Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன?

Featured Replies

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து வரவு –- செலவுத்திட்டத்தின் கரிசனை என்ன?

unnamed-b6055bfca954e2814d2a74e68c1d02f81508d401.jpg

 

போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சலுகை அளிக்­கப்­ப­ட­வில்லை. போரினால் நிர்க்­க­தி­யான மக்கள் தேசிய ரீதியில் மேற்­கொள்­ளப்­படும் திட்­டங்­க­ளுக்கு உள்­ளேயே உள்­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இதனை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இரண்­டா­வது வரவு–செல­வுத்­திட்­டமும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. காரணம், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை விசே­ட­மாகப் போசிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை வெளிப்­ப­டை­யாக வரவு–செல­வுத்­திட்­டத்தில் சுட்­டிக்­காட்ட முடி­ய­வில்லை.

போர் முடி­வ­டைந்து தற்­போது ஏழு ஆண்­டுகள் கடந்­து­விட்ட நிலை­யிலும் வடக்குக் கிழக்கில் யுத்­தத்தின் அவ­லங்கள் நிறை­வ­டைந்தே காணப்­ப­டு­கின்­றன. நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் வடக்குக் கிழக்கில் அசா­தா­ர­ண­மான நிலை­மை­களே இன்றும் உள்­ளன. இது போரின் விளை­வாக உரு­வா­னது ஆகும். இந் நிலையில் போரின் மூலம் நீர்­மூ­லஞ்­செய்­யப்­பட்ட மக்­களை மீள்­விப்­ப­தற்­கான பொறுப்பு முழு­மை­யாக அர­சுக்கு உள்­ளது. ஆனால், அப் பொறுப்பு, போருக்குப் பின்னர் உரிய முறையில் ஆட்­சியில் இருந்­த­வர்­களால் எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. கடந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் மக்­களின் இயல்­பு­வாழ்க்­கைக்கு இட­ம­ளிக்­க­வில்லை. அவ் அர­சாங்­கத்தின் கவ­னத்தில் பொரு­ளா­தார உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளான வீதி அபி­வி­ருத்தி, மின்­சார விநி­யோகம், போரில் அழி­வ­டைந்த அர­சாங்க நிர்­வாகக் கட்­ட­டங்­களை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல், நீதி­மன்றக் கட்­டடத்­தொ­கு­தி­களை அமைத்தல் போன்­ற­னவே காணப்­பட்­டன. எனினும், பாதிக்­கப்­பட்ட மக்­களை மீள்­விப்­ப­தற்குப் பொருத்­த­மான திட்­டங்கள் இருக்­க­வில்லை. அவ்­வா­றான ஓர் நிலை ஆட்சி மாற்­றத்தின் பின்னர் மாற்­றத்­திற்கு உள்­ளாக வேண்டும் என்­பதே மக்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

போரினால் சக­ல­தையும் இழந்­த­வர்­க­ளி­டத்தில் உற்­பத்­தியை முன்­னெ­டுக்கும் அள­விற்கு நிலை­மைகள் காணப்­ப­ட­வில்லை. நுகர்வுக் கலா­சாரம் மாத்­தி­ரமே அவர்­க­ளிடம் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. இதனால் தமது சொத்து இருப்­புக்­களைக் கொண்டு வரு­மா­ன­மின்றி பலர் வாழ­வேண்­டி­யுள்­ளது. மேலும், பலர் சொத்­தி­ருப்­புக்கள் இல்­லாத நிலையில் அரைப்­பட்­டினி கிடக்­கின்­றனர். வாழ்­வா­தா­ரத்­திற்­காக ஏங்­கு­கின்­றனர். இப்­ப­டி­யான ஓர் துர்ப்­பாக்­கியம் மிக்க நிலையில், கடந்த க் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட உட்­கட்­டு­மான வச­திகள் பல தென்­னி­லங்கை பல்­தே­சியக் கம்­ப­னி­க­ளுக்கும் பெரும் வர்த்­த­கர்கள் சில­ருக்கும் தமது வியா­பா­ரங்­களை வடக்கில் மேம்­ப­டுத்­து­வ­தற்­கான சந்­தர்ப்­ப­மா­கவே அமைந்­துள்­ளன. மாறாக ராஜபக் ஷவின் உட்­கட்­டு­மான அபி­வி­ருத்­திகள் மக்­களைப் போசிப்­ப­தற்­கான வழி­மு­றை­க­ளாக பெரும்­பாலும் அமை­ய­வில்லை.

அமைக்­கப்­பட்ட வீதிகள் கூட தென்­னி­லங்­கையில் இருந்து அதி­க­ப­டி­யான சுற்­றுலா பய­ணிகள் வந்­த­டைந்து செல்­வ­தற்கு வாய்ப்­பாக இருந்­ததே தவிர உள்ளூர் உற்­பத்தி அதி­க­ரிப்­பிற்கு ஏது­வா­க­வில்லை. வடக்­கிற்கு வருகை தந்த சுற்­றுலா பய­ணி­களால் வடக்கு மக்கள் வரு­மான மீட்ட முடி­ய­வில்லை. கார­ண­மாக படை­யி­னரே சுற்­று­லாத்­து­றையில் அதிகம் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றனர்.

இவ்­வா­றான நிலை­மைகள் மாற்­ற­ம­டை­ய­ வேண்­டிய அவ­சியம் உள்­ளது. முன்னர் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் போன்ற திட்­டங்­களை மஹிந்த அர­சாங்கம் முன்­வைத்­தி­ருந்­தது. இவை எல்லாம் போரின் இழப்­புக்­களை மூடி­ம­றைப்­ப­தற்­கான உத்­தி­களைக் கொண்ட திட்­டங்­க­ளா­கவே காணப்­பட்­டன. மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான திட்­டங்­க­ளாகக் அவை காணப்­ப­ட­வில்லை. இப்­ப­டி­யான நிலையில் கடந்த காலங்­களில் இருந்து போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் மீள்­வ­தற்கு ஏற்ற திட்­டங்­களை ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ஏற்­ப­டுத்­த­வேண்­டிய பொறுப்பு நடை­மு­றையில் உள்ள அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. இதனை மக்கள் எதிர்­பார்க்­கின்­றனர். எனினும், அதற்­கான வெளிப்­ப­டை­யான ஒதுக்­கீ­டுகள் இவ் அர­சாங்­கத்தின் வரவு -– செல­வுத்­திட்­டத்தில் காணப்­ப­டாமை குறிப்­பி­டத்­தக்­கது.

இன்­றைய நிலையில் நாட்டில் வறுமை மிக்க மாவட்­ட­மாக முல்­லைத்­தீவு மாவட்டம் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. எனவே, அர­சாங்­கத்தின் கொள்­கைகள் வரவு -– செல­வுத்­திட்டம் போன்­ற­வற்றின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­படும்போது போரின் கார­ண­மாக ஏற்­பட்ட வறு­மையைத் நிவர்த்­திப்­ப­தற்­கான வேலைத்­திட்­டங்கள் அவ­சி­ய­மா­க­வுள்­ளன. தமிழ் மக்கள் அர­சாங்­கத்­திடம் இருந்து பொரு­ளா­தார ரீதியில் குடும்­பங்­களின் வரு­மா­னங்­களை உயர்த்­தக்­கூ­டிய திட்­டங்­களை எதிர்­பார்க்­கின்­றனர்.

இவ்­வாறு மக்கள் எதிர்­பார்க்­கையில், வறுமை ஒழிப்­பிற்­காக தேசிய ரீதியில் வகுக்­கப்­படும் திட்­டங்­க­ளுக்­குள்­ளாக போரினால் நிர்­மூ­லஞ்­செய்­யப்­பட்ட மக்­களை மீள்­விக்க முடி­யாது. இது கடந்­த­கால அனு­ப­வமும் கூட. இந் நிலையில் எதிர்­வரும் ஆண்டில் வரவு -– செல­வுத்­திட்­டத்தின் வாயி­லாக வடக்கில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திட்­டங்கள் பற்றி கவ­னத்­தினைச் செலுத்­தினால், வரவு – செல­வுத்­திட்­டத்தில் கீழ்க்­காணும் திட்­டங்­க­ளுக்கே நிதி ஒதுக்க முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­துடன் அவை பற்றி விப­ரிக்­கவும் பட்­டுள்­ளது.

வடக்கில் கிளி­நொச்சி, மன்னார் ஆகிய இடங்­களில் பற்­றுச்­சீட்டு திட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற களஞ்­சிய சாலை­களை அமைப்­பது பற்றி ஏற்­க­னவே அர­சாங்கம் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளமை வரவு -– செலவுத் திட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சீனி­யினை உற்­பத்தி செய்யும் முக­மாக பொறித்­தொ­கு­தி­களில் முத­லி­டப்­ப­ட­வுள்ள இடங்­களில் கிளி­நொச்­சியும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடல்­தொழில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­ப­தற்­கான நீரியல்வள கைத்­தொழில் வல­யங்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு 500 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிதியில் வடக்கில் மன்னார் மாவட்­டமும் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.

10 கரை­யோர மாவட்­டங்­களில் வீட­மைப்பு மற்றும் வாழ்­வா­தார அபி­வி­ருத்­தி­யினை மைய­மாகக் கொண்டு மீன்­பி­டிக்­கி­ரா­மங்கள் விருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்கு 1,200 மில்­லியன் ஒதுக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. இம் மாவட்­டங்­களில் யாழ்ப்­பாண மாவட்­டமும் உள்­ள­டங்­கு­கின்­றது.

நீர்ப்­பா­சனம் மற்றும் மகா­வலி அபி­வி­ருத்­தியின் கீழ் பாரிய பல­நோக்கு நீர்ப்­பா­சன கருத்­திட்­டங்­களை நிறை­வு­செய்­வ­தற்கு 60045 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் வடக்குக் கிழக்கு மக்­களும் பய­ன­டைவர் என்­பது கூறப்­பட்­டுள்­ளது.

விசேட சிறுவர் பரா­ம­ரிப்புத் தொகு­தி­களை வைத்­தி­ய­சா­லை­களில் அமைப்­ப­தற்கு 1000 மில்­லியன் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதற்குள் யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லையும் உள்­ள­டங்­கு­கின்­றது.

வவு­னியா சுதந்­திர வர்த்­தக வல­யத்­தினை தாபிப்­ப­தற்கு அரச தனியார் பங்­கேற்­பு­க­ளுக்கு ஊக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாட்டில் தூய நீருக்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள கருத்­திட்­டங்­களில் யாழ்ப்­பாணம் - கிளி­நொச்சி குடி நீர்­வ­ழங்கல் திட்­டமும் உள்­ள­டங்­கு­கின்­றமை பற்றி வரவு - செல­வுத்­திட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அடுத்து யாழ்ப்­பா­ணத்தில் நீர்­சுத்­தி­க­ரிப்புப் பொறி­களைத் தாபிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­களை ஆராய்சி செய்ய 250 மில்­லியன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிதி புத்­தளம் மாவட்­டத்­திற்­கு­மா­னது.

வடக்குக் கிழக்­கிற்கு பொருத்­த­மான வீடு­க­ளுக்கு கடு­மை­யான பற்­றாக்­குறை பற்றி சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 50 ஆயிரம் வீட்­டுத்­திட்­டத்­தினை துரி­தப்­ப­டுத்­து­வ­தோடு, அதற்­காக 5000 மில்­லி­யனை ஒதுக்­கு­வ­தற்கும் பரிந்­து­ரை­செய்­யப்­பட்­டுள்­ளது.

கஷ்ட நிலையில் உள்ள செய்­தி­யா­ளர்­க­ளுக்கு உப­க­ர­ணங்­களைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 100 சத­வீத வட்டி மானியம் வழங்­கப்­ப­டு­கின்­றது. இதில் குறிப்­பாக, வடக்குக் கிழக்கு செய்­தி­யா­ளர்­க­ளுக்கு 25 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.

சமா­தானம் மற்றும் சக­வாழ்­வினை உரு­வாக்­கு­வ­தற்­கான நிகழ்ச்­சித்­திட்­டங்­களை ஏற்­பாடு செய்­வ­தற்கு 50 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது குறிப்­பாக, வடக்குக் கிழக்­கிற்கு எனக் கூறப்­பட்­டுள்­ளது.

வல்­வெட்­டித்­து­றையில் குமார் ஆனந்தன் நீச்சல் தடா­கத்­தினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக 25 மில்­லியன் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.முல்­லைத்­தீவு மற்றும் மாங்­குள நீதி­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தி­களை அமைப்­ப­தற்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, யாழ்ப்­பாண நீதி­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியை தன்­னி­யக்­க­மாக்­குதல் செயற்­பா­டு­க­ளுக்­கா­கவும் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ். மாவட்ட அபி­வி­ருத்­திக்கும் நிதி பெற்­றுக்­கொ­டுப்போம் எனக் கூறப்­பட்­டுள்­ளது. யாழ். மாவட்­டத்தின் தபால் வலை­ய­மைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக 10 மில்­லி­யனை ஒதுக்­கு­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.


இவற்­றுக்கு மேல­தி­க­மாக தேசிய அளவில் நிறை­வேற்ற எத்­த­னிக்­கப்­படும் திட்­டங்­களின் ஊடா­கவும் வடக்­கிற்கு நிதிகள் வந்­த­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளன. எது எப்­ப­டி­யி­ருந்­த­போதும் விசே­ட­மாக போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீள்­வாழ்­வுக்­காக என்ன வகை­யான வேலைத்­திட்­டத்­தினை அர­சாங்கம் கொண்­டுள்­ளது என்­பதே கேள்­வி­யா­க­வுள்­ளது. வரவு - செல­வுத்­திட்­டத்தில் அர­சாங்­கத்தின் கொள்கை தங்­கி­யுள்­ளது. 

 வடக்­கிலும் கிழக்­கிலும் குறிப்­பாக, போரினால் வித­வை­யான பெண்கள் வாழ்­வா­தா­ர­மின்றி வாழ்­கின்­றார்கள். கிட்­டத்­திட்ட 80 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட பெண்கள் வித­வை­க­ளாக உள்­ளனர் என்­பதை அர­சாங்­கத்­த­க­வல்­களே உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. அது­போன்று போரினால் அங்­க­வீ­ன­முற்ற மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் அதி­க­மாக இருக்­கின்­றனர். முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் இருக்­கின்­றனர். இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் யுத்­தத்­தினால் அங்­க­வீ­ன­முற்று முழு­நேர பரா­ம­ரிப்பில் இருக்­க­வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்­ளனர். ஆயி­ரக்­க­ணக்­கான கட்­டா­ய­மாகக் காணாமல் போனவர் இருக்­கின்­றார்கள். காணமால் போன­வர்­க­ளுக்­கான நப­ருக்­கான நட்ட ஈட்டை தமிழ் மக்கள் ஏற்க மட்­டார்கள். ஆனால், பிள்­ளைகள் தம்­முடன் இல்லை என்­பதால் பாதிக்­கப்­பட்­டுள்ள குடும்­பங்­க­ளுக்­கான வாழ்­வா­தார உத­வி­களை ஏதோ­வொ­ரு­வ­கையில் அர­சாங்கம் வழங்­க­வேண்­டிய தேவை உள்­ளது.

அர­சாங்கம் வடக்குக் கிழக்கில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு வெகு­வான மாற்றல் கொடுப்­ப­ன­வு­க­ளையும் மானி­யங்­க­ளையும் வரவு - செலவுத் திட்­டத்தில் வழங்­க­வேண்­டி­யுள்­ளது. யுத்­தத்­தினால் வடக்குக் கிழக்கில் இலட்­சக்­க­ணக்­கான தென்­னைகள் அழிக்­கப்­பட்டு விட்­டன. அவற்­றினை மீள நாட்­டு­வது பற்றி அர­சாங்­கத்தின் சம்­பா­ஷ­ணைகள் இல்லை. ஆனால் சமர்ப்­பிக்­கப்­பட்ட வரவு - செல­வுத்­திட்­டத்தில், தென்­னை­க­ளுக்­கான பூச்­சித்­தாக்கம் பற்றி பேசப்­ப­டு­கின்­றது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் உயர்­பா­து­காப்பு வலய நிலங்கள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விடுவிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குச் செல்வதற்கான இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும். அதேவேளை, யுத்த நிலங்களாகக் காணப்பட்ட நிலங்களில் விவசாயம் ஆரம்பிக்க வழி ஏற்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கடல்தொழில் துறைமுகங்களையும் மீனவர் தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அழிவடைந்துள்ள சிறிய நடுத்தரக் கைத்தொழில்கள் மீது அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

வடக்குக் கிழக்கின் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் தலைமைத்துவங்களாக தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் தற்போது அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் கடந்த காலத்தினைப் போலல்லாது வரவு - செலவுத்திட்ட விவாதத்தில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையினை தரவுகளுடன் ஆய்வுரீதியாக ஆதாரபூர்வமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரமுடியும். இந் நிலையில் விவாதங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை போசிப்பதற்கான உறுதியான நிலைத்தகு திட்டங்கள் பற்றி பாராளுமன்றில் விவாதிக்கப்படுவதற்கான அவசியங்கள் உள்ளன. அரசாங்கமும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கான திட்டங்களை வரவு - செலவுத்திட்டத்தில் சரியாக உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-13#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.