Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக இடைத்தேர்தல் முடிவுகள். (அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ADMK celebrates its leading

3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை... பட்டாசு வெடித்து தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

சென்னை: கடந்த 19ம் தேதி நடைபெற்ற அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி இருந்தனர். தேர்தல் முடிவுகள் அனைத்திலும் அதிமுகவே முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவின் மகளிர் குத்தாட்டம் போட்டு அதிமுகவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நல்ல செயல்களுக்காகவே இந்த வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகவும், அவர்தான் தொடர்ந்து வெற்றி பெறுவார் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DMK alliance's dream of getting 3 digit win

திமுகவின் 3 டிஜிட் வெற்றி கனவு கலைந்தது.. அதிமுகவுக்கு இரு புது வரவு!

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு 2016, மே 16ஆம் தேதி நடைபெற்ற 15வது சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகின. இதில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை சட்டப்பேரவை தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்ததால் மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் அதிமுக கூட்டணி-134, திமுக கூட்டணி - திமுக-89, காங்கிரஸ்-8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1 வெற்றி பெற்றிருந்தன. வெற்றி பெற்ற 134 தொகுதிகளில் அதிமுக கூட்டணியினரும் இரட்டை இலை சின்னத்தில் வென்றனர். மொத்தமாக திமுக கூட்டணி வென்ற தொகுதி எண்ணிக்கை 98 ஆகும்.

இருப்பினும் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்றில் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்று, திமுக கூட்டணி வென்ற இடங்களை மூன்று இலக்கமாக உயர்த்திக்கொள்ள அக்கூட்டணி வெகுவாக பாடுபட்டது.

ஆனால், மூன்று தொகுதிகளிலுமே அதிமுக முன்னிலையில் இருப்பதால், திமுக கூட்டணியின் கனவு கலைந்துவிட்டது. அதிமுகவை பொறுத்தளவில் அது தனித்து 131 தொகுதிகளில் வென்றிருந்தது. 3 கூட்டணி கட்சிகள் தலா 1 இடத்தில் வென்றிருந்தன. அதேநேரம், திருப்பரங்குன்றம் அதிமுக எல்எல்ஏ சீனிவேல் மரணம் அடைந்தார். இதனால் அதிமுக எம்எல்ஏ பலம் 130 ஆக குறைந்தது.

இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும், இடைத்தேர்தலை சந்தித்த திருப்பரங்குன்றத்தில் அதிமுகவுக்கு வெற்றி முகமாகியுள்ளது. எனவே, அதிமுக 133 தொகுதிகளில் வெற்றியை சுவைக்க உள்ளது. இதனால் கடந்த பொதுத் தேர்தலை விட அதிமுகவுக்கு கூடுதலாக 2 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.