Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி

Featured Replies

நெல்லித்தோப்பில் நாராயணசாமி அமோக வெற்றி

 

 
நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர்.
நாராயணசாமி வெற்றியைக் கொண்டாடும் காங்கிரஸ் தொண்டர்கள் | படம்: எஸ்.செந்தளிர்.
 

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதுச்சேரி முதல்வர் பதவியை நாராயணசாமி தக்கவைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடந்தது.

இதில், இறுதி நிலவரப்படி தஞ்சையில் 69, அரவக்குறிச்சியில் 82, திருப்பரங்குன்றத்தில் 71 மற்றும் நெல்லித்தோப்பில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பலத்த பாதுகாப்போடு காலை 8 மணிக்கு தொடங்கியது.

தேர்தல் பொதுப்பார்வையாளர் அலோக் அவாஸ்தி, மாவட்ட தேர்தல் அதிகாரி சத்யேந்திர சிங் துர்சாவத், தொகுதி தேர்தல் அதிகாரி மலர்க்கண்ணன் முன்னிலையில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.

26 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 9 மேஜைகளில் வைத்து எண்ணப்பட்டன. மொத்தம் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

9 மேஜைகளில் நடந்த வாக்கு எண்ணிக்கையிலும் தொடக்க வாக்கு எண்ணிக்கை முதலே நாராயணசாமி முன்னிலை பெற்றிருந்தார்.

மூன்றாவது மற்றும் இறுதி சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாராயணசாமி பெற்ற மொத்த வாக்குகள்: 18,709. அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர்- 7565 வாக்குகள் பெற்றார். நோட்டாவில் 334 வாக்குகள் பதிவாகின.

சர்வீஸ் வாக்காளர்களின் பதிவு செய்த வாக்குகளில் 3ல் இரண்டை நாராயணசாமி பெற்றார்.

இடைத்தேர்தல் பின்னணி:

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடாத நிலையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார். 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏவாக வேண்டும் என்ற நிலையில் நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த அக்டோபர் 26-ம் தேதி தொடங்கி நவம்பர் 2-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர், ஐக்கிய ஜனதாதளம் சார்பில் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சியானது மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த விடுதலைச்சிறுத்தைகள், சிபிம், சிபிஐ கட்சியை சந்தித்து ஆதரவு கோரின. சிபிஎம் யாருக்கும் ஆதரவு தரவில்லை. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தன. அதேபோல அதிமுக கடுமையாக விமர்சித்து வந்த என்.ஆர்.காங்கிரஸ் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து ரங்கசாமி பிரச்சாரம் செய்தார். பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் கடும் போட்டி உருவானது.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மொத்த வாக்காளர்களான 31362 பேரில் 26895 பேர் வாக்களித்தனர். இதில் 12551 ஆண் வாக்காளர்கள் (83.99 சதம்), 14,344 வாக்காளர்கள் (87.37 சதம்) என மொத்தம் 85.76 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் மொத்தம் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் இடைத்தேர்தல்:

நெல்லித்தோப்பு தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்தித்தது. புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற 7வது இடைத்தேர்தலாகும். நெல்லித்தோப்பு தொகுதியில் இதுவரை 14 சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்துள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியில் இதுவரை நடந்துள்ள 14 தேர்தல்களில் அதிகளவாக இம்முறை வாக்குகள் பதிவாகியிருந்தது.

இணையதளத்தில் வாக்குப்பதிவு

முதன்முறையாக நாட்டிலேயே சர்வீஸ் வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் முறையாக நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது. தொகுதியில் மொத்தமுள்ள 4 சர்வீஸ் வாக்காளர்களில் 3 பேர் வாக்களித்தனர். அவர்களது வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதில் இரு வாக்குகள் நாராயணசாமிக்கும், ஒரு வாக்கு அதிமுக ஓம்சக்தி சேகருக்கும் கிடைத்தது.

http://tamil.thehindu.com/tamilnadu/நெல்லித்தோப்பில்-நாராயணசாமி-அமோக-வெற்றி/article9373528.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.