Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள்

Featured Replies

சசிகலா வலையில் சிக்குகிறாரா சசிகலா புஷ்பா? மிரட்டும் வழக்குகள்

sasikala%20pushpa%202_16485.jpg

சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிராக சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க கூறியதையடுத்து அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. வழக்கறிஞர் சுகந்தி வீடு சூறையாடப்பட்ட வழக்கிலும் அவர் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா புஷ்பா எம்.பி வீட்டில் பணியாற்றிய பானுமதி, ஜான்சிராணி ஆகியோருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஷ்வர திலகர், இவர்களது மகன் பிரதீப் மற்றும் சசிகலா புஷ்பாவின் அம்மா கௌரி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பானுமதி, ஜான்சிராணி சார்பில் நெல்லை மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுகந்தி ஆஜராகி வருகிறார். சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் சுகந்திக்கு மிரட்டல் விடுத்ததாக அவர் நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி விக்ரமனிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில்  திசையன்விளை, செல்வமருதூர், முஸ்லிம் வடக்குத் தெருவில் உள்ள சுகந்தியின் வீடு, கடந்த 11-ம் தேதி அடித்து நொறுக்கப்பட்டதுடன் சூறையாடப்பட்டதாக சுகந்தியின் உறவினர் முத்து திசையன்விளை போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலைத் தேடி வந்தனர். இதில் நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் அரி, திசையன்விளையை சேர்ந்த ராமலிங்கம் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

advocate%20suganthi_16510.jpgஇதுகுறித்து வழக்கறிஞர் சுகந்தி கூறுகையில், "வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் என்னுடைய வீடு, கார் மற்றும் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு 6 லட்சம் ரூபாய். 9 சவரன் தங்க செயினும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சசிகலா புஷ்பாவின் தூண்டுதலின் பேரிலேயே நடந்துள்ளது. ஏற்கனவே சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளர்களான அரி நாடார், திசையன்விளை ஆணைகுடியை சேர்ந்த ராக்கெட்ராஜா ஆகியோர் என் குடும்பத்தை அழித்துவிடுவதாக பல வகைகளில் மிரட்டி வந்தனர். திசையன்விளையைச் சேர்ந்த ராமலிங்கம்,  சித்திரைகுமார் ஆகியோரும் கடந்த ஒருவாரகாலமாக பைக்கில் நான் செல்லும்போது என்னை வழிமறித்து தங்களுடைய செல்போனை என்னிடம் கொடுத்து அரிநாடாரிடம் பேசுமாறு வற்புறுத்தினர். நான் பேச மறுத்தபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். என்னுடைய வீட்டை அடித்து நொறுக்கியபோது அந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையிலேயே இப்போது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்றார்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அரிநாடார், ராமலிங்கம், சித்திரைகுமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். இன்னும் சிலரைத் தேடி வருகிறோம். இந்த வழக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரின் தலையீடும் இருப்பதாக சந்தேகிக்கிறோம். கைதான ராமலிங்கமும், அந்த ஆளுங்கட்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரும் போனில் பேசியுள்ளனர். அதில் வள்ளியூர் டி.எஸ்.பியிடம் ராமலிங்கம் பேசிய விவரத்தையும், போலீஸாரின் நடவடிக்கைகள் குறித்தும் எம்.எல்.ஏ.விடம் சொல்கிறார். அதற்கு எம்.எல்.ஏ தெளிவாகவும், எந்த சிக்கலிலும் சிக்காத வகையில் முன்எச்சரிக்கையுடன் பேசுகிறார். அந்த உரையாடல் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. எம்.எல்.ஏ.வுக்கும், ராமலிங்கத்துக்கும் இடையே நடந்த உரையாடல் எப்படி வெளியானது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகந்தி கொடுத்த புகாரில், சசிகலா புஷ்பா எம்.பி தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரும் எங்களது விசாரணை வளையத்துக்குள்  வரவுள்ளார்" என்றனர்.

நாடார் மக்கள் சக்தி தரப்பில் பேசியவர்கள், "சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் என்று அரி நாடார், ராக்கெட் ராஜா ஆகியோரை பழிவாங்க போலீஸ் துடிக்கிறது. இதில் அரி நாடாரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராக்கெட் ராஜாவை கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இவர்களை வைத்து சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுத்து விடலாம் என போலீஸ் தப்பு கணக்கு போடுகிறது. ஆனால் சசிகலா புஷ்பா எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலருக்கும் பங்குள்ளது. அவர்கள் யார் என்றும் எங்களுக்குத் தெரியும். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/69851-sasikala-pushpa-is-troubled-with-multiple-cases-is-sasikala-behind-all-these.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.