Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு'

Featured Replies

'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு'

[வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்]

விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு நிலவரத்தை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

"கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் சில தொண்டர் அமைப்புக்கள் தொடர்பாகத் தகவல்களை நாம் வெளியிட்டோம். அப்போது அது சிலருக்குக் கசப்பாக இருந்தது. அதேவேளையில் எமது குற்றச்சாட்டுக்கள் தவறானவை எனவும் சொல்லப்பட்டது. நாம் அவ்வாறு கூறியது பழிவாங்கும் அல்லது இடையூறு செய்யும் நோக்கத்துடன் அல்ல. இப்போது அந்த நான்கு நிறுவனங்களும் தவறு இழைத்திருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றத

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.

இலங்கையில் இயங்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு தெரிந்தோ தெரியாமலோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ உதவிகளை வழங்கிவருகின்றன என்பது இன்று சந்தேகத்துக்க இடமின்றி நிரூபிக்கப்ட்டுள்ளதாக அமைச்சரும் தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

புலிகளுக்கு இரகசியமாக உதவும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் முயன்ற வேளையில் அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் பல்வேறு ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டன. பொது மக்களுக்கு உதவும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு அநீதி இழைப்பதாகக் குரல் எழுப்பப்பட்டது.

ஆனால்; அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது அரசு சுமத்திய குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் புலிகளின் முக்கிய முகாம்களைக் கைப்பற்றிய படையினர் அங்கிருந்து மீட்ட வாகனங்கள், மின் உற்பத்தி இயந்திரங்கள், தளபாடங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் இதற்கு தகுந்த ஆதாரங்களாகும்.

சட்டவிரோத ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் என்பவற்றிலும் புலிகள் ஈடுபட்டுவருதாக அரசாங்கம் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வந்தது. கிழக்கில் கைப்பற்றப்பட்ட புலிகளின் முகாம்களில் விற்பனைக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெரும் தொகையான கஞ்சா இதனையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

எனவே இவ்வாறு சர்வதேச சட்;டங்களை மீறும் வகையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக இராஜதந்திர ரீதியில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-Sankathi-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.