Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி...

Featured Replies

கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி...
கொடுத்தவனே பறித்துக்கொண்டான்டி...
ஒருவர் அன்பாகக் கொடுப்பதை நாம் எப்பொழுதுமே அவர் நினைவாகப் பத்திரமாகப் பேணி வைப்பது வழமை. பொருளின் பெறுமதியை விட . அதை அன்போடு கொடுத்தவர்தான் எமக்கு முக்கியமானதாகின்றது.
 
அதுவே எதிரியாகி விட்டால் கதை வேறு. தந்ததைத் திருப்பிக் கொடுப்பதில்தான் எம் கவனம் இருக்கும்.  நல்ல முறையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்துஇ  தந்ததிற்கு மேலாக  முடிந்தால் இரண்டு மடங்காக திருப்பிக் கொடுக்கும்போதுதான் மனம் ஆறுதலடையும்.
 
இலங்கை  விஜயம் செய்த ஆஸ்திரேலிய  கிரிக்கட் ஆட்டக்காரர்கள் தமது விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்கள்.
இலங்கை கிரிக்கட் அணியைப் பற்றி பல விமர்சனங்கள் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இவர்கள் இலங்கைக்கு வந்தவர்கள். தோல்வி மேல் தோல்வியாக இலங்கை அணி சம்பாதித்துக் கொண்டிருந்தபோது வந்தது இந்த அணி. எதிரணியரையெல்லாம் மண்கவ்வ வைத்து உலகதரத்தில் முதலாம் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஜாம்பவான்களாக இலங்கையில் வந்து குதித்தது ஆஸ்திரேலிய அணி.
 
வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டு இந்த வடு ஆறாமல் களத்தில் குதித்த இலங்கை அணியை கிரிக்கட் ரசிகர்கள் அட பாவமே என்ற கழிவிரக்கம் கலந்த பார்வையோடுதான் பார்த்தார்கள். தங்கள் மண்ணில் முத்தையா முரளிதரன் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி அளித்தார் என்ற அமளி இன்னொரு பக்கம். 
1474013103_250203.3.jpg
முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பித்து இலங்கை அணி 117 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்த நிலையில் வாலைச் சுருட்டிக்கொண்டு பழைய குருடி கதவைத் திறவடி என்றாகியபோது அட கடவுளே என்று தலையில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தவர்கள் பலர்.
 
ஆனால் தொடர்ந்து நடந்த கதையோ அதிசயக் கதை...வியப்பின் உச்சத்தைத் தொடவைத்த கதை..பழுத்த அனுபவசாலியான ஹேரத்தின் சுழற்பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் இவர்கள் எடுத்த ஓட்டம் 161 மாத்திரமே. 9 விக்கட்டுகளை வீழ்த்தினார் இலங்கை அணியின் ஹேரத்.
 
இரண்டாவது டெஸ்ட் ஆரம்பமாயி;ற்று. முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுடன் ஆஸ்திரேலியா சுருண்டபோதுஇ ஆரம்பித்த கதை தொடர்கின்றது என்று பலருக்கும் புரிந்தது. இந்தத் தடவை எதிரணியைக் கிலிகொள்ளச் செய்தவர் பெரேரா என்ற  இலங்கை சுழல்பந்துவீச்சாளர். 10 விக்கட்டுகளை வீழ்த்தி தன் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார் இவர்.
 
மூன்றாவது டெஸ்டில் தமது முதல் இன்னிங்ஸில் இரு அணியினருமே நன்றாக துடுப்பெடுத்தாடினார்கள். இலங்கை அணியில் இருவர் சதமெடுக்கஇ ஆஸ்திரேலிய அணியிலும் இருவர் சதமெடுத்தார்கள். வருணபகவான் கையில் ஆட்டமுடிவோ என்று பலரும் நினைத்தபோதுஇ அது என்கையில்தான் இருக்கின்றது என்று நிரூபித்தார் ஹேரத்.. 13 விக்கட்டுகளை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியை வெள்ளையடித்த சாதனை இவரிடமே போயிற்று.
australia-vs-sri-lanka-.jpg
கிரிக்கட் உலகம் அதிர்ந்தது. டேவிட்டிடம் கோலியாத் விழுந்த கதைதான். பற்பல விமர்சனங்கள். தன் தலைமையில் இதுவரை தோல்வியைச் சுவைத்திராத அணித் தலைவர் ஸ்டீவ் ஸிமித் நிலைகுலைந்து போனார்.
 
இலங்கை அணியோ சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தது. இளமையான பல திறமைசாலிகள் வந்துவிட்டார்கள் என்று ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது இலங்கை. ஒரு நாள் ஆட்டத்திலும் விளாசிக் கட்டுவோம் என்ற உற்சாகத்தோடு களமிறங்கியது இலங்கை அணி...
dil.jpg
ஆனால் நினைத்தது நடக்கவில்லை. இரண்டாம் ஒரு நாள் ஆட்டத்தைத் தவிர ஏனைய ஆறு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கியிருந்துள்ளது.  வாங்கியதை இலங்கை அணிக்கு திருப்பிக் கொடுத்து தன்னைத் திருப்திப்படுத்திக் கொண்டுள்ளது அவுஸ்திரேலிய அணி.
 
போட்டிக்கு போட்டி தன் ஆட்டக்காரர்களை இரு அணிகளுமே மாற்றிக் கொண்டன. காயப்பட்டவர்களின் இடங்களை நிரப்பஇ ஆஸ்திரேலிய அணி புதிய வீரர்களை கொண்டுவரஇ இலங்கை அணியோ புதுப் புது இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் பணியை மேற்கொண்டிருந்தது. இதுவே இலங்கை அணியின் தொடர்தோல்விக்கு காரணம் என்றுகூடச் சொல்லிக் கொள்கிறார்கள்.
 
தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளப் பின்நின்று ஆஸ்திரேலியா இறுதி இரண்டு ரீ20 மோதல்களிலும் அணியில் இணைத்துக்கொண்;ட மக்ஸ்வெல்தான் ஆட்ட வெற்றி நாயகனாகி இருக்கின்றார். 65 பந்துகளில் இவர் நாலாபக்கமும் அடித்துத் தள்ளிய 145 நீண்டகாலம் பேசப்படும். அதிலும் பிஞ்ச் என்ற துடுப்பாட்ட வீரர்  காயப்பட்டதால்தான் இவருக்கு இந்த வாய்ப்பு.
Australia-vs-Sri-Lanka-2011-Series.jpg
39வயதான திலகரட்ன டில்ஷான்  இலங்கை கிரிக்கட் அணியிடமிருந்து பிரியாவிடை பெற்றுள்ளார். சில சிறந்த இளம்  இலங்கை வீரர்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள். சிமித் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வார்ணரிடம் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட்டது. தன் தலைமையின் கீழ் எல்லாப் போட்டிகளையும் வென்றது இந்த அவுஸ்திரேலியர் தலையில் சூடிய ஒரு மகுடம். ஒரு சதத்தையும் அடித்து தன் துடுப்பாட்டத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ள இவருக்கு சிறந்த விளையாட்டு வீர அப்பா என்ற விருதும் கைவசமாகி இருக்கின்றது. 
 
தடுக்கி விழவில்லை. தலைகுப்பற வீழ்ந்த ஆஸ்திரேலிய அணி மீண்டும் சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று ஒரு புதுத் தெம்போடு விளையாடி  மீண்டும் தன்னை கோலியாத்தாகக் காண்பிக்கும் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது. 
 
மீண்டும் சறுக்கலைக் கண்டுள்ள இலங்கை அணி இனி என்ன செய்யப் போகின்றது? பழுத்த அனுபவசாலிகள் பலர் அணியிலிருந்து நீங்கும்போது உடனடித் தாக்கங்கள் நிகழ்வது சகஜமே. முன்பெல்லாம் முரளிதரனையே பெரு வெற்றிகளுக்கு நம்பியிருந்த இலங்கை அணி அவர் அணியிலிருந்து நீங்கியபோது ஒரு தாக்கத்தைக் கண்டது. எனினும் அவர் இடத்தை பின்பு ஹேரத். நிரப்பினார். இப்பொழுதும் அவரும் அணியை விட்டு விலகலாம் என்ற நிலை வந்துவிட்டது. அவரும் விலகினால் அது ஒரு பெரிய தாக்கத்தை இலங்கை அணிக்கு ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
 
முரளீதரன்இ சங்கரக்கார. ஜயவர்த்தன, டில்ஷான் என்று அணியிருந்து விலகியவர்களெல்லாம் இலங்கை அணியின் பெரிய தூண்கள். இவர்கள் இடத்தை நிரப்புவது என்பது கடினந்தான். என்றாலும் தனஞ்சய டி சில்வா , மென்டிஸ் போன்ற கண்டுபிடிப்புகள் இலங்கை அணியை மீண்டும் ஒரு பலமான நிலைக்குக் கொணரும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் அது எப்போது என்பதுதான் இன்றைய கேள்வி..
 
பிரபல்யமான ரத்தக்கண்ணீர் என்ற பழைய திரைப்படமொன்றில் கண்ணை இழந்த எம்.ஆர்.ராதா கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி  என்று மனம் நொந்து பாடுகிறார்.
 
அவுஸ்திரேலிய அணி தந்ததை முடிவில் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து மனம் நொந்து போயிருக்கும் இலங்கை அணியின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கப் போகின்றது?
 
தோல்வி நிலையென நினைத்தால்........ என்ற பாடல்கூட இவர்கள் நிலைக்குப் பொருந்தலாம். நடப்பன நல்லனவாக இருக்கட்டுமே.

http://onlineuthayan.com/article/250

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.