Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 தொகுதி இடைத் தேர்தல்களில் சி.பி.ஐ.எம் போட்டி... உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி?

Featured Replies

3 தொகுதி இடைத் தேர்தல்களில் சி.பி.ஐ.எம் போட்டி... உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி?

manaku_14042.jpg

ஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, மக்கள் நலக்கூட்டணியை சிதறடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர். பின்னணியில் நிகழ்ந்தவை என்ன? 

மக்கள் நலக்கூட்டணி 

2016-சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நலக்கூட்டியக்கம் உருவானது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அந்த கூட்டியக்கம், மக்கள் நலக்கூட்டணியாக (ம.ந.கூ) என்று மாற்றம் பெற்றது. ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து உருவாக்கிய இந்தக் கூட்டணிக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பும் இருந்தது. ஆனால், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும், ஜி.கே. வாசன் தலைமையில் செயல்படும் தா.ம.க-வும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தபிறகு வரவேற்பு மங்கியது; மாறாக, கடும் விமர்சனங்கள் அந்தக் கூட்டணியை நோக்கி முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை எல்லாம் ஒதுக்கித் தள்ளி, ம.ந.கூ 2016 சட்டமன்றத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட ம.ந.கூ வெற்றிபெறவில்லை. அதையடுத்து, தே.மு.திக-வும், த.மா.க-வும் இந்தக் கூட்டணியில் இருந்து கழன்று கொண்டன. ஆனால், ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் அடங்கிய ம.ந.கூ வெற்றிகரமாக தொடர்ந்தது. போரட்டக் களத்தில் மக்கள் நலக்கூட்டியக்கமாகவும், தேர்தல் களத்தில் மக்கள் நலக்கூட்டணியாகவும் இந்த அணி தொடர்ந்து செயல்படும் என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.

thiruma_14088.jpg

3 தொகுதி இடைத்தேர்தல்...   

இந்த நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி, நடைபெறப்போகும், அந்தத் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்தார். அவருடைய இந்த அறிவிப்பு, தற்போது மக்கள் நலக்கூட்டணிக்குள் உருவாகப்போகும் மிகப்பெரிய விரிசலுக்கு மிகப்பெரிய காரணமாகி இருக்கிறது. ஏனென்றால், தொடக்கத்தில் இருந்தே, மூன்று தொகுதி இடைத் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரும்பின. காரணம், தஞ்சாவூரும் மதுரையும் இடதுசாரிகளுக்கு கொஞ்சம் தெம்பூட்டும் பகுதிகள்.

மாவட்டக் கமிட்டியும்... மத்தியக் கமிட்டியும்...

தஞ்சை, மதுரை மாவட்டங்களில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாவட்டக் கமிட்டிகள், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று உறுதியான முடிவை எடுத்தன. காரணம், அந்த மாவட்டங்களுக்குள் வரும் தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகள் நமக்குச் சாதகமானவை. “தேர்தலில், நாம் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், நம்முடைய செல்வாக்கை நிருபிக்க முடியும். ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து தேர்தல்களைப் புறக்கணிப்பது, அதன் கடமையையும் பொறுப்பையும் தட்டிக் கழிப்பதாகும்; மறைமுகமாக ஆளும்கட்சியை ஆதரிப்பதுபோன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும். அதனால்,  நாம் நிச்சயம் போட்டியிட வேண்டும்” என்றும் மாநிலத் தலைமைக்கு வலியுறுத்தின. கம்யூனிஸ்ட் கட்சிகளின் மத்தியத் தலைமையும் அதையே வழிமொழிந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவரை சந்திக்க மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் டெல்லி சென்றனர். அப்போது, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களும், தங்கள் கட்சியின் முடிவை வைகோவிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாத வைகோ, தமிழகம் வந்ததும், இடைத் தேர்தலை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிக்கும் என்று அறிக்கை வெளியிட்டார். 

vaiko_14387.jpg

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சலசலசப்பு...

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் இந்த முடிவு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியது. “நம் கட்சி தேர்தலில் போட்டியிடுவதா? கூடாதா? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதை வைகோ முடிவு செய்யக்கூடாது. அப்படி அவருக்கு ஒரு எண்ணம் இருந்தால், அவர் நம்மிடம் முறையாக கலந்து ஆலோசித்து, இறுதியான முடிவு எடுக்கப்பட்ட பிறகே, அறிவித்திருக்க வேண்டும். இறுதி முடிவு எட்டப்படும் முன், வைகோ தன்னிச்சையாக அறிவித்தது தவறு” என்று ஒரே குரலில் வாதிட்டனர். இதையடுத்தே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக 3 தொகுதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கெடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது.

தீவிரமாகும் முரண்பாடுகள்

காவிரிப் பிரச்னைக்காக தி.மு.க நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதியாக இருந்தார். அதையோட்டி அவர், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களோடு கடுமையாக முரண்பட்டார். அதன்பிறகு, மு.க.ஸ்டாலினுக்கும் தொல்.திருமாவளவனுக்கும் இடையில் நடைபெற்ற, “உள்ள நிலை-உண்மை நிலை...” கடிதப் போக்குவரத்து மிக முக்கியமானது.  தற்போது, மூன்று தொகுதி இடைத்தேர்தல்களை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நலக்கூட்டணியோடு முரண்பட்டுள்ளது. இதுவும் மிக முக்கியமானது. மக்கள் நலக்கூட்டணிக்குள் தீவிரமாகும் இந்த முரண்பாடுகள், விரைவில் அந்தக் கூட்டணியை சிதறடிக்கும் என்று தெரிகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/70786-cpim-decide-to-contest-bye-elections-people-welfare-alliance-collapsed.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.