Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு

Featured Replies

ரூ.570 கோடி சிக்கிய விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு

 

 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அதாவது கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது. கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) சொந்தமானது என அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பான ஆவணங்கள் காட்டப்பட்டதால் பிடிபட்ட பணம் ரிசர்வ் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.

இதனிடையே ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதன்பேரில் முதல்கட்ட விசாரணையை முடித்த பிறகு சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/ரூ570-கோடி-சிக்கிய-விவகாரம்-சிபிஐ-வழக்குப்-பதிவு/article8960258.ece?homepage=true

  • தொடங்கியவர்

ரூ.570 கோடி கன்டெய்னர் பணத்துக்காக போலி ஆவணம் தயாரித்தார்களா?' -வங்கி அதிகாரிகளைக் குறிவைத்த சி.பி.ஐ.

sbi1.jpg

திருப்பூர் அருகே கன்டெய்னரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் பணம் குறித்த சர்ச்சையில் சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துவிட்டது. ' 18 மணிநேரம் கழித்து போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டனவா? இதற்கு வங்கி அதிகாரிகள் துணை போனார்களா என்பதுதான் வழக்கின் மிக முக்கியமான பகுதி' என்கின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மே 13-ம் தேதி அன்று,  திருப்பூர் அருகில் மூன்று கன்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின், பறக்கும் படை. ரெய்டின் போது கன்டெய்னர் லாரிகளில் வந்தவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்தது, 18 மணி நேரம் கடந்தும் பணத்திற்கு யாரும் உரிமை கோராதது என தொடக்கம் முதலே கன்டெய்னர் விவகாரத்தில் சந்தேகம் வலுத்து வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்தார் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன். நீதிமன்றமும், ' கன்டெய்னர் விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, சி.பி.ஐ விசாரணை நடத்தலாம்' என உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று கன்டெய்னர் பணம் தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ.
 
sbi2.jpg'எங்கள் வங்கியின் கிளையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பணம் இது' என கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறினாலும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.

இதுகுறித்து நம்மிடம் பேசிய புலனாய்வு அதிகாரி ஒருவர், " பணம் வங்கிக்குச் சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்தாலும், கன்டெய்னர் கையாளப்பட்ட விதம் சட்டத்திற்கு விரோதமானது. 570 கோடி ரூபாய் தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வந்து தருவதற்கே 24 மணி நேரத்தை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

மீண்டும் பணம் வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, எவ்வளவு பணம் இருந்தது என யார் முன்னிலையிலும் எண்ணப்படவில்லை. அதிலும், நள்ளிரவில் பணம் அனுப்பப்பட்டதன் மர்மம்; ஒரு கன்டெய்னருக்குப் பதிலாக மூன்று கன்டெய்னர்களைப் பயன்படுத்தியதற்கான காரணம்; கோயம்புத்தூரில் இருந்து பணத்தை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய அவசியம்; பணம் கொண்டு செல்லப்படும் தகவலை மாவட்ட காவல்துறை அதிகாரிக்குத் தெரியப்படுத்தப்படாதது; முதலில் விசாகப்பட்டினத்திற்குப் பணம் போவதாகத் தெரிவித்த அதிகாரிகள், பின்னர் விஜயவாடாவுக்குச் செல்ல இருந்தது என மாற்றிச் சொன்னது என கன்டெய்னர் குறித்த சந்தேகங்கள் அப்படியேதான் இருக்கின்றன.

sbi3.jpgகோயம்புத்தூரில் இருந்து சோதனைச் சாவடிகளின் கண்களில் படாமல், கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவுக்குள் நுழைவதற்கு கன்டெய்னர் லாரி டிரைவர்களுக்கு ரூட் சொல்லப்பட்டிருக்கிறது. நான்கு வழி புறவழிச் சாலை வழியாக செல்லாமல், குறுக்கு வழியில் பணம் சென்றதே அரசியல்கட்சிகளின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. விசாகப்பட்டினம் முகவரியில் உள்ள அந்த லாரிகளில் போலியான நம்பர் பிளேட்டுகள் (AP 13 X 5204, AP 13 X 8650, AP 13 X 5203) பொருத்தப்பட்டுள்ளன. சட்டரீதியாகக் கொண்டு செல்லப்படும் பணத்திற்கு, கள்ளத்தனமான நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருப்பது சட்டவிரோதமானது.

வாகனம் பிடிபட்டதும், ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதற்கு ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகள் சிலர் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, பணம் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வாய்மொழி உத்தரவின் அடிப்படையில் கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பது மிக முக்கியமான கேள்வி. கன்டெய்னர் தொடர்பாக வெளியான செய்திகள், ஸ்டேட் வங்கி கொடுத்த ஆதாரம், வாகனத்தின் உரிமையாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலதரப்பிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார் விரிவாக.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம்.

 

" பணம் கொண்டு செல்லப்பட்டதில் சரியான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றுதான் சொல்லி வருகிறோம். பத்து கோடிக்கு மேல் பணம் சென்றாலே வங்கியின் ஏதாவது ஒரு அதிகாரி உடன் செல்ல வேண்டும். ஆனால் 570 கோடி ரூபாய்க்கு, ஒரு சாதாரண கிளார்க் அந்தஸ்தில் உள்ள ஊழியர் மட்டுமே உடன் சென்றிருக்கிறார். அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் சர்ச்சைக்கு மூல காரணம். கன்டெய்னரைக் காப்பாற்ற, வங்கி உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி கோவை ஸ்டேட் வங்கி அதிகாரிகள் செயல்பட்டார்களா என்பதெல்லாம் சி.பி.ஐ விசாரணையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். வரும்காலங்களில் வங்கி அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிக முக்கியமான வழக்கு இது" என்றார் தெளிவாக.

http://www.vikatan.com/news/tamilnadu/66974-did-bank-officials-prepared-fake-document-on-rs57.art

  • தொடங்கியவர்
gallerye_235218169_1581314.jpg

 

  • gallerye_222914859_1581314.jpg

 

தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் பற்றிய முதல்கட்ட விசாரணையை, மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., துவக்கி உள்ளது. பணத்துடன் பிடிபட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி என்றும், தகவல் தெரிவித்துள்ளது.

விரட்டி பிடித்தனர்

சட்டசபை தேர்தல் மே, 16ல் நடந்தது. அதற்கு, இரு நாட்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் - குன்னத்துார் புறவழிச் சாலையில், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படையினர், நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று கன்டெய்னர் லாரிகள் நிற்காமல் சென்றன; அவற்றை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்ததுடன், அவற்றில் இருந்த, 570 கோடி ரூபாயை கைப்பற்றினர்.விசாரணையில், 'அது, கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள அதே வங்கியின் கரன்சி வினியோக மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது. அதை, எஸ்.பி.ஐ., அதிகாரிகளும் மறுநாள் உறுதிப்படுத்தினர். பின், இந்திய ரிசர்வ் வங்கியும், 'அந்த பணம்,எஸ்.பி.ஐ., வங்கிக்கு உரியது' என,

தெரிவித்தது.
 

ஹவாலா பணமா?


எனினும், அந்த கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, அந்த பணத்தை வைத்திருக்க, தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.இதற்கிடையில் எதிர்க்கட்சிகள், 'அது,வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம்' என, பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் முடிவுகள் வெளியான பின், அந்த தொகையை, கோவையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியிடம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து.எனினும், அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், 'பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போலியானவை. அது, தேர்தலுக்காக கடத்தப்பட்ட ஹவாலா பணம். எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பூர்வாங்க முகாந்திரம் இருந்தால், முதல் கட்ட விசாரணை நடத்தலாம்' என, சி.பி.ஐ.,க்கு

 

ஜூலை மாத துவக்கத்தில் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையின் போது, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பதில் மனுவில், 'அது, வங்கி பணம் தான்' என, விளக்கம்அளிக்கப்பட்டது.
 

சி.பி.ஐ.விசாரணை


இந்நிலையில், '570 கோடி ரூபாய் விவகாரத்தில், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும்' எனக் கோரி, டில்லியில், சி.பி.ஐ., இயக்குனரிடம், டி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த வாரத்தில் மனு அளித்தார். இதையடுத்து, அது பற்றிய முதல் கட்ட விசாரணையை, சி.பி.ஐ., அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கண்காணிப்புப் படை சோதனையில், கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் மாறியிருந்தது உண்மை. இவ்வழக்கில் வங்கியையோ, வேறு அரசு துறையையோ குறிப்பிடாமல், முதல் கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். எனினும், இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. பூர்வாங்க விசாரணை முடிந்த பின்னரே, அது பற்றி முடிவெடுப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

அன்றே சொன்னது தினமலர்


கோவையில்இருந்து திருப்பூர் வழியாக ரூ. 570 கோடி கொண்டு சென்ற கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என்ற சிறப்பு செய்தியை கடந்த மே 18-ம் தேதியிட்ட ‛‛ தினமலர் '' நாளிதழில் செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து வங்கிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் லாரிகளி்ன் பதிவெண்கள் போலி என சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

-நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1581314

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.