடிக்கிறது.

இதனால் பலர் மீன் பிடிக்க செல்வதில்லை. மீன் விற்பனை போன்ற மற்ற தொழிலிலும் போதிய வருமானம் இல்லை. வறுமையின் பிடியில் தவிக்கும் அவர்கள் கடன் வாங்கி குடும் பம் நடத்துகிறார்கள்.

அந்த கடனை அடைக்க அவர்கள் `கிட்னி' போன்ற உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக சமூக சேவை நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன.

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் கிட்னி, மற்றும் தலைமுடியை விற்பது பற்றிய தகவல் வெளியானதும் அரசு விசாரணைக்கு உத்தர விட்டது.

பொன்னேரி உதவி கலெக்டர் சங்கீதா, அம்பத்தூர் தாசில்தார் தீனதயாளன், மாதவரம் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று காலை எர்ணாவூர் விரைந்தனர். அங்கு கிட்னி விற்ற பெண்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள்.

எதற்காக யாருக்கு கிட்னி விற்கிறீர்கள். எவ்வளவு தொகை கிடைத்தது, எந்த ஆஸ்பத்திரிக்கு கொடுத்தீர்கள், ஏஜெண்டுகள் யார்- யார்? என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.

கிட்னி கொடுத்த பெண்களின் இடுப்பில் 1 அடி நீளத்துக்கு ஆபரேஷன் தழும்பு இருந்தது. அதிகாரிகள் அவற்றை பார்வையிட்டனர்.

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் பெரும்பாலான மீனவ பெண்கள் இது போல் கிட்னி விற்று இருப்பது அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

மாலைமலர்.கொம்

என்ன கொடுமையப்பா இது?

கொடுமை கொடுமை வறுமை கொடுமை-அதனிலும் கொடுமை இளமையில் வறுமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை:சென்னையில் இதுவரை மீனவ பெண்கள் 30 பேர் சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ள விவரம் ஆதாரபூர்வமாக வெளிவந்துள்ளது. தஞ்சாவூர் பகுதிகளிலும் சிறுநீரகம் விற்பனை நடந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழக மீனவ பெண்களிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தை இலங்கைவாசிகளுக்கு அதிக பணத்துக்கு விற்ற புரோக்கர்களை பிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறங்கியுள்ளனர்.சென்னை எண்ணுõரில் அமைக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கியுள்ளனர். குடும்பத்தை காப்பாற்ற வசதியில்லாமல் சிரமப்பட்ட மீனவ பெண்களுக்கு சிறுநீரக புரோக்கர்கள் வலை வீசினர். கணவரின் ஒத்துழைப்புடன் சிறுநீரக கொடுக்க தயாரான பெண்களிடம், ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை புரோக்கர்கள் பேரம் பேசினர். சென்னையில் சிறுநீரக கொடுக்க தயாரான பெண்களிடம் முப்பதாயிரம் ரூபாய் மட்டும் புரோக்கர்கள் கொடுத்துள்ளனர்.

மீதித் தொகையை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். பணத்துக்காக சிறுநீரகம் கொடுக்க முன்வந்த பெண்கள் சென்னை, மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை மூலம் பெண்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை நபர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சென்னை, திருச்சி, மதுரையைச் சேர்ந்த புரோக்கர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் மல்லிகா(36). சிறுநீரகத்தை விற்பனை செய்து பணம் கிடைக்காமல் ஏமாந்த இவர் சென்னை கமிஷனர் லத்திகா சரணிடம் நேற்று புகார் கொடுத்தார். புகார் கொடுத்த மல்லிகா நிருபர்களிடம் கூறியதாவது: எனது கணவர் சிவா(37) இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் வருமானத்தில் இரண்டு குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் சிரமப்பட்டோம். அந்த சூழ்நிலையில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிறுநீரக புரோக்கர் ராஜி என்னை தொடர்பு கொண்டார். சிறுநீரகத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்.

எனது கணவரின் சம்மதத்துடன் சிறுநீரகத்தை கொடுக்க சம்மதித்தேன். கணவருடன் திருச்சிக்கு சென்றேன். அங்குள்ள புரோக்கர் ஒருவர் என்னை மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். மதுரையில் உள்ள புரோக்கர் எனது பெயரை சிவகாமி என மாற்றி போலியாக ரேஷன் கார்டு தயாரித்தார். இருபது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை மூலம் எனது சிறுநீரகத்தை எடுத்து இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு பொருத்தினர். எனது உடம்பில் இருந்து சிறுநீரகத்தை எடுத்த பின்னர் புரோக்கர் முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மீதித் தொகையை சென்னை சென்ற பின்னர் தருவதாக கூறினார். இரண்டு ஆண்டாக பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இவ்வாறு மல்லிகா கூறினார். சென்னையை அடுத்து தஞ்சாவூரை அடுத்த திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதிகளிலும் சிறுநீரக விற்பனை நடந்து வருவதாக சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள சிறுநீரக புரோக்கர்கள் யார், யார் என்ற பட்டியலை எடுத்து, அவர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

சிறுநீரக விற்பனை கமிஷனர் பேட்டி:சென்னையில் உள்ள ஏழை பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறி சிறுநீரகம் பறிக்கப்பட்டுள்ளது பற்றி சென்னை கமிஷனர் லத்திகா சரண் கூறுகையில், ""சென்னை, மதுரை மருத்துவமனைகளில் சிறுநீரகம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை துவக்கத்தில் சென்னை போலீசார் விசாரித்தனர். இம்மோசடி பிற மாவட்டங்களில் நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. சிறுநீரக புரோக்கர்கள் மாநில அளவில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதனால், மாநில குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இவ்வழக்கு (சி.பி.சி.ஐ.டி.,) மாற்றப்பட்டுள்ளது,'' என்றார்.

தினமலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.