Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘எழுக தமிழ்’ தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வாக வேண்டும்

Featured Replies

‘எழுக தமிழ்’ தமிழ் மக்கள் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வாக வேண்டும்

p6-13353b3416b89b2f17310f51198cfc0bee4a44c9.jpg

 

தமிழ் மக்­களின் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்க வலி­யு­றுத்­தியும் அவை தீர்க்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை முன்­னி­றுத்­தியும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் அணி திரண்டு உணர்வு பூர்­வ­மாக எழுக தமிழ் பேர­ணியை நடத்­தி­யி­ருந்­தார்கள்.

வடக்கு, கிழக்கை சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்று சேர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தின் பூரண சுயாட்­சி­யையும் சுய நிர்­ணய உரி­மை­யையும் அங்­கீக­ரிக்கும் சமஷ்டி ஆட்சி முறை­யி­லான தீர்வே இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக அமையும் என்ற கருத்­தையும் உரக்­கவே கூறி­யி­ருந்­தார்கள்.

இலங்­கை­யினை ஆங்­கி­லேயர் விட்டுச் சென்ற காலம் தொட்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அவர்­களை அடக்கி ஒடுக்கி அடி­மைப்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கையை இலங்­கையை கடந்த 60 வரு­ட­கா­ல­மாக ஆட்சி செய்து வந்த அர­சாங்­கங்கள் மேற்­கொண்டு வந்­தி­ருந்­தன. ஆட்­சிக்கு வரு­கின்ற ஒவ்­வொரு அர­சாங்­கங்­களும் அது சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னாலும் சரி ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னாலும் சரி மாறி மாறி தமி­ழர்­களை அடி­மைப்­ப­டுத்தி அடக்கி ஒடுக்­கு­கின்ற வேலைத்­திட்­டத்தை தமக்கே உரிய பாணியில் செவ்­வனே செய்து வந்­தி­ருந்­தன.

இதன் கார­ண­மாக தமிழர் தரப்பில் உத­ய­மான தலை­வர்கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்­பித்­தார்கள். ஆரம்­பத்தில் அர­சியல் ரீதி­யிலும் அகிம்சை ரீதி­யிலும் தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை பேரி­ன­வாத அர­சாங்­கத்­திடம் இருந்து பெற்றுக் கொள்ள போரா­டி­யி­ருந்த போதும். அவை எது­வுமே பய­ன­ளிக்­க­வில்லை. இதன் கார­ண­மாக தமிழ் இளை­ஞர்கள் இலங்­­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கும் தமி­ழர்கள் சுதந்­தி­ரத்­திற்­கு­மான சுய­நிர்­ண­யத்­துடன் வாழ்­வ­தற்கு ஒரே தீர்வு தனி நாடு தமி­ழீழம் பெற்­றுக்­கொள்­வதே என வர­லாற்றுக் கனவை முன்­னி­றுத்தி போராட ஆரம்­பித்­தார்கள்.

ஆரம்­பத்தில் ஒன்­றாக பல தலை­வர்கள் இணைந்து போராட ஆரம்­பித்­த­வர்கள் பின்­னாளில் பல இயக்­கங்­க­ளாக உடைந்து போரா­ட்டத்தை முன்­னெ­டுத்­தார்கள். இருந்த போதிலும் அனைத்து பிரிந்து சென்ற இயக்­கங்­களும் வலு­வி­ழந்து போக தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் மாத்­திரம் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனை தேசிய தலை­வ­ராக கொண்டு போராட்­டத்தை முன்­னோக்கி வெற்­றிப்­பா­தையில் நகர்த்திக் கொண்­டி­ருந்­தது. இந்த இயக்­கத்­திற்­காக வடக்கு, கிழக்கு உட்­பட தமிழர் எங்­கெல்லாம் வாழ்ந்­தார்­களோ அங்­கெல்லாம் இருந்து ஆத­ரவும் உரி­மைக்­கு­ரலும் வெளிப்­பட்­டி­ருந்­தது. பூரண மக்கள் ஆத­ர­வுடன் முன்­னேறி சென்ற தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் தமி­ழரின் தாகம் தமி­ழீழ தாயகம் என்ற இலட்­சிய வேட்­கை­யுடன் 30 வருட கால­மாக போராடிக் கொண்­டி­ருந்­தது.

இவ் இயக்­கத்தின் சுயா­தீன வளர்ச்­சி­யானது ஓர் கட்­டத்தின் பின்பு இந்­தியா, அமெ­ரிக்கா உட்­பட மேலைத்­தேய வல்­ல­ரசு நாடு­­க­ளுக்­கெல்லாம் தலை­யி­டியாய் மாற ஆரம்­பித்­தது. ஒரு ­நாட்டின் அர­சாங்­கத்தை எதிர்த்து ஓர் சிறு­பான்மை இனம் தொடர்ச்­சி­யாக வலி­மை­யுடன் போராடி வந்­த­துடன் வன்­னியில் தனி­ய­ர­சாங்­கத்­தையே அமைத்­தி­ருந்­த­துடன் ஆணி­வே­ரான சர்­வ­தே­சத்தின் நிகழ்ச்சி நிர­லையே ஆட்­டம்­காண வைத்­தி­ருந்­தது. உலக நாடு­களின் சர்­வ­தேச நிகழ்ச்சி நிரல் எவ்­வாறு அமையப் போகின்­றது என்­பது தொடர்பில் வன்­னியின் காட்­டிற்குள் இருந்து கார்த்­திகை 27 ஆம் திக­தி உரை­யாற்றும் ஒரு­வனின் பேச்சில் தங்­கி­யி­ருந்­தது. இந்­த­ள­விற்கு தலை­யி­டியாய் போன தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தை அழிக்க வேண்டும் என சர்­வ­தே­ச­மா­னது தீர்­மா­னித்­தி­ருந்­த­துடன் அதனை செய்தும் முடித்­தி­ருந்­தது.

2009 மே மாதம் 18 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் ஆயுதப் போராட்டம் அர­சியல் வடிவம் பெற்று ஏற்­கனவே தலை­வரால் கைநீட்டி காட்­டி­வி­டப்­ப­ட்டி­ருந்த தமிழ் தேசிய கூட்­டமைப்­பி­டமும் அதன் தலைவர் இரா.சம்­பந்­த­னி­டமும் சென்­றது. ஆயு­த­வழி போராட்டம் தோற்­க­டிக்­கப்பட்ட நிலையில் இனி தமி­ழர்­க­ளுக்­கான தீர்வை அர­சியல் இரா­ஜ­தந்­திர நகர்­வி­னூடாக பெற்­றுக்­கொள்ள முடியும் என இப்­பணி தமிழ் தேசியக் கூட்­டமைப்­பிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதன் கார­ண­மா­கவே தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்­திற்கு எப்­படி தமிழ் மக்கள் மன­தார தமது முழு ஆத­ர­வையும் கொடுத்­தார்­களோ அது போன்றே முழு­மை­யான ஆத­ரவை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கொடுத்­தி­ருந்­தார்கள்.

2010 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக, வன்­னியின் இறுதி யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது இரா­ணுவ தள­ப­தி­யா­க­வி­ருந்­த­வரும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களை அழித்தே ஆக வேண்டும் என்று கங்­க­ணம்­கட்­டி­யி­ருந்­த­வ­ரு­மான சரத்­பொன்­சே­கா­வுக்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கு­மாறு கூறி­ய­தற்கு இணங்க தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இதே­போன்று கடந்த வருடம் ஜன­வரி எட்டாம் திகதி மாற்­றத்­திற்­கா­கவும் நல்­லி­ணக்­கத்­திற்­கா­கவும் வாக்­க­ளி­யுங்கள் என மீளவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விடுத்த கோரிக்­கையை ஏற்று தமிழ் மக்கள் அத­னையும் செய்­தி­ருந்­தனர். அத­னால்தான் புதிய நல்­லாட்சி அர­சாங்கம் உத­ய­மா­கி­யது. இவற்­றுக்­கப்பால் கடந்த வருடம் இடம்­பெற்ற பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் 2016 ஆண்­டுக்குள் தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு என்ற தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கும் ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு தமது ஆணை­க­ளையும் ஆத­ர­வு­க­ளையும் வழங்­கி­யி­ருந்­தார்கள்.

ஆதலால் தான் இலங்கை அர­சியல் வர­லாற்றில் இரண்­டா­வது முறை­யாக ஒரு தமிழன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக முடிந்­தது. இந்­நி­லையில் எவ்­வாறு ஆரம்­பத்தில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தார்­களோ எவ்­வாறு தமிழ்த் தேசியக் கூட்.டமைப்­புக்கு ஆத­ர­வ­ளித்­தார்­களோ அதே போன்­ற­தொரு உணர்­வு­பூர்­வ­மான ஆத­ர­வினை தற்­போது தமிழ் மக்கள் பேர­வையின் எழுக தமிழ் பேர­ணிக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் உணர்வு பூர்­வ­மான ஆத­ர­வினை வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

‘எழுக தமிழ்’ கூறும் செய்தி

இவ்­வாறு தமிழ் மக்கள் பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த எழுக தமிழ் பேர­ணிக்கு தமிழ் மக்கள் உணர்வு பூர்­வ­மாக தமது ஆத­ர­வினை வழங்­கி­ய­தா­னது ஓர் செய்­தியை சர்­வ­தே­சத்­திற்கும் இலங்கை அர­சாங்­கத்­திற்கும் உறு­தி­யாக எடுத்துக் கூறி­யுள்­ளது.

அதா­வது எழுக தமிழ் பேர­ணியை நடத்­து­வதன் நோக்­க­மாக தமிழ் மக்கள் பேரவை முன்­வைத்­தி­ருந்த விட­யங்­க­ளான இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த சுய­நிர்­ண­யத்­து­ட­னான சமஷ்டி ஆட்­சியே தமிழர் இனத்­தி­னதும் தாய­கத்­தி­னதும் அடை­யா­ளங்­களை இல்­லா­தொ­ழிக்கும் பௌத்த மேலா­திக்­கத்தை நிறுத்த வேண்டும். காணா­மல்­போனோர் தொடர்­பான முறை­யான விசா­ரணை நடத்­தப்­பட்டு உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் பொது­மக்­க­ளது காணி­களில் நிலை கொண்­டுள்ள இரா­ணுவம் வெளியேற வேண்டும். மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் துரி­த­க­தியில் இடம்­பெற வேண்டும். இனி வருங்­கா­லங்­களில் இன­வ­ழிப்பு இடம்­பெ­றாத வண்ணம் பக்­கச்­சார்­பற்ற நீதி விசா­ரணை இடம்­பெற வேண்டும் ஆகிய கோரிக்­கை­களை முன்­வைத்து இப் பேரணி நடத்­த­ப்பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய கோரிக்­கை­களை முன்­வைத்த இவ் எழுக தமிழ் பேர­ணிக்கு தமிழ் மக்கள் ஆத­ர­வினை வழங்­கி­யி­ருந்­த­தனூடாக தமிழ் மக்கள் சர்­வ­தே­சத்­திற்கும் இலங்­கை­ய­ர­சாங்­கத்­திற்கும் ஓர் செய்­தியை கூறி­யி­ருக்­கின்­றார்கள். அதா­வது, இன்­னமும் தமிழ் மக்கள் பிரச்­சி­னை­க­ளுடன் தான் இருக்­கி­றார்கள் என்ற செய்­தி­யையும் இத்­த­கைய தமிழ் மக்­க­ளது பிரச்­ச­ினை­களை தீர்த்து வைக்­காமல் ஒரு­போதும் இலங்­கையில் நல்­லாட்­சி­யையோ இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையோ ஏற்­ப­டுத்­திவிட முடி­யாது என்ற செய்­தி­யையே தமிழ் மக்­கள் மீண்டும் உரத்து சொல்­லி­யி­ருக்­கி­றார்கள்.

இத­னை­விட மற்­றுமோர் விட­யத்­தையும் மறை­மு­க­மாக தமிழ்­மக்கள் பேர­வையில் இணைந்­துள்ள அர­சியல் கட்­சிகள் (கட­வுளால் கைவி­டப்­பட்­ட­வர்கள் எனவும் கூறலாம்) எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­த­னுக்கு கூறி­யி­ருக்­கி­றார்கள். அதா­வது நீங்கள் கடந்த தேர்தல் விஞ்­ஞாப­னத்தில் குறிப்­பிட்­டது போன்று 2016 ஆம் ஆண்­டுக்குள் தீர்­வுத்­திட்­டத்தை தமிழ்­மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுக்­கா­விட்­டாலோ அல்­லது மேற்­கு­றிப்­பிட்ட தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­க­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்­காது விட்­டாலோ அடுத்த தேர்­தல்கள் உங்­க­ளுக்கு எதி­ரா­ன­தா­கவும் சவால் விடு­வ­தா­கவும் அமையும் என்ற செய்­தி­யையும் கூறி­ய­தாக இருந்­த­துடன் சவால் விடு­வது போன்ற தொனி­யிலும் பேசி­யி­ருந்­தார்கள்.

தமி­ழ­ரசுக் கட்­சியும் எழுக தமிழும்

தமிழ் மக்கள் பேர­வையால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த எழுக தமிழ் பேர­ணி­யா­னது ஓர் விதத்தில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு சவா­லாக அமைந்­தி­ருந்­ததா என்ற கேள்­வி­யும் தற்­போது அர­சியல் மட்­டத்தில் எழுந்­தி­ருக்­கின்­றது. ஏனெனில் தமிழ் மக்கள் பேர­ணியில் பொது அமைப்­புக்கள் அர­சியல் கட்­சிகள் எனப் பலர் அங்கம் வகிக்­கின்­றனர். இந்­நி­லையில் அர­சியல் கட்­சிகள் எனும் போது தமிழ் மக்­களின் ஒட்­டு­மொத்த ஆணை ­பெற்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்ற தமி­ழ­ரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சிகள் முழு­மை­யா­கவும் பகு­தி­ய­ள­விலும் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்­தன. இவற்­றை­விட தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்­ப­மா­னதில் இருந்தே அத­னோடு பனிப்­போரில் ஈடு­பட்­டு­வந்த தமி­ழ­ரசுக் கட்சி இவ் எழுக தமிழ் பேர­ணியின் போதும் அதே நிலை­யி­லேயே இருந்­தது. குறிப்­பாக பேர­ணிக்கு முன்னர் தமி­ழ­ரசு கட்­சியின் ஆத­ர­வினை பெறு­வ­தற்­காக யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள ஓர் வர்த்­தகர் ஒரு­வ­ரது வீட்டில் நள்­ளி­ரவு வரையில் நடத்­தப்­பட்ட இர­க­சிய பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­யிலேயே முடிந்­தி­ருந்­தன.

தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுமந்­திரன் ஓர் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெளி­வாக கூறி­யி­ருந்தார். மக்­க­ளு­டைய உணர்­வுகள் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மக்­க­ளுக்­குள்ள அதே வெறுப்­புக்கள் எமக்கும் உள்­ளது. அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்தில் கால­தா­ம­த­ம் செய்­வது குறித்த பாரா­ளு­மன்­றத்தில் பேசி­யி­ருந்தோம். எனினும் தற்­போ­தைய நிலையில் இவ்­வா­றான பேர­ணி­க­ளா­னது இன­வாத அர­சியல்வாதி­க­ளுக்கு சாத­க­மாக அமைந்து விடும் எனவும் இதனால் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்­கான முயற்­சிகள் பாழ­டைந்­து­விடும் என தெரி­வித்­தி­ருந்தார். இத்­த­கைய கருத்தை வலி­யு­றுத்­திய தமி­ழ­ரசுக் கட்சி இப் பேர­ணியில் இருந்து ஆத­ரவு வழங்­காமல் நழுவிக் கொண்­டது.

இந்­நி­லையில் தமி­ழ­ரசு கட்­சி­யி­னது ஆத­ர­வில்­லாமல் இவ்­வ­ளவு மக்கள் பேர­ணியை நடத்­தி­யி­ருப்­ப­தா­னது தமி­ழ­ரசு கட்­சிக்கு சவா­லான விட­ய­மாக உள்­ளதா இல்­லையா என்­பது எதிர்­கால அர­சியல் நகர்­வு­க­ளிலும் இதனை அவர்கள் கையாள்­கின்ற விதத்­தி­லுமே தங்­கி­யி­ருக்­கின்­றது.

தமிழ் மக்கள் பேரவை

நிரப்­ப­வேண்­டிய இடை­வெளி

தமிழ் மக்கள் பேர­வை­யா­னது அர­சியல் கட்­சி­யல்ல. நாம் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான அழுத்­தத்தை பிர­யோ­கிக்­கின்ற ஒரு பொது­வான அமைப்பு எனவும் எந்தக் கால கட்­டத்­திலும் அர­சி­யலில் இறங்­க­மாட்டோம் என கூறி­யி­ருந்­தார்கள். ஆனால், அவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட அமைப்பு அனைத்து மக்­க­ளி­டமும் சென்­ற­டைந்­ததா என்­ப­தாயின் அதற்­கான பதில் இல்­லை­யென்றே அமை­கி­றது. தமிழ் மக்கள் பேர­வைக்கு பொது­வா­கவே ஓர் குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கின்­றது. அதா­வது நக­ரத்­தவர்கள் மட்­டுமே தமிழ் மக்கள் பேரவை என்று.

இவ்­வா­றான நிலையில் கடந்த சனிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட எழுக தமிழ் பேர­ணி­யிலும் அதன் உண்மை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. குறித்த பேர­ணிக்கு பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் அணி திரண்­டி­ருந்­தாலும் இன்­னமும் தமிழ் மக்கள் பேரவை மக்­க­ளி­டையே குறிப்­பாக கிரா­ம­மட்ட மக்­க­ளி­டையே நுழை­ய­வில்லை என்­ப­தையே காட்­டு­கின்­றது. பேர­ணியில் பங்­கு­பற்­றி­யி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாணவன் ஒருவன் தனது தாயுடன் தொலை­பே­சி­யில் ­பேசும் போது குறிப்­பி­டு­கின்றான் கம்­ப­சுக்கு வந்தேன் ஏதோ எழுக தமிழ் என்று கூட்டிட்டு வந்துட்டாங்க நான் எப்படியும் மதியத்துக்குள்ள வந்திடுவன் இவ்வாறுதான் அன்றையதினம் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

தமிழ் மக்களுக்காக போராடுகின்ற ஓர் அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமாயின் வெறுமனே பேச்சளவில் கூறிக்கொண்டோ அல்லது நகரத்துக்குள் உள்ள குறிப்பிட்ட ஓர் சனத்தொகையினரை மாத்திரம் இலக்காக கொண்டு செயற்படுவதனாலோ அது அனைத்து மக்களுக்குமாக போராடும் அமைப்­பாக கூறிவிட முடியாது. நகரத்தை­யும் தாண்டி கிராமத்திலுள்ள ஒவ்வொரு மக்களையும் இதன் செயற்பாடும் நோக்கங்­களும் சென்றடையவேண்டும். அதனூடாக மக்கள் உணர்வு ரீதியாக உண்மையாக வெளிப்பட்டு வரவேண்டும்.

தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்

எனவே, எது எவ்­வா­றாக அமைந்­தாலும் கடந்த 60 வரு­ட­கா­ல­மாக தொடர்ந்து வரு­கின்ற தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதே தமிழ் மக்­க­ளது நீண்­ட­கால அவா­வாகும். அதற்­கான ஓர் அழுத்தம் கொடுக்­கின்ற செயற்­பா­டா­கவே தமிழ் மக்கள் இவ் எழுக தமிழ் பேர­ணியை பார்த்­தி­ருந்­தார்கள்.

இந்­நி­லையில் தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்து தமிழ் தலை­மை­களும் சர்­வ­தே­சமும் செயற்­பட வேண்டும். அத­னை­வி­டுத்து தம்­மி­டை­யே­யான அதி­கார போட்­டி­யா­கவோ அல்­லது பலப் பரீட்­சை­யா­கவோ இப் பேர­ணியை பார்க்­காது தமிழர் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கா­னதும் அவர்­க­ளது மற்­று­மொரு ஆணை­யா­கவும் இதனை ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டியதே அனைத்து தமிழ் தலைமைகளதும் கடமையாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-09-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.