Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர்

Featured Replies

வடக்கை ஆக்கிரமித்துள்ள படையினர்

 

வடக்கில் பெரும் எண்­ணிக்­கை­யான இரா­ணு­வத்­தினர், யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் நிலை­கொண்­டி­ருப்­பது மீண்டும் சர்ச்­சைக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யுள்­ளது. இதனால் வட­ப­குதி மக்கள் தங்கள் அன்­றாட கட­மை­களை செவ்­வனே மேற்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும் சுதந்­தி­ர­மாக செயல்பட முடி­யா­த­வர்­க­ளா­கவும் இருப்­ப­தாகத் தொடர்ந்து குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர்.

 வடக்கில் நிலை கொண்­டுள்ள படை­யினர் தொடர்ந்தும் தமிழ் மக்­களை சந்­தேகக்கண் கொண்டு பார்ப்­பதும், அநா­வ­சி­ய­மான புல­னாய்வு வேலை­களில் ஈடு­பட்டு வரு­வதும் பொது­வி­ட­யங்­களில் கூட தங்கள் தலை­யீ­டு­களை மேற்­கொள்­வதும் வழமையான ஒன்றாகவுள்ளது.

இவை அனைத்­துக்கும் மேலாக, அப்­பாவி பொது மக்­களின் காணி­களை கப­ளீ­கரம் செய்து அதில் வரு­டக்­க­ணக்கில் நிலை கொண்­டுள்­ளது மாத்­தி­ர­மன்றி, அவற்றை மீள வழங்­கவும் படை­யினர் மறுத்தும் வரு­கின்­றனர். அதேவேளை புதிய காணிகள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு மறைமுக­மாக இரா­ணுவ முகாம்கள் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தாகவும் கூறப்­ப­டு­கின்­றது.

மேலும் வட­ப­கு­தியில் புதிய, புதிய பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டவும், எல்­லைப்­பு­றங்­களில் சிங்­கள பெரும்­பான்மை மக்கள் குடி­யேற்­றப்­ப­டவும், தென்பகுதி மீன­வர்கள் வட­ப­குதி கடற்­ப­ரப்பில் மீன் பிடிப்­பது மாத்­தி­ர­மன்றி, வட பகுதி மீன­வர்­க­ளுக்கு இடை­யூ­றாக செயற்­ப­டு­வ­தற்கும் பின்­ன­ணி­யாக படை­யி­னரே இருந்து வரு­வ­தாக வட­ப­குதி மக்கள் பிர­தான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துள்­ளனர்.

இவை அனைத்­துக்கும் மத்­தியில் வட­ப­குதி மக்­களின் விளை நிலங்­களை அப­க­ரித்து அதில் பயி­ரிட்டு உள்ளூர் சந்­தை­களை ஆக்­கி­ர­மிப்­பதன் மூலம் உள்ளூர் விவ­சா­யி­களின் 'வயிற்­றி­ல­டிப்­ப­தாகவும்' இதனால் உள்ளூர் விவ­சா­யிகள் பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் நலி­வ­டைந்து வரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. வட­ப­கு­தியில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரித்­துள்­ள­மை­யா­னது, மக்­களின் சகஜ வாழ்­வுக்குப் பெரும் சவா­லாக அமைந்­துள்­ளமை தொடர்பில் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வரும் நிலை­யிலும், அது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தாக தெரியவில்லை.

இதே­வேளை, வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன், அண்­மையில் தனது லண்­ட­னுக்­கான விஜ­யத்தின் போதும் இரா­ணுவ பிர­சன்னம் குறித்து பிரஸ்­தா­பித்­தி­ருந்தார். வட மாகா­ணத்தில் ஒரு இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் வரை­யான இரா­ணு­வத்­தினர் நிலை கொண்­டுள்­ள­மை­யா­னது வன்­மு­றைக்­கான அடித்­த­ளத்தை இடு­வ­தாக மாத்­தி­ர­மன்றி மக்­களின் நிலங்கள், வாழ்­வா­தா­ரங்கள், வர்த்­தக வளங்கள் ஆகி­ய­வற்றை பறித்­தெ­டுப்­ப­தா­கவும் உள்­ளது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

வட­ப­குதி தமிழ் மக்­களை அடக்கி ஆள வேண்டும் என்ற மறை­முக நிகழ்ச்சி நிர­லு­ட­னேயே இது­வரை பத­விக்கு வந்த அத்­தனை அர­சு­களும் செயற்­பட்டு வந்­துள்­ள­துடன் தொடர்ந்தும் செயற்­ப­டு­கின்­றன என்று கூறும் தமிழ் மக்கள், இலங்கை இரா­ணு­வ­மா­னது முற்றுமுழு­தாக பெரும்­பான்மை சிங்­கள மக்­களைக் கொண்ட இன­ரீ­தி­யான அமைப்­பா­கவே இருந்து வரு­கின்­றது என்றும் சுட்டிக் காட்­டு­கின்­றனர். குறைந்த பட்சம் இன ரீதி­யாகவேனும் சம­நிலை பேணப்­பட்­டி­ருப்பின் சர்­வ­தே­சத்தின் சந்­தே­கப்­பார்வை, குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்தும் இலங்கை இரா­ணுவம் வில­கி­யி­ருக்க வாய்ப்­புள்­ள­தா­கவும் எடுத்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது.

உண்­மையில் கூறப்­போனால் தேசிய இனப்­பி­ரச்­சி­னையின் பின்­ன­ணியில் உரு­வான உள்­நாட்டு யுத்தம் கூட இன­ரீதி­யான சிந்­த­னை­யுடன் அடக்கி ஒடுக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி, இன்றும் கூட இன­வாதச் சிந்­த­னை­களே மேலோங்­கி­யுள்­ளதைக் காண முடி­கின்­றது. இதன் கார­ண­மா­கவே யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு அர­சாங்கம் முரண்டு பிடிப்­ப­துடன், படை­யி­னரைப் பாது­காப்­ப­தி­லேயே அர­சாங்கம் முனைப்­பாக இருந்து வரு­கின்­றது.

எவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­பினும், படை­யி­னரைப் பாது­காக்­காவிட்டால், இரா­ணு­வப்­பு­ரட்சி ஏற்­பட்டு விடும் என்று கருதும் அள­வுக்கு நிலைமை சென்­றுள்­ள­மை­யா­னது நாட்டில் நீதி, நியாயம் எந்­த­ள­வுக்கு உறுதி செய்­யப்­படும் என்ற நியா­ய­மான சந்­தே­கத்­தையும் மக்கள் மனதில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இதன் கார­ண­மா­கவே, அண்­மையில் ஜனா­தி­பதி, படை­யினர் தொடர்பில் ஆற்­றிய உரை இரு­வே­று­பட்ட கருத்­து­களை மக்கள் மத்­தியில் உரு­வாக்­கி­யுள்­ள­துடன், 'நல்­லாட்­சியின்' பயணம் தொடர்­பிலும் ஒரு­வித விச­னத்தை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

படை­யி­ன­ரையும் பேரி­ன­வா­தி­க­ளையும் சாந்­தப்­ப­டுத்­து­வதன் வாயி­லாக மாத்­தி­ரமே இந்த நாட்டில் ஆட்சி அதி­கா­ரங்­களை தக்­க­வைத்­துக்­கொள்ள முடியும் என்­பது போன்­றதோர் நிலை­மை­யா­னது, எந்த வகையில் சிறு­பான்மை தமிழ் மக்­களின் உணர்­வு­களை மதித்து அவர்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­க­ளுக்கு நீதி­யையோ, நிவா­ர­ணத்­தையோ பெற்­றுக்­கொ­டுக்கப் போகின்­றது என்ற கேள்­வி­யையும் கூடவே எழுப்­பி­யுள்­ளது.

நாட்டின் தற்­போ­தைய நடப்­புக்கள் சர்­வ­தேச ரீதி­யிலும் இவ்­வா­றான கேள்­வி­க­ளுக்கு வழி­வ­குத்­துள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

எனவே, ஐக்­கிய நாடுகள் சபை இலங்­கையின் வட­பு­லத்­தி­லுள்ள படை­யி­னரின் எண்­ணிக்­கையைக் குறைத்து மக்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு வழி­ச­மைக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ள போதிலும், அது தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

இந்­நி­லையில் இலங்­கைக்கு பத்து நாட்கள் விஜ­யத்தை மேற்­கொண்ட ஐ.நா வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடியா கருத்து தெரி­விக்­கையில், முழு­மை­யான சிங்­கள மக்­களைக் கொண்ட இரா­ணு­வத்தின் விகி­தா­சா­ரத்­துக்கு அப்­பாற்­பட்ட மிக அதி­க­ள­வி­லான பிர­சன்­ன­மா­னது வட­மா­கா­ணத்தில் இரா­ணு­வத்தை ஒரு ஆக்­கி­ர­மிப்பு படை­யாகக் காட்­டு­கின்­றது. அது மாத்­தி­ர­மின்றி இது தமி­ழர்­களை ஒரு போர்க்­கு­ண­முள்ள மக்­க­ளாக அவ­தூறு படுத்­து­வ­தா­க­வுள்­ளது என்றும் கூறி­யுள்ளார்.

இலங்­கைக்கு கடந்த 10 ஆம் திகதி விஜயம் மேற்­கொண்ட இவர் நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் சென்று அர­சியல் நிலை­வ­ரங்­களை நேர­டி­யாகப் பார்­வை­யிட்­ட­தை­ய­டுத்தே இந்த கருத்தை பகி­ரங்­க­மாகக் கூறி­யுள்ளார். அத்­துடன், பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது தமிழ் மக்­களை பெரிதும் பாதித்த ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்­றது என்று கூறி­யுள்­ள­துடன், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பலர் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும் தனது விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். மேலும் இரா­ணு­வத்­தி­னரால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்ட தமிழ்­பேசும் மக்­களின் காணிகள் மீள ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும் என்றும் கூறி­யுள்ளார்.

ஐ.நா.சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நாடி­யாவின் கூற்று பேரின வாதி­க­ளுக்கு மிகுந்த எரிச்­ச­லூட்டும் ஒன்­றாக இருந்­தாலும் கூட அதுதான் உண்­மை­யான நிலை என்­ப­தையும் உலகின் ஒட்­டு­மொத்­த­மான அபிப்பி­ரா­ய­மாக உரு­வாகி வரு­கின்­றது என்­ப­தையும் நினைவில் கொள்­வது அவ­சி­ய­மாகும்.

வடக்கில் யுத்தம் முடி­வுக்கு வந்த நிலை­யிலும் இரா­ணுவ பிர­சன்னம் எந்த வகை­யிலும் குறைக்கப்ப­டா­மையும் நல்­லாட்சி அரசின் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படு­வதில் நிலவும் தாமதங்களும் உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் 'புருவத்தை உயர்த்திப்'பார்க்கும் நிலைமையையே தோற்றுவித்துள்ளது என்பதை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும். வெறுமனே குறித்ததோர் பிரதேசத்தில் பெருமளவு இராணுவம் நிலை கொள்ளுமானால் அது ஆக்கிரமிப்பு இராணுவம் போன்றே உலகின் கண்களுக்கு காட்சியளிக்கும் என்பதையும் அரசு மறந்து போகக்கூடாது.

அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்கள், நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயற்படும் நிலைமை உருவாகும் பட்சத்திலேயே சர்வதேசத்திலிருந்தும் எழும் இத்தகைய விமர்சனங்களிலிருந்தும் விடுபடக்கூடியதாக இருக்கும். இன்றேல் முன்னைய அரசுக்கு சர்வதேச ரீதியில் உருவான களங்கத்தைப் போன்றதோர் நிலைக்கே தற்போதைய அரசும் செல்லவேண்டிய நிலை உருவாகும் என்பதே யதார்த்தம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.