Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா

Featured Replies

'முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றி நடக்கும் மோசடிகள்...!' -படபடக்கும் சசிகலா புஷ்பா

sasikala%20pushpa600.jpg

த்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. ' முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை மாநிலங்களவை செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. தமிழக முதல்வரோடு முரண்பட்டு நின்றாலும், அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பியாகவே அவர் தொடர்கிறார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டிர ஆளுநரும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். 

அந்தக் கடிதத்தில், ' தமிழக முதல்வரைச் சுற்றிலும் சிலர் இருக்கிறார்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி துணை முதல்வர் பதவி உள்பட முக்கிய முடிவுகளை எடுத்தால், அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கையெழுத்து அவசியம். கட்சி சார்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அந்தக் கையெழுத்து முதல்வருடையது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். முதல்வர் கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். 

சசிகலா புஷ்பா எம்.பியிடம் பேசினோம். 

ஒரு கையெழுத்தை வைத்துத்தான் உங்களை காவல்நிலைய விசாரணைக்கு அழைத்தார்கள். தற்போது முதல்வரின் கையெழுத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள்? இதை எப்படிப் புரிந்து கொள்வது? 

" என்னுடைய கையெழுத்தை காரணம் காட்டி காவல்நிலைய விசாரணைக்கு அழைத்தார்கள். விஷயம் ஒரு கையெழுத்துதான். ஆனால், எனக்கு மட்டும் அவ்வளவு வேகமாக விசாரணைகள் நடந்தன. இதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் நியாயம் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஒரு எம்.பியை விசாரணைக்கு வரவைக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசின் போலீஸார் துரிதமாக செயல்பட்டார்கள். சாதாரண மக்களுக்கு நியாயம் கிடைக்க, இப்படியெல்லாம் செயல்படுவார்களா? அ.தி.மு.க தொண்டர்கள் முன்பு என்னை எப்படிப் பார்த்தார்கள் என்று தெரியாது. நாளுக்குநாள் முதல்வரைச் சுற்றியுள்ள சிலரைப் பற்றி நான் பேசும் பேச்சுக்களால், மகிழ்ந்து போய் இருக்கிறார்கள். தங்களுக்காக குரல் கொடுக்க ஒருவர் இருக்கிறார் என நம்புகிறார்கள். முதல்வர் பின்னால் இருக்கும் கும்பல் மீது கோபத்தில் இருக்கிறார்கள். கட்சி விஷயத்தில் மூத்த தலைவர்களும் அனுமதிக்கவிடவில்லை. இந்தநேரத்தில் முதல்வர் கையெழுத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதைப் பற்றித்தான் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன்".  

முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநேரத்தில் இதை நீங்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
 
" தமிழக முதல்வருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது பற்றி யாருக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்படவில்லை. அவர் எந்தநிலையில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்தநேரத்தில் அரசின் சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பரிசீலித்துத்தான் அனுப்ப வேண்டும். அதில் எந்த தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. முதல்வரின் சூழலை அருகில் இருப்பவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது. இதைக் கவனித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பிரதமரின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றிருக்கிறேன். முதல்வரைச் சுற்றியிருப்பவர்கள், வேண்டுமென்றே அவரை மறைத்து வைக்கிறார்கள்". 

நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? 

" முதல்வருக்குப் பின்னார் யார் இருக்கிறார்கள்? இதுவரையில் அவர்கள் முதல்வர் பக்கத்தில் வருவதற்கு யாருக்காவது அனுமதி கொடுத்திருக்கிறார்களா? அந்தக் கும்பலால்தான் கட்சியின் சீனியர்கள் பாதிக்கப்பட்டார்கள். துணை முதல்வர் பதவியில், முதல்வர் அனுமதியில்லாமல் யாரையாவது நியமித்தால் தொண்டர்கள் குமுறி எழுவார்கள். கட்சி நான்கு துண்டுகளாக சிதறிவிடும். இவ்வளவு சீனியர்கள் கட்சியில் இருக்கிறார்கள். நேற்று வந்தவர்கள் எல்லாம் எதையும் தீர்மானிக்க முடியாது. புரட்சித் தலைவர் உருவாக்கிய மாபெரும் இயக்கம் இது. ஏதோ அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள் என்பதற்காக, புதிதாக ஒருவர் பதவியில் அமர்வதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்". 

உங்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எந்தநிலையில் இருக்கிறது? 

"என் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய்யானது என்பது அனைவருக்கும் தெரியும். அனைத்திலும் வெற்றி பெற்று வருகிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கிலும் எனக்கு நியாயம் கிடைத்தது". 

எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு அ.தி.மு.க தலைமை, உங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. தற்போது முதல்வர் சொன்னால் ராஜினாமா செய்வேன் என்கிறீர்கள்? என்ன சொல்ல வருகிறீர்கள்? 

"நான் ஒரு விஷயத்தை உறுதியாக நம்புகிறேன். என்னை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என முதல்வர் எண்ணியிருக்க மாட்டார். என்னுடைய உழைப்பை முதல்வர் அறிவார். என்னுடைய திறமையின் அடிப்படையில் வேகமான வளர்ச்சிகள் கிடைத்தன. இதைப் பிடிக்காதவர்கள்தான் எனக்கு எதிராக சதிவேலைகள் செய்தனர். முதல்வருக்கு விருப்பமில்லாமல்தான், எனக்கு எதிரான சதிகள் நடத்தப்பட்டன என்பதை பின்னால்தான் அறிந்தேன். தற்போது முதலமைச்சருக்கே நல்லது செய்யக் கூடிய வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கிறார். அன்றைக்கு நான் சண்டை போட்டதால்தான், இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதனால்தான், முதல்வர் சொன்னால் ராஜினாமா செய்வேன் எனச் சொன்னேன். என்னுடைய சமூகத்துக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்தார் முதல்வர். அதை பகிரங்கமாக வேறு ஒரு கும்பல் பிடுங்க நினைத்தது. என்னைவிட என் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் இது". 

ஒரு கேள்வி. முதல்வர் உண்மையிலேயே உங்களை அறைந்தாரா? 

" ஆமாம். உண்மையாகவே என்னை அடித்தார். அவருடைய தோழிதான், என்னை கையெழுத்து போடச் சொல்லி வற்புறுத்தினார். அங்கிருந்த அதிகாரிகள் மிக மோசமாக நடந்து கொண்டனர். என்னுடைய தொலைபேசி முதற்கொண்டு வாங்கி வைத்துக் கொண்டார்கள். 15 மணி நேரம் எந்த இடத்துக்கும் செல்லவிடாமல் ஒரு கைதி போல என்னை நடத்தினார்கள். என் கணவரையும் மகனையும் பார்க்க முடியாத அளவுக்கு மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள். முதல்வரின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே அமைதியாக இருக்கிறேன்".

http://www.vikatan.com/news/tamilnadu/69249-sasikala-pushpa-writes-letter-to-modi-for-monitoring-tn-situation.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.