Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம்

Featured Replies

இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம்

a070cec8092b-eb033989363e223d6c24d28a811591033112f6a9.jpg

 

குற்­றச்­சாட்­டுகள் மற்றும் போர் தொடர்­பான ஐ.நாவின் பரிந்­து­ரைகள் விட­யங்­களில், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வில்­லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்­பாற்றிக் கொள்­வது மிகவும் கடி­ன­மா­னது.”

இந்தக் கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னதான் கடந்த வாரம் கூறி­யி­ருந்தார்.

சபு­கஸ்­கந்­தையில் உள்ள பாது­காப்புச் சேவைகள் கட்­டளை மற்றும் அதி­கா­ரிகள் கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழாவில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இந்த விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இப்­போ­தெல்லாம், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்புத் துறை­சார்ந்த உயர்­நிலைப் பிர­மு­கர்கள் படை அதி­கா­ரி­க­ளையும் படை­யி­ன­ரையும் சந்­திக்­கின்­ற­போது கூறு­கின்ற விட­யங்கள் இரண்டு தான்.

முத­லா­வது இரா­ணு­வத்தின் ஒழுக்­கத்தின் மீதான அவ­சியம். இரண்­டா­வது, இரா­ணு­வத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்­கு­மி­டையில் இருக்க வேண்­டிய உறவின் முக்­கி­யத்­துவம்.

போர்க்­கா­லத்தில் இலங்கைப் படை­களின் ஒழுக்கம் எவ்­வா­றான நிலையில் இருந்­தது என்­பதை இங்கு விப­ரிக்க வேண்­டி­ய­தில்லை. ஒழுக்­க­மீ­றல்கள் நிறைந்­தி­ருந்த ஒரு இரா­ணு­வ­மா­கத்தான் இலங்கை இரா­ணுவம் விளங்­கி­யது.

அத­னால்தான், சர்­வ­தேச அளவில் குற்­றச்­சாட்­டு­களை சுமந்து நிற்க வேண்­டிய நிலை அதற்கு ஏற்­பட்­டது. குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை விடு­விப்­ப­தற்கு, முன்­னைய அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை.

இரா­ணு­வத்தை பாது­காப்­பது என்ற பெயரில் முன்­னைய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட அத்­தனை நட­வ­டிக்­கை­க­ளுமே, இரா­ணு­வத்தின் பெயரைக் கெடுப்­ப­தா­கவே அமைந்­தி­ருந்­தன.

கடந்த ஆண்டு ஜன­வ­ரியில் ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய அர­சாங்கம், சர்­வ­தேச அளவில் இரா­ணு­வத்தை குற்­றச்­சாட்­டு­களில் இருந்து பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

அர­சியல், இரா­ஜ­தந்­திர மற்றும் இரா­ணுவ ரீதி­யாக இதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த விவ­காரம் அர­சாங்­கத்தின் மீதான நெருக்­க­டி­க­ளு­டனும் தொடர்­பு­டைய விவ­கா­ர­மாக இருப்­பதால், கூடுதல் முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டு­கி­றது.

சர்­வ­தேச குற்­றச்­சாட்­டு­களில் இருந்து இரா­ணு­வத்தைப் பாது­காத்­தி­ருக்­கிறோம் என்று ஜனா­தி­பதி பல­முறை கூறி­யி­ருக்­கிறார். அவ­ரது அந்தக் கருத்தில் நிறை­யவே உண்­மைகள் இருக்­கின்­றன.

ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இருந்­ததை விடவும் இப்­போது, சர்­வ­தேச அளவில் இரா­ணு­வத்­தினர் மீதான அழுத்­தங்­களும் கெடு­பி­டி­களும் குறைந்­தி­ருக்­கின்­றன.

இது அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர ரீதி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளால்தான் சாத்­தி­ய­மா­னது.

சர்­வ­தேச சமூ­கத்­துடன் முட்­டிக்­கொள்­ளாமல் முரண்­பட்டுக் கொள்­ளாமல், நாசூக்­கான முறையில் நடந்து கொண்­ட­தால்தான் அர­சாங்­கத்­தினால் இவ்­வா­றான சாத­க­மான நிலையை அடைய முடிந்­தது. என­வேதான், அர­சாங்கம் படை­யி­னரின் ஒழுக்கம் குறித்து அவ்­வப்­போது வலி­யு­றுத்தி வரு­கி­றது. மனித உரிமை மீறல்கள் சார்ந்த ஒழுக்­கத்தை மாத்­தி­ர­மன்றி, இரா­ணுவ ஒழுக்­கத்­தையும் சேர்த்தே அர­சாங்கம் குறிப்­பி­டு­கி­றது.

இரா­ணுவ ஒழுக்கம் என்­பது தலை­மைத்­து­வத்­துக்குக் கட்­டுப்­ப­டு­த­லாகும். தலை­மைக்குக் கட்­டுப்­ப­டாத எந்த இரா­ணு­வத்­தி­னாலும், நற்­பெ­யரை தக்­க­வைத்துக் கொள்­ளவோ, தேடிக்­கொள்­ளவோ முடி­யாது. இலங்கைப் படை­களைப் பொறுத்­த­வ­ரையில் தலை­மைத்­துவ ஒழுங்­கிற்கு கட்­டுப்­ப­டாமல் நடந்த வர­லாறு இல்லை.

எனினும் இரா­ணுவப் புரட்சி, இரா­ணுவ ஆட்சி பற்றி அவ்­வப்­போது வெளி­யாகும் தக­வல்கள் இத்­த­கை­ய­தொரு இரா­ணுவ ஒழுக்­கத்தின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்த வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை அர­சுக்கு ஏற்­ப­டுத்­து­கி­றது.

இன்­னொரு பக்­கத்தில், போர் முடி­வுக்கு வந்த காலத்தில் இருந்தே, மீறல்­க­ளுக்குப் பொறுப்புக் கூறப்­பட வேண்டும், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்று தொடர்ச்­சி­யாக சர்­வ­தேச சமூ­கத்­தினால் வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.

இது படை­யி­னரை ஒருவித பீதி­யான நிலைக்குள் வைத்­தி­ருந்­தது என்­பதில் சந்­தே­க­மில்லை. போர் முனையில் குற்­றங்­களை இழைத்த படை­யினர், தம்­மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமோ என்று கலங்கும் நிலை காணப்­பட்­டது.

*இதனை முன்­னைய அர­சாங்கம் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது. படை­யி­னரை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு இழுத்துச் செல்ல விட­மாட்டோம் என்று மேடை­களில் முழங்­கியே வாக்­கு­களை வாரிக் கொண்­டது.

சர்­வ­தேச சமூகம், படை­யி­னரைத் தண்­டிக்க முனை­கி­றது என்ற கருத்து பரப்­பப்­பட்­டதால், சர்­வ­தேச சமூகம் தமக்கு விரோ­த­மாகச் செயற்­ப­டு­கி­றது என்ற எண்ணம், அவர்கள் மத்­தியில் ஊன்றி விட்­டது.

தற்­போ­தைய அர­சாங்கம், சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணங்கிச் செயற்­ப­டு­கின்ற நிலையில், படை­யினர் மத்­தியில் அது தவ­றான கருத்தை உரு­வாக்கி விடுமோ என்ற அச்­சமும், அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது.

சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்­தங்­க­ளுக்கு ஏற்­பவே அர­சாங்கம் செயற்­ப­டு­கி­றது என்று எதி­ர­ணி­யி­னரால் பரப்­பப்­படும் கருத்­துக்­களை எதிர்­கொள்ள வேண்­டிய சிக்­கலும் அர­சுக்கு உள்­ளது.

இத­னால்தான், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவு இல்­லாமல், படை­யினர் மீதான குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்துக் கொள்­ளவோ, ஐ.நா வின் பரிந்­து­ரை­களை விலக்கிச் செயற்­ப­டவோ முடி­யாது என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் சர்­வ­தேச சமூ­கத்தை தனது கைக்குள் போட்டுக் கொண்டு படை­யினர் தொடர்­பான விட­யங்­களில் சில மாற்­றங்­களைச் செய்­தி­ருக்­கி­றது.

முன்­ன­தாக, ஒட்­டு­மொத்த இலங்கை இரா­ணு­வமும் குற்­ற­மி­ழைத்த இரா­ணு­வ­மாக கரு­தப்­ப­டு­கின்ற ஒரு நிலையே சர்­வ­தேச அளவில் காணப்­பட்­டது. இரா­ணு­வமே பொறுப்­புக்­கூற வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

ஆனால், ஒட்­டு­மொத்த இரா­ணு­வமும் தவறு செய்­ய­வில்லை, இரா­ணு­வத்­தி­னரில் சிலர் குற்­ற­மி­ழைத்­தி­ருக்­கலாம், என்று இப்­போ­தைய அர­சாங்கம் புதிய நிலைப்­பாடு ஒன்றை அறி­முகம் செய்­தது.

இதன் மூலம் இரா­ணு­வத்தின் பெயரைக் காப்­பாற்றிக் கொள்ளும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இது சர்­வ­தேச சமூ­கத்­தினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட விட­ய­மா­கவே மாறி­யி­ருக்­கி­றது.

இப்­போது ஒட்­டு­மொத்த இலங்கைப் படை­க­ளையும் குற்­ற­மி­ழைத்த படை­யி­ன­ராக அடை­யா­ளப்­ப­டுத்த எந்த நாடும், அல்­லது எந்த அமைப்பும் தயா­ராக இல்லை.

இரா­ணு­வத்தில் உள்ள சிலர் இழைத்த குற்­றங்கள் என்­பது போன்று, போர்க்­கால மீறல்­களின் தீவி­ரத்­தன்மை சுருக்­கப்­ப­டு­கின்ற நிலை தோன்றி வரு­கி­றது. இது அர­சாங்­கத்­துக்கும் இரா­ணு­வத்­துக்கும் கிடைக்­கின்ற மிகப் பெரிய வெற்­றி­யாகும்.

ம ஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு மறுக்­கப்­பட்ட சர்­வ­தேசப் பயிற்­சிகள் இப்­போது கிடைக்­கின்­றன. அப்­போது கிடைக்­காத, ஆயு­தங்கள், தள­பா­டங்­க­ளையும் கூட இப்­போது பெறக்­கூ­டிய சூழல் உரு­வாகி வரு­கி­றது.

சர்­வ­தேச சமூ­கத்தின் இந்த அணு­கு­முறை மாற்றம் இலங்கை அர­சாங்­கத்­துக்கும் படை­யி­ன­ருக்கும் சாத­க­மான நிலையை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது,

ஆனால், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்­களின் நிலை­யி­லி­ருந்து பார்க்­கும்­போது, அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வே­யில்லை.

இரா­ணு­வத்தின் பெயரைக் காப்­பாற்­று­வ­தற்கு சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவு அவ­சியம் என்று ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனாலும், கெட்­டுப்­போன பெயரை மீண்டும் பெற்றுக் கொள்­வது, தனியே சர்­வ­தேச சமூ­கத்தின் பங்­க­ளிப்­பினால் மாத்­திரம் சாத்­தி­யப்­ப­டாது.

இரா­ணுவம் மீதுள்ள கறை­களை அகற்­றாமல் அதன் பெயரை காப்­பாற்றிக் கொள்ள முடி­யாது, போர்க்­கால மீறல்­க­ளுக்கு நீதி விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­களைத் தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­காத வரையில், இரா­ணு­வத்தின் பெயரை காப்­பாற்றிக் கொள்ள முடி­யாது.

சர்­வ­தேச சமூ­க­ததின் சில நிபந்­த­னை­களை அர­சாங்கம் நிறை­வேற்­று­கின்ற போதிலும், போர்க்­கால மீறல்­க­ளுக்கு நீதியை வழங்கும் செயல்­முறை விட­யத்தில் மாத்­திரம், அர­சாங்கம் கவனம் செலுத்­த­வே­யில்லை.

கடந்த ஆண்டு ஒக்­ரோபர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் வெளி­யிட்ட அறிக்­கையில், படை­யினர் மத்­தியில் தீவி­ர­மான மனித உரிமை ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது,

ஐ.நா. அமை­திப்­ப­டைக்கு இலங்கைப் படை­யி­னரைச் சேர்த்துக் கொள்ளும் நட­வ­டிக்­கையில் இந்த ஆய்வு முறை உரு­வாக்­கப்­பட வேண்டும் என்று அந்த அறிக்­கையில் கோரப்­பட்­டி­ருந்­தது.

அர­சாங்கம் இந்த பொறி­மு­றையை உரு­வாக்கி விட்­டது. இரா­ணுவம், பொலிஸ் மற்றும் புல­னாய்வுப் பிரிவு என்று உள்­ளக ரீதி­யாக ஒரு ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

வெளி­யக ஆய்வு இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதற்குப் பின்னர் தான் ஐ.நா. அமை­திப்­ப­டைக்கு பட்டியல் அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு அந்தப் பட்டியல் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, அனுமதி அளிக்கப்படுகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களா, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களா என்று ஆய்வு செய்யப்பட்டே ஐ.நா. அமைதிப்படைக்கு இலங்கைப் படையினர் அனுப்பப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

இத்தகைய இறுக்கமான ஆய்வு முறைகளின் மூலம் ஐ.நா அமைதிப்படையில் ஒழுக்கமான படையினரை மாத்திரம் உள்வாங்கலாம் என்று ஐ.நா. கருதுகிறது.

ஆனாலும், போர்க்கால மீறல்களில் ஈடுபட்ட படையினரை ஆய்வு செய்யும் எந்த பொறிமுறையையும் அரசாங்கமும் உருவாக்கவில்லை, சர்வதேச சமூகமும் உருவாக்கவில்லை.

இங்கு இலங்கை இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது, இலங்கை இராணுவத்தை தூய்மைப்படுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கிறது.

இதனால் தான் ஜனாதிபதி, சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், இராணுவத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-18#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.