Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டும்

Featured Replies

மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டும்

covery-party9491d5-1f-918a2ad8c3965886699fc550fd8730ea79adac85.jpg

 

இ ன்று தமி­ழக மக்­க­ளிடம் மட்­டு­மன்றி உலகத் தமி­ழர்கள் அனை­வ­ரி­டமும் எழுந்­தி­ருக்கும் ஒரே கேள்வி, தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா எப்­படி இருக்­கிறார், என்­ப­துதான். ஆனால், பல்­வேறு தரப்­பி­னரும் பல கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். உண்­மை­யான நிலைமை என்­ன­வென்­பதை ஆதா­ர­பூர்­வ­மாக பொறுப்பு வாய்ந்­த­வர்கள் இது­வரை வெளிப்­ப­டுத்­தா­ததால் அனை­வரும் குழப்­பத்­திலும், சந்­தே­கத்­தி­லுமே இருக்­கின்­றனர். பல்­வேறு வதந்­தி­களும் பரவி வரு­கின்­றன.

அப்­பலோ வைத்­தி­ய­சாலை தலைவர் டொக்டர் பிரதாப் சி. ரெட்டி ஒன்று சொல்­கிறார். அ.தி.மு.க. முக்­கி­யஸ்­தர்­க­ளான பொன்­னையன் மற்றும் சி.கே.சரஸ்­வதி போன்­ற­வர்கள் வேறொன்றை கூறு­கின்­றனர். எதை நம்­பு­வது? எதை நம்­பா­தித்­தி­ருப்­பது? என்று மக்கள் குழம்­பிப்போய் இருக்­கின்­றனர்.

முதல்வர் ஜெய­ல­லிதா சுக­யீ­ன­ம­டைந்த நிலையில் அப்­பலோ வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, ஏறக்­கு­றைய இரண்டு மாதங்­க­ளா­கின்­றன. கடும் சுக­யீ­ன­முற்­றி­ருந்த அவ­ருக்கு லண்டன், சிங்­கப்பூர் மற்றும் டில்­லி­யி­லுள்ள எய்ம்ஸ் வைத்­தி­ய­சாலை டொக்­டர்கள் சிகிச்­சை­ய­ளித்து பூரண சுக­ம­டைந்­துள்ளார். எனவே, வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து தீபா­வ­ளியை அவ­ரது சென்னை போயஸ் கார்டன் வீட்டில் கொண்­டா­டுவார் என்று தீபா­வ­ளிக்கு முன்­னரே கூறினர். தீபா­வளி முடிந்து மூன்று வாரங்­க­ளா­கி­விட்­டன. இது­வரை வீடு வந்து சேர­வில்லை.

இது­போன்று இன்னும் எத்­தனை நாட்­க­ளுக்கு சொல்லப் போகி­றார்­களோ தெரி­யாது. ஆனால் எது­வாக இருந்­தாலும் மக்­க­ளிடம் உண்­மையை தெரி­வித்து விட்டால் அவர்கள் குழப்­ப­ம­டை­யாமல் இருப்­பார்­க­ளல்­லவா?

ஆரம்­பத்தில் ‘காய்ச்­ச­லுக்­காவே அப்­ப­லோவில் அனு­ம­திக்­கப்­பட்டார்’ என கூறப்­பட்­டது. அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளிக்க இங்­கி­லாந்து டொக்டர் வருகை தந்தார். பின்னர் சிங்­கப்பூர் வைத்­தி­யர்கள் வந்­தனர். தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் டொக்­டர்கள் என்று பல தரப்­பி­னரும் அப்­பலோ வந்து சிகிச்­சை­ய­ளித்­தனர்.

காய்ச்சல் என்று கூறி­ய­வர்கள் பின்னர் நோய்த் தொற்று என்­ற­துடன், இறு­தியில் சிறு­நீ­ரக நோய்த்­தொற்று என்றும் கூறி­னார்கள். அவ­ருக்கு செயற்கை சுவாசக் கரு­விகள் பொருத்­தப்­பட்டு, அத­னூ­டா­கவே சுவா­சிக்­கிறார் என்றும், பின்னர் அக்­க­ருவி அகற்­றப்­பட்டு இயற்­கை­யாக சுவா­சிக்­கிறார் என்றும் கூறினர். இதனால் விரைவில் வீடு திரும்பி விடு­வா­ரென அ.தி.மு.க. பிர­மு­கர்கள் கூறினர்.

ஆனால், அவர் இது­வரை வீடு திரும்­ப­வில்லை. இது­பற்றி எவரும் உறு­தி­யாக கூறவும் முன் வரு­கி­றார்­க­ளில்லை. பெரும் மர்­ம­மா­கவே இருந்து வரு­கி­றது.

‘முதல்வர் ஜெய­ல­லிதா குண­ம­டைந்து விட்டார். எனவே, எப்­போது வீடு திரும்ப வேண்­டு­மென்­பதை முதல்­வரே தீர்­மா­னிக்க வேண்டும்' என்று அப்­பலோ வைத்­தி­ய­சாலை தலைவர் டொக்டர் பிரதாப் சி. ரெட்டி கடந்­த­வாரம் தெரி­வித்­தி­ருந்தார். வைத்­தி­ய­சா­லையின் தலை­வரே இதனை அறி­வித்த பின்னர், இன்னும் ஏன் அங்கு இருக்க வேண்டும்? வைத்­தி­யர்கள் அறி­வித்த பின்பும் அங்­கி­ருந்து வீட்­டுக்கு அழைத்து வரப்­ப­டா­ததன் காரணம் என்ன?

இது­பற்றி அ.தி.மு.க. முக்­கி­யஸ்­தர்­களோ அல்­லது ஜெய­ல­லி­தாவை அரு­கி­லி­ருந்து கவ­னித்துக் கொண்­டி­ருக்கும் அவ­ரது தோழி சசி­கலா நட­ரா­ஜனோ இது­வரை வாய்­தி­ற­வா­தி­ருப்­பது ஏன்? ஜெய­ல­லிதா சுக­ம­டைந்­து­விட்­டா­ரென வைத்­தி­யர்­களே அறி­வித்த பின்னர் ஏன் அவரை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ருக்க வேண்டும் என்­பது பொது மக்­களின் கேள்­வி­யாகும்.

ஜெய­ல­லிதா ஒரு சாதா­ரண பிர­ஜை­யல்ல. தமி­ழக மாநில முதல்வர். அவ­ரைப் ­பற்­றியும், அவ­ரது உடல் நலத்தைப் பற்­றியும் அறிந்­து­கொள்ள அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் உரி­மை­யுள்­ளது. எனவே, தமி­ழக அரசு இது­பற்றி பொது மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும்.

வைத்­தி­ய­சா­லையில் இருக்கும் ஜெய­ல­லிதா நன்­றாக பேசு­கிறார், சாப்­பி­டு­கிறார் என்­றெல்லாம் அறிக்கை விடு­வதை சீ.கே.சரஸ்­வதி, பொன்னையன் ஆகியோர் வழக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். கடந்­த­ வாரம் மர­ண­மான விசா­லாட்சி நெடுஞ்­செ­ழி­யனின் மறைவு குறித்து, ‘அவ­ரது உற­வி­னர்­க­ளுக்கு ஜெய­ல­லிதா தனது அனு­தா­பத்தை தெரி­வித்தார்’ என்று ஊட­கங்­களில் செய்­திகள் வந்­தன.

அத்­துடன் அர­வக்­கு­றிச்சி, தஞ்­சாவூர், திருப்­ப­ரங்­குன்றம் மற்றும் நெல்­லித்­தோப்பு தொகு­தி­க­ளுக்கு நடை­பெற்ற இடைத்­தேர்­தலில் போட்­டி­யிட்ட அ.தி.மு.க.வேட்­பா­ளர்­களை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும் என்று அப்­ப­லோ­வி­லி­ருந்து அ.தி.மு.க. தொண்­டர்­க­ளுக்கு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டி­ருந்தார் என்றும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

விசா­லாட்சி நெடுஞ்­செ­ழியன் மறை­வுக்கு அனு­தாபம் தெரி­விக்­கவும், தொண்­டர்­க­ளுக்கு அறிக்­கையும் விடுக்க முடி­யு­மானால், ஏன் தனது தற்­போ­தைய உடல்­நிலை பற்றி பொது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த முடி­யாது?

இப்­போ­தெல்லாம் தகவல் தொழில்­நுட்பம், ஊட­கங்கள் என்­பன மின்னல் வேகத்தில் செயற்­ப­டு­கின்­றன. சில விநா­டிகள் மட்டும் தொலைக்­காட்­சியில் தோன்றி பொது­மக்­களின் சந்­தே­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­க­லா­மல்­லவா? அதைச் செய்­யா­தது ஏன்? அவ்­வாறு செய்­வ­தற்கு சசி­கலா நட­ரா­ஜனோ அல்­லது பொன்­னையன், சரஸ்­வதி போன்­ற­வர்களோ முன்­வரா­தது ஏனென்­பது மக்­களின் கேள்­வி­யாகும்.

தங்கள் உடல் நிலை தொடர்பில் இந்­திய அர­சியல் தலை­வர்கள் இர­க­சி­ய­மாக வைத்­தி­ருப்­பது புதி­தல்ல. இது அர­சியல் நல­னுக்­கா­கவே செய்­யப்­ப­டு­கி­றது. குறிப்­பாக ஆட்­சியில் நீடிப்­ப­தற்­கா­கவும், அரச வரப்­பி­ர­சா­தங்­களை அனு­ப­விப்­ப­தற்­கா­க­வுமே இவ்­வாறு செய்­கின்­றனர். ஆனால், இதற்கு விதி­வி­லக்­காக இந்­திய (மத்­திய அரசின்) வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது உடல்­நலன் குறித்து வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­துள்ளார்.

தற்­போது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கும் அவர், ‘சிறு­நீ­ரக செய­லி­ழப்பின் கார­ண­மாக சிகிச்­சைக்­காக டெல்லி எய்ம்ஸ் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளேன்’ என்று இணை­யத்­த­ளங்­க­ளி­னூ­டாக பதி­விட்­டுள்ளார். இது ஒரு­வெ­ளிப்­படைத் தன்­மை­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது. நோயினால் பாதிக்­கப்­பட்டு, செயற்­ப­ட­மு­டி­யாத நிலை­யி­லி­ருக்கும் பல அர­சியல் தலை­வர்கள் தமக்கு ஒன்­று­மில்லை, நல­மா­கவே இருப்­ப­தாக அறி­வித்து உண்­மையை மூடி­ ம­றைத்­துக்­கொண்­டி­ருக்கும் நிலையில், தமது நோயை வெளிப்­ப­டை­யா­கவே அறி­வித்­துள்ள சுஷ்­மாவின் வெளிப்­ப­டைத்­தன்மை பாராட்­டுக்­கு­ரி­யது. அவர் மீதான அனு­தா­பமும் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கி­றது. ஆனால், 2 மாதங்­க­ளாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெய­ல­லி­தாவின் உண்­மை­யான உடல்­நிலை பற்றி இது­வரை தகவல் வெளி­யி­டப்­ப­டாமல் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை மர்­ம­மா­கவே இருக்­கி­றது.

யாரு­டைய நல­னுக்­காக இவ்­வாறு மறைக்­கப்­ப­டு­கி­றது? கம்­யூ­னிஸ நாடுகள், சர்­வா­தி­கார நாடு­களில் சுக­யீ­ன­முற்­றி­ருக்கும் தலை­வர்­களின் உடல் நிலை­பற்­றிய அறி­விப்­புக்­களை வெளி­யி­டாமல் வைத்­தி­ருப்­பார்­க­ளென்­பதை அறிந்­தி­ருக்­கின்றோம். அர­சியல் ஸ்திரத்­தன்மை கரு­தியே இவ்­வாறு செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­வதை கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். ஆனால், ஒரு ஜன­நா­யக நாட்டில் இவ்­வாறு உண்­மைத்­தன்மை மறைக்­கப்­ப­டு­வ­தற்கு காரணம் என்ன என்­பதே பொது மக்­களின் கேள்­வி­யாக உள்­ளது.

ஜெய­ல­லிதா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்தே அவர் நலன்­பெற வேண்­டு­மென்று பல்­வேறு தரப்­பி­னரும் பிரார்த்­த­னைகள், வேண்­டு­தல்கள் செய்து வரு­கின்­றனர். அப்­பலோ வைத்­தி­ய­சாலை முன்­றலில் தினமும் பூஜைகள், வேள்­விகள், பிரார்த்­த­னைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. சகல மதத்­தி­னரும் தத்­த­மது மத அனுஷ்­டா­னங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

ஜெய­ல­லி­தாவின் தீவிர விசு­வா­சிகள் பல்­வேறு வழி­பாட்­டுத்­த­ளங்­களில் தங்­களை வருத்திக் கொண்டு, (வேல் குத்துதல், மண்­சோறு சாப்­பி­டுதல்,தேங்காய் உடைத்தல்) ஜெய­ல­லிதா நலம்­பெற பிரார்த்­தனை செய்­கின்­றனர். சிலர் துயரம் தாங்­காமல் தற்­கொலை முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்­டனர். இவை­யெல்லாம் விளை­யாட்­டல்ல. இவர்கள் தேவை என்ன? தங்­க­ளது தலைவி பூரண குண­ம­டைந்து திரும்ப வேண்டும் என்பதுதான்,

எனவே, இவ்வாறான விசுவாசிகள் பொதுமக்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவதற்காகவாவது உண்மைத் தன்மையினை வெளிப்படுத்த வேண்டும். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழக முதல்வரின் உடல்நலம் பற்றி வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமென்பதே தமிழ் மக்களின் வேண்டுகோளாகும். தமிழக அரசும், அதிகாரிகளும் மறைந்தாலும் கூட, சட்டம் – நீதித்துறை மற்றும் மத்திய அரசு போன்றவை என்ன செய்கின்றன?

ஏன் உண்மையை மறைக்கின்றன? என்ற பொதுமக்களின் கேள்வி நியாயமானது தான். பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதுடன், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உரியவர்களின் பொறுப்பு என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

தனிப்பட்ட ஒரு சிலரின் நலனுக்காகவோ, அரசியல் இலாபங்களுக்காவோ அன்றி, நாட்டு மக்கள் நலன்கருதி உண்மை வெளியிடப்பட வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுமா?

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.