Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!' -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர்

Featured Replies

' நான் வெறும் பார்வையாளன் மட்டுமே!'  -கட்சித் தலைவர்களிடம் மனம் திறந்த கவர்னர்

ops%20governor.jpg

ப்போலோவுக்கு இணையாக தினசரி தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கிறது கிண்டி ராஜ்பவன் மாளிகை. ' பொறுப்பு முதல்வரை நியமிக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை' என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநரின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. ஆனால், அப்படியொரு எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இதன்பிறகு, ஆளுநரை சந்தித்துப் பேசுவதற்காக அமைச்சர்கள் ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோர் சென்றனர். அப்போதும், ' காவிரி பிரச்னை மற்றும் அரசின் பொது நிர்வாகம் பற்றியே கேட்டறிந்ததாக' ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியானது. அப்போலோ மருத்துவமனைக்கு இணையாக, ஆளுநர் அலுவலக அறிக்கைகளும் தொண்டர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த வாரம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். வெளியில் வந்தவர், ' மத்திய அமைச்சரவையில் இருந்தபோதே ஆளுநரை நன்கு அறிவேன். இது நட்புரீதியிலான சந்திப்பு' என சிரித்துக் கொண்டே பேட்டியளித்தார். 

இதன்பின்னர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் ஆளுநரை சந்தித்துவிட்டுத் திரும்பினார். ' என்னதான் விவாதிக்கப்படுகிறது ஆளுநர் மாளிகையில்?' என்ற கேள்வியை ராஜ்பவன் வட்டாரத்தில் கேட்டோம். நம்மிடம் விவரித்தவர்கள், " அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் வந்தாலும், வரவேற்று உபசரிப்பு கொடுப்பது ஆளுநர் மாளிகை வழக்கம். ஆனால், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக, மத்திய அரசின் பிரதிநிதியாகவே ஆளுநர் இருக்கிறார். தமிழ்நாட்டின் சூழலில் அவர் எடுக்கப் போகும் முக்கிய முடிவுகளை அறிந்து கொள்ளவும் விரும்புகின்றனர். இதுபற்றித்தான் நேரடி சந்திப்பில் விவாதித்தார்கள். 

அவர்களிடம் பேசிய ஆளுநர், ' நான் பொறுப்பு ஆளுநராக இருக்கிறேன். மத்திய அரசைப் பொறுத்தவரையில் நான் வெறும் பார்வையாளன்தான். சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள், ட்விட்டரில் பேசுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. மோடி என்ன நினைக்கிறாரோ, அதை செயல்படுத்துவது மட்டும்தான் என் வேலை. அவர் மனதில் என்ன ஓடுகிறது என்றும் தெரியவில்லை. முதல்வர் குணமடைந்து வரும் வரையில், தமிழ்நாட்டில் நிர்வாக பொறுப்புக்கு யாரை நியமிப்பது என்பதை கேபினட்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒரு பார்வையாளனாக கவனித்துக் கொண்டிருக்கிறேன் என மனம் திறந்து பேசினார்" என விவரித்தனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/69324-i-am-just-an-observer-governor-says-about-tn-government-situation.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.