Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை

Featured Replies

முதல்வர் உடல்நிலை... சி.பி.ஐ விசாரணை தேவை! -சசிகலா புஷ்பா 'திடீர்' சர்ச்சை

sasikala%20pushpa600.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அதிரடியாக பேசி இருக்கிறார் சசிகலா புஷ்பா. ' முதல்வரின் உடல்நிலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்' என சர்ச்சை கிளப்பியிருக்கிறார். 

டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா எம்.பி, " முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, நான் பேசிய பிறகே அப்போலோ மருத்துவனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிடுகிறது. குறிப்பாக, 'ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன் போடுவேன்' என பேட்டி கொடுத்த பிறகுதான் அறிக்கை வெளிவருகிறது. என்னைப் போல, சசிகலா நடராஜனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் மீது பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். கட்சியின் சீனியர் நிர்வாகிகள் என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முதலில், sasi%20letter.jpg'முதல்வருக்கு டிஹைட்ரேட் ஏற்பட்டது' என்றார்கள். எதனால் அது வந்தது? அவருக்குப் பின்னால் இருந்து இரண்டு மாத காலம் கவனித்தபோது கொடுத்த மாத்திரைகள் என்ன என்பதற்கு சி.பி.ஐ விசாரணை தேவை.

அவருக்குப் பின்னால் உள்ளவர்களால் ஏற்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை தேவை. முதல்வர் உடல்நலன் குறித்து பலவித சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. சசிகலா நடராஜனும் அவர்கள் குடும்பமும் மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டும். முதல்வர் உடல்நலன் பெற்று மீண்டு வர வேண்டும் என்பதில் என்னைப் போன்ற தொண்டர்கள் விரும்புகின்றனர். 2011-ல் சசிகலா குடும்பத்தினர் மீது பல வழக்குகள் பாய்ந்தன. 'ஆட்சிக்கு எதிராக சதி செய்தார்கள்' என்று சொல்லித்தான் முதல்வர் நடவடிக்கை எடுத்தார். 

இப்போது அவர்கள் மருத்துவமனையில் உட்கார்ந்து கொண்டு செயல்படுகிறார்கள். அந்த இடத்தில் இருந்தே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அம்மா பிடித்து வைத்தால்தான் பிள்ளையார். இல்லாவிட்டால் சாணி என்பதை தொண்டர்கள் அறிவார்கள். முதல்வரைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு. சசிகலா நடராஜன் ஏன் வரக் கூடாது என தொலைக்காட்சி விவாதங்களில் வலிந்து திணிக்கிறார்கள். இது திட்டமிட்ட சதியாகவே பார்க்கிறேன். எந்தப் பதவியிலும் இல்லாத சிலர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடத் துடிக்கிறார்கள். சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. மீண்டும் அவர் வந்தபோது, ' ஆட்சி அதிகாரத்திற்கு வர மாட்டேன்' என மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு வந்தார். அவரை பதவியில் அமர வைக்கும் முயற்சிகளை அ.தி.மு.க தொண்டர்கள் முறியடிப்பார்கள்' எனக் கொந்தளித்தார் சசிகலா புஷ்பா. 

இந்நிலையில், முதல்வர் கையெழுத்தைப் பயன்படுத்தி மோசடி நடந்தால், அதன்பேரில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா. 

சசிகலாவை எதிர்க்கும் சசிகலாவின் அரசியல் ஆயுதம் எந்த எல்லையை நோக்கிப் பயணிக்கும் என்பதை கவனித்து வருகிறார்கள் அண்ணா தி.மு.க தொண்டர்கள்.

http://www.vikatan.com/news/tamilnadu/69318-sasikala-pushpa-slams-sasikala-natarajan-for-cm-health.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.