Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சகாப்தத்தின் முற்றுப்புள்ளி : கேள்விக்குறியாகும் தாய்லாந்தின் எதிர்காலம்

Featured Replies

ஒரு சகாப்­தத்தின் முற்­றுப்­புள்ளி : கேள்­விக்­கு­றி­யாகும் தாய்­லாந்தின் எதிர்­காலம்

bhumibol-ad0-8c02b208d268973376f67111590ef8a9cb1bfacb.jpg

 

சர்­வ­தேச விவ­காரம்

தாய்­லாந்து மன்னர் பூமிபோல் அத்­துல்­யாதெவ் மர­ணித்து விட்டார். ஏழு தசாப்த காலம் அரி­ய­ணையில் அமர்ந்­தி­ருந்த சகாப்­தத்தின் முற்­றுப்­புள்ளி, ஒரு தேசத்தின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றிக்கு ஆளா­கி­யி­ருக்­கி­றது.

தமது குடி­களால் தெய்­வீகக் குணாம்சம் பொருந்­தி­ய­வ­ராக மதிக்­கப்­படும் மாம­னிதர். மக்கள் மத்­தியில் தமக்­கி­ருக்கும் செல்­வாக்கை வளர்த்துக் கொண்டு தாய்­லாந்து தேசத்தை ஒரு­மு­கப்­ப­டுத்தி வைத்த தலைவர் என்ற பெரு­மைகள் ஏராளம்.

பொரு­ளா­தா­ரத்தை வளர்ச்­சி­யுறச் செய்து, தாய்­லாந்தை நடுத்­தர அள­வி­லான வரு­மானம் ஈட்டும் நாடாக மாற்­றி­யதில் மன்­னரின் பங்கு கணி­ச­மா­னது. தாய்­லாந்தை அர­சியல் யாப்­பிற்கு உட்­பட்ட மன்­ன­ராட்சி என்ற நிர்­வாகக் கட்­ட­மைப்­பிற்குள் ஜன­நா­ய­கத்தை நோக்கி நகரச் செய்­வற்கு அவர் எடுத்த நட­வ­டிக்­கைகள் ஏராளம்.

மன்­னரின் மரணம் தாய்­லாந்தின் அர­சியல் அரங்கில் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்றால், அதற்குப் பல கார­ணங்கள் உள்­ளன. மன்னர் அத்­துல்­யா­தெவ்வின் வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­காக அரி­யா­சனம் அமரப் போகும் இள­வ­ரசர் மஹா வஜி­ரா­லங்­கோர்னின் ஆற்றல் என்­பது முதன்மைக் காரணம்.

தாய்­லாந்தின் ஆட்சி நிர்­வாகக் கட்­ட­மைப்­பிற்குள் தவிர்க்க முடி­யாத அம்­ச­மாகத் திகழும் முடி­யாட்சி என்­பது அத்­துல்­யாதெவ் என்ற தனி­நபர் மீதான ஆரா­த­னை­யாக மாறி­யி­ருக்­கி­றது. அந்த மன்­னரின் மறைவால் ஏற்­ப­டக்­கூ­டிய வெற்­றிடம் முடி­யாட்சி மீதான நம்­பிக்­கையின் அத்­தி­வா­ரத்தை ஆட்டம் காணச் செய்­வது, ஆட்சி நிர்­வா­கத்தின் ஆரோக்­கி­யத்தைப் பாதிக்கும்.

இன்­றைய தாய்­லாந்தில், அத்­துல்­யா­தெவ்வைத் தவிர வேறெ­வ­ரையும் மன்­ன­ராகப் பார்த்­தி­ராத பிர­ஜைகள் அதிகம். இவர் 18ஆவது வயதில் அரி­யா­சனம் ஏறி, தமது வாழ்­நாளின் கடைசிக் கட்டம் வரையில் தாய்­லாந்து அர­சி­யலில் நிகழ்ந்த மாற்­றங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வ­ராகக் காணப்­ப­டு­கிறார். இந்தக் காலப்­ப­கு­தியில் 11 அர­சியல் சதிப்­பு­ரட்­சிகள் நிகழ்ந்­துள்­ளன. ஆட்­சிகள் மாறி­யி­ருக்­கின்­றன.

இன்று தாய்­லாந்து பொரு­ளா­தார ரீதியில் ஓர­ளவு முன்­னே­றிய நாடாக இருந்­த­போ­திலும், தெற்கில் ஆயுதக் கிளர்ச்சி, தலை­ந­கரில் வன்­மு­றைகள், அர­சியல் கட்­சிகள் மத்­தியில் முரண்­பா­டுகள் என்ற ரீதியில் பல பிரச்­ச­ினைகள் இருப்­பதை மறந்து விட முடி­யாது. தாய்­லாந்து இரா­ணுவம் அர­சி­யலில் செலுத்­தக்­கூ­டிய ஆதிக்­கமும் முக்­கி­ய­மான விவ­காரம்.

கடந்த காலங்­களில் நெருக்­க­டிகள் தலை­தூக்­கிய போதெல்லாம், மன்னர் அத்­துல்­யாதெவ் தமது செல்­வாக்கைப் பயன்­ப­டுத்தி பிரச்­ச­ினை­களைத் தீர்த்தார். அவ­ரது கருத்தை மக்கள் மாத்­தி­ர­மன்றி, அர­சி­யல்­வா­தி­களும், இரா­ணுவத் தள­ப­தி­களும் செவி­ம­டுத்­தார்கள். சில சம­யங்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அரண்­ம­னைக்கு வர­வ­ழைத்து மூடிய அறை­க­ளுக்குள் பேசி, பிரச்­ச­ினை­களைத் தீர்த்து வைப்பார். இல்­லா­விட்டால், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை பொது இடத்தில் வைத்து கடு­மை­யாக சாடுவார். மன்னர் என்ன செய்­தாலும், அது சரி­யா­கவே இருக்­கு­மென்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு இருந்­தது.

தாய்­லாந்தின் அர­சி­ய­லிலும், கலா­சா­ரத்­திலும் நடு­நா­ய­க­மாகத் திக­ழக்­கூ­டிய அமைப்­பாக மீண்டு, முடி­யாட்­சியை மாற்­றி­யது மன்­னரின் சாதனை என்­பார்கள். இந்தக் கருத்தை நிரா­க­ரிக்க முடி­யாது. தாய்­லா­ந்தில் அர­சியல் நெருக்­க­டிகள் தோன்­றிய சம­யத்தில் எல்லாம் அதனைத் தீர்த்து வைக்கும் மத்­தி­யஸ்த அமைப்­பாக அரண்­மனை விளங்­கி­யது. அரண்­மனை என்றால் அது அத்­துல்­யாதெவ் தான்.

இந்த நிலை­யொன்றும் அவ­ருக்கு எளி­தாகக் கிடைத்து விட­வில்லை. அவர் கஷ்­டப்­பட்டு உரு­வாக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அரி­யா­ச­னத்தில் அமர்ந்­தி­ருந்த தமது சகோ­தரர் துப்­பாக்கிச் சூட்டால் உயி­ரி­ழந்த சமயம், 18 வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு அத்­துல்­யா­தெவ்­விற்கு கிடைத்­தது. அந்த தினம் வரையில், தமது வாழ்­நாளின் பெரும்­பா­கத்தை அவர் தாயுடன் ஸ்விட்­சர்­லாந்தில் கழித்­தி­ருந்தார்.

தம்மை அர­சியல் வாழ்க்கைக்கு முற்­று­மு­ழு­தாக தயார்ப்­ப­டுத்திக் கொண்டு, தமது 22ஆவது வயதில் பட்­டா­பிஷேகம் செய்து கொண்­ட­போது, முடி­யாட்சி என்­பது பழ­மை­யான கவர்ச்­சியைக் கொண்­ட­தொரு விந்­தை­யான அமைப்­பாக நோக்­கப்­பட்­டது. அதற்கு 1950களில் நில­விய அர­சியல் பின்­னணி கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். அந்தக் காலப்­ப­கு­தியில் உலக நாடுகள் மன்­ன­ராட்சி முறையில் இருந்து ஜன­நா­ய­கத்தை வரித்துக் கொள்ளத் தொடங்­கி­யி­ருந்­தன. இரண்டாம் உலக யுத்­தத்தைத் தொடர்ந்து, ஆசியா முழு­வதும் மாற்­றத்­திற்கு உள்­ளாகி வந்­தது. கால­னித்­துவ ஆட்­சியின் பிடியில் இருந்து சுதந்­திர நாடுகள் உரு­வாகத் தொடங்கி வந்­தன.

தாய்­லாந்தில் அரச குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் அஞ்­ஞா­த­வாசம் சென்­றி­ருந்­தார்கள். அந்த சம­யத்தில், அத்­துல்­யாதெவ் வாய்ப்பை சரி­யாகப் பயன்­ப­டுத்திக் கொண்டு, தமது நிலையை பலப்­ப­டுத்திக் கொண்டார் என்றால், அது அவரின் அர­சியல் சாணக்­கியம்.

பனிப்போர் காலத்தில் தாய்­லாந்தை வலு­வா­ன­தொரு கூட்­டாளி நாடாக அமெ­ரிக்கா நோக்­கிய சம­யத்தில், அத்­துல்­யாதெவ் அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொண்டார். தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யங்­களில் வெகு­ஜன இயக்­கங்­களும், கம்­யூ­னிஸ குழுக்­களும் வலுப்­பெற்­றி­ருந்த பின்­ன­ணியில், தம்மை மக்கள் நல­னுக்­காக பாடு­படும் தலை­வ­ராக காட்டிக் கொள்­வதில் அவர் முனைப்புக் காட்­டினார்.

தாய்­லாந்து முழு­வதும் பயணம் செய்­வது, மன்­னர்­குல மர­பு­களை மீறி ஏழை­க­ளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்லி, வறுமை தாண்­ட­வாடும் பகு­தி­களில் அரண்­ம­னையின் செலவில் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுத்து அவர் கடை­பி­டித்த மூலோ­பா­யங்கள் மக்­களின் மன்னன் என்ற இலக்கை நோக்­கிய பய­ணத்தை இல­கு­ப­டுத்­தின. இந்தப் பய­ணத்தில் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளையும் அவர் தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்டார்.

ஒரு­பு­றத்தில் தமது தனிப்­பட்ட ஆளு­மையை வளர்த்துக் கொள்ளும் நோக்­கி­லான பிர­சாரத் திட்­டங்கள் என்றால், மறு­பு­றத்தில் அரண்­ம­னையின் கஜா­னாவை நிரப்பிக் கொள்ளும் வணிக முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சொத்து வணி­கத்­து­றை­யிலும், தகவல் தொழில்­நுட்பக் கம்­ப­னி­க­ளிலும் முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இந்த வணிக முயற்­சிகள் வெற்றி பெற்­றதால், உலகில் ஆகக்­கூ­டு­த­லான சொத்­துக்­களைக் கொண்ட மன்­னர்கள் என்ற வரி­சையில் பூமிபோல் அத்­துல்­யா­தெவ்வின் பெயரும் இடம்­பெற்­றது. செல்வச் செழிப்பு மிக்க அரண்­ம­னையை மைய­மாகக் கொண்ட வலைப்­பின்னல் பல்­துறை சார்ந்­த­வர்­களை கவர்ந்­தி­ழுக்­கக்­கூ­டிய காந்­த­மாக இருந்­தது. இரா­ணு­வத்­தையும், வணிக நிறு­வ­னங்­க­ளையும், அர­சியல் அமைப்­புக்­க­ளையும் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்கள் பலர் அரண்­ம­னைக்கு விசு­வா­ச­மா­ன­வர்­க­ளாக மாறி­யி­ருந்­தார்கள்.

படிப்­ப­டி­யாக மன்­னரைச் சுற்றி அதி­காரம் குவிந்­தது. இந்த அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­தவும் அவர் தயங்­க­வில்லை. பல சந்­தர்ப்­பங்­களில் திரை­ம­றைவில் இரா­ணு­வத்­திற்கு ஆத­ர­வாக நின்றார். ஆனால், தேவை­யான தரு­ணங்­களில் ஆயுதக் கிளர்ச்­சியில் ஈடு­பட்ட அமைப்­பு­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­தினார். 1992ஆம் ஆண்டு இரா­ணுவ ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் செய்த மக்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்கள். இந்த சம­யத்தில் துப்­பாக்கிச் சூட்டைத் தடுத்து நிறுத்தி சிவி­லியன் ஆட்­சியை உரு­வாக்­கு­வதில் மன்­ன­ருக்கு பெரும் பங்கு இருந்­தது.

இந்தக் கட்­சிகள் வலு­வான கொள்­கை­களைக் கொண்­ட­வை­யாக இருக்­க­வில்லை. வெகு­ஜனப் புகழின் அடித்­த­ளத்தில் அர­சியல் இலாபம் தேடு­ப­வை­யாக இருந்­தன. இத்­த­கைய கட்­சி­களின் ஆட்­சியில் நிலவும் ஊழல் மோச­டிகள் பற்றி மன்னர் நேரி­டை­யாக விமர்­சித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

2006ஆம் ஆண்டு பிர­தம மந்­திரி தக்சின் சின­வாத்ரா சதிப்­பு­ரட்­சியின் மூலம் ஆட்சி கவிழ்க்­கப்­பட்ட சம­யத்தில், அந்த சதிப்­பு­ரட்­சியை மன்னர் அங்­கீ­க­ரித்தார். ஜன­நா­ய­கத்தின் மீது தீரா நாட்டம் கொண்ட தேசத் தலைவர் என்ற ரீதியில் தமது அர­சியல் பிம்­பத்தைக் கட்­டி­யெ­ழுப்ப அவர் மேற்­கொண்ட முயற்­சிகள் பற்­றிய சுய­ரூபம் அப்­போது வெளிப்­பட்டு நின்­றது.

இருந்­த­போ­திலும், மன்னர் மீது மக்­க­ளுக்கு இருந்த மதிப்பு குறை­வில்லை. தாய்­லாந்து அர­ச­கு­டும்­பத்தின் மீது காலங்­கா­ல­மாக மக்கள் கொண்­டி­ருக்கும் அபி­மானம் அதற்­கு­ரிய கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம். தாய்லாந்தில் அமுலில் உள்ள சில முக்கியமான சட்டங்களும் காரணமாக இருந்திருக்கக்கூடும். இந்த சட்டங்கள் 1957ஆம் ஆண்டு தொடக்கம் அமுலில் உள்ளன. இவற்றின் பிரகாரம், முடியாட்சியின் கௌரவத்திற்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதன் பிரகாரம், அரச குடும்பத்தின் மீதான விமர்சனமும் சிறைத்தண்டனைக்கு வித்திடக்கூடும்.

இதுவரை காலமும் தாய்லாந்து தேசத்தில் ஸ்திரநிலையைப் பேணக்கூடிய அமைப்பாக அரண்மனை நோக்கப்பட்டதாயின், அதற்கு முக்கியமான காரணம் அத்துல்யாதவ் என்ற மனிதன் பற்றிய வலுவான பிம்பமாகும். அந்த ஆளுமையின் மீது தாய்லாந்து மக்களுக்கு இருந்த நம்பிக்கை, அவரது மகன் மீது இருக்குமெனக் கருத முடியாது.

இளவரசர் வஜிராலங்கோன் தமது தந்தையைப் போன்று அரசியல் சாணக்கியம் படைத்தவராகவும் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் மன்னரின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடம், தாய்லாந்தின் அரசியலை எந்தத் திசையில் செலுத்தப்போகிறது என்பது கேள்விக்குறி தான்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.