Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா

Featured Replies

'மறுபிறவி எடுத்துள்ளேன்' - முதல்வர் ஜெயலலிதா

jayalalithaa-1_4_20596.jpg

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். 

அதிமுகவின் தொண்டர்களுக்கு அவர், 'அன்பு மிகுதியால் கழகத்தினர் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கிறது. வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அதிமுகவினரின் உழைப்பு விசுவாசமும் பயன்பட வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

'வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. எண்ணமும், இதயமும் மக்களுடனேயே இருக்கிறது.' என்றும் தெரிவித்துள்ளார். 

இவை அனைத்தையும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

 

1_20388.jpg 2_20557.jpg

(முதலில் கையெழுத்து இல்லாமல் அறிக்கை வெளியானது. பின்னர் கையெழுத்துடன் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது)

http://www.vikatan.com/news/tamilnadu/72302-chief-minister-jayalalitha-says-she-has-fully-recovered---from-apollo-hospital.art

  • தொடங்கியவர்

பிரார்த்தனைகளால் மறுபிறவி எடுத்துள்ளேன் - ஜெயலலிதா பெயரில் அறிக்கை

 

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது.

 
 

அனைவரது பிரார்த்தனையாலும், தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால், அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையொப்பம் இடம்பெறவில்லை. பெயர் மற்றும் பதவி மட்டுமே குறி்ப்பிடப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.

இடைத் தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவுமே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

http://www.bbc.com/tamil/india-37966801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.