Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கலில் முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

சிக்கலில் முஸ்லிம் காங்கிரஸ்

126945677-9b13b34f5dd537c4830676b6a9ceb1fa58990441.jpg

 

முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடக் கூட்டம் மிகுந்த பர­ப­ரப்­பு­டனும், எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­யிலும் கடந்த .14ஆம் திகதி இரவு கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. ஹஸன­லிக்கு அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என்று பெரும்­பாலான உறுப்­பி­னர்கள் கேட்டுக் கொண்­ட­தா­கவும், அவரைத் தூக்கி வீச நினைப்­பது அவர் இக்­கட்­சிக்கு செய்த அர்ப்­ப­ணிப்­புக்கு நன்றி தெரி­விப்­ப­தாக இருக்­கா­தெ­னவும் இந்த உயர்­பீடக் கூட்­டத்தில் கருத்­துக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளன. இதனால், ஹஸன­லிக்கு அதி­கா­ரங்கள் கொண்ட செய­லாளர் பதவி வழங்க வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்கும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது. ஆயினும், ஏற்­க­னவே எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக ஹஸனலி அதி­கா­ரங்­க­ளில்­லாத செய­லாளர் நாய­க­மா­கவே தொடர்­கின்றார்.

இதே வேளை, தனக்கு கட்சி அநி­யாயம் செய்­துள்­ள­தென்று தெரி­வித்துக் கொண்­டி­ருக்கும் ஹஸனலி, கட்­சியை நீதி­மன்­றத்தில் நிறுத்­த­மாட்டேன் என்றும் சொல்­லி­யுள்ளார். அநீதி இழைக்­கப்­பட்­டவர் நீதி­மன்­றத்­தில்தான் நீதியை பெற்றுக் கொள்ள முடியும். ஆதலால், நீதி­மன்­றத்­திற்கு செல்­ல­மாட்டேன் என்­பதன் மூல­மாக அநி­யா­யத்­திற்கு துணை போகின்றார் என்ற பார்­வையும், தான் நீதி­மன்­றத்­திற்கு சென்றால் கட்­சிக்கு தடைகள் ஏற்­பட்­டு­வி­டு­மென்று சிந்­திக்­கின்றார் என்ற பார்­வையும் உள்­ளன. ஆயினும், ஹஸனலி தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அனுப்­பிய கடிதம் கட்­சியை நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்லும் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே வேளை, 14ஆம் திகதி நடை­பெற்ற உயர்­பீடக் கூட்­டத்தின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த ரவூப் ஹக்கீம் செய­லாளர் விட­யத்தில் ஏற்­க­னவே எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தில் மாற்­ற­மில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

ஹஸனலி தனக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், நீதி­மன்­றத்­திற்கு செல்­ல­மாட்டேன் என்று சொல்­லு­கின்றார். தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு கடிதம் எழுதி ரவூப் ஹக்­கீமின் மண்­டையை குழப்­பி­யுள்ளார். ரவூப் ஹக்கீம் செய­லாளர் விட­யத்தில் மாற்­ற­மில்லை.ஹஸனலி­யுடன் பேசு­வ­தற்கு தயார் என்று தெரி­வித்­துள்ளார்.

இவர்கள் இரு­வ­ரி­னதும் கருத்­துக்கள் முரண்­பா­டு­களைக் கொண்­டுள்­ளன. ரவூப் ஹக்கீம் தேசி­ய­ பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை ஹஸனலிக்கு கொடுத்து பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு எண்­ணு­கின்றார். ஹஸன் அலியை அதி­கா­ரங்கள் கொண்ட செய­லா­ள­ராக நிய­மிப்­ப­தனை ரவூப் ஹக்கீம் விரும்­ப­வில்லை. ஒரு பொம்மை அதா­வது தமது சொல்­லுக்கு சரி, பிழை­க­ளுக்கு அப்பால் கட்­டுப்­படும் செய­லாளர் ஒரு­வரை நிய­மனம் செய்­யவே அவர் விரும்­பு­கின்றார்.

இத­னால்தான், கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­பட முடி­யாது. அவர் செய்யும் பணிக்கு மாதாந்தம் சம்­பளம் வழங்­கப்­ப­டு­மென்றும் தெரி­வித்து மன்சூர் ஏ.காதரை செய­லாளர் என்று தேர்தல் திணைக்­க­ளத்­திற்கு அறி­வித்­துள்ளார். ஆனால், மன்சூர் ஏ.காதர் உயர்­பீட செய­லாளர் என்­றுதான் ஆரம்­பத்தில் நிய­மிக்­கப்­பட்டார். எல்லா ஊட­கங்­களும் இவ்­வா­றுதான் செய்­தி­களை வெளி­யிட்டு இருந்­தன.

இதே வேளை, செய­லாளர் நாயகம் ஹஸன்­அ­லியின் விட­யத்தில் தில்­லு­முள்­ளுகள் நடை­பெற்­றுள்­ளன என்­ப­தனை உயர்­பீடக் கூட்­டத்தில் உரை­யாற்­றி­ய­வர்­களின் கருத்­துக்­களின் மூல­மாக அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. ஹஸனலிக்கு ஆரம்­பத்தில் உயர்­பீட உறுப்­பி­னர்­களின் ஆத­ரவு மிகவும் குறை­வா­கவே இருந்­தது. ஆனால், தற்­போது அவ­ருக்­கு­ரிய ஆத­ரவு அதி­க­ரித்­துள்­ளது.

14ஆம் திகதி நடை­பெற்ற உயர்­பீடக் கூட்­டத்தில் இரண்டு உறுப்­பி­னர்­களே எதி­ராக பேசி­யுள்­ளார்கள்.

வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் ஆயுதப் போராட்­டங்­களின் போது பாதிக்­கப்­பட்­டார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு குரல் கொடுப்­ப­தற்கு கட்­சிகள் இருக்­க­வில்லை. இத­னால்தான் முஸ்லிம் காங்­கிரஸ் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

ஆயினும், மர்ஹும் அஷ்ரப், நாட்­டி­லுள்ள எல்லா முஸ்­லிம்­க­ளுக்கும் உரிய கட்­சி­யா­கவே முஸ்லிம் காங்­கி­ரஸை வளர்த்தார். மட்­டு­மன்றி கட்­சியின் அதி­கா­ரங்­களை பகிர்­வதில் கூட தர்­மத்தை காட்­டினார்.

முஸ்லிம் காங்­கி­ரஸில் தலைவர், செய­லாளர் ஆகிய பத­வி­களில் உள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அதி­கா­ரங்கள் உள்­ளன. ஏனைய பத­வி­க­ளுக்கு அதி­கா­ரங்கள் கிடை­யாது. இத­னால்தான், அஷ்ரப் செய­லாளர் பத­வியை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வழங்­கினார். ஆளுமை மிக்க அஷ்ரப் செய­லாளர் பத­வியை பெற்­றுள்­ளவர் பொம்­மை­யாக அதி­கா­ரங்­க­ளில்­லாது இருக்கக் கூடா­தென்­ப­தற்­கா­கவே அப்­ப­த­விக்கு அதி­கா­ரங்­களை வழங்­கினார்.

ரவூப் ஹக்கீம் தலைவர் பத­வியைப் பெற்றுக் கொண்ட போது ஹப்ரத் என்­பவர் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். அதி­கா­ரங்கள் கொண்ட இரண்டு பத­வி­களும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே பகி­ரப்­பட்­டன. இதனால் விமர்­ச­னங்­களும் எழுந்­தன. பின்னர் ஹஸனலி செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். இதன் போது கட்­சியின் இத­ய­மா­க­வுள்ள அம்­பா­றைக்கு செய­லாளர் பதவி வழங்­கப்­பட்­டமை சரி­யான தீர்­மா­ன­மென்று பாராட்­டப்­பட்­டது.

இந்­நி­லையில், கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­படக் கூடா­தென்றும், அவ­ருக்கு மாதாந்தம் சம்­பளம் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் கட்­சியின் யாப்பில் செய்­யப்­பட்­டுள்­ள­தென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதன் மூல­மாக கட்­சியின் அதி­கா­ரங்கள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கும், அதற்கு வெளி­யேயும் பகி­ரப்­பட வேண்­டு­மென்ற வழக்கம் மீறப்­பட்­டுள்­ளது. அதா­வது செய­லாளர் விட­யத்தில் கட்­சியின் யாப்பில் செய்­யப்­பட்ட திருத்தம் தலைவர் ரவூப் ஹக்கீம் சர்வ அதி­கா­ரங்­க­ளையும் கொண்­ட­வ­ராக உருப்­பெற்றுக் கொள்­வ­தற்கு வழி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் யாப்பு திருத்­தத்தில் (உயர்­பீட) செய­லா­ளரை நிய­மிக்கும், விலக்கும் அதி­கா­ரங்கள் தனியே கட்­சியின் தலை­வ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த அங்­கி­கா­ரத்தை உயர்­பீட உறுப்­பி­னர்கள் எதற்­காக வழங்­கி­னார்கள் என்று தெரி­ய­வில்லை. கிழக்கு மாகா­ணத்­திற்கு குறிப்­பாக அம்­பாறை மாவட்­டத்தில் கட்­சியின் அதி­கா­ரங்கள் இல்­லாத நிலை­யுள்­ளது.

மன்சூர் ஏ.காதர் அம்­பாறை மாவட்­டத்தை சேர்ந்­த­வ­ராக இருந்­தாலும், இவரை எந்த வேளை­யிலும் நீக்கும் அதி­காரம் ரவூப் ஹக்­கீ­மக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதனால், செய­லாளர் பத­வியில் நிய­மிக்­கப்­ப­டு­பவர் கட்சித் தலை­வ­ருக்கு அடிமை போன்று பணி­வினைக் காட்டக் கூடி­ய­வ­ராக இருப்பார். அத்­த­கை­ய­வர்­களே அப்­ப­த­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

ஹஸனலியும், ஹக்­கீமும்

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு அதி­க­பட்ச விசு­வா­சத்தைக் காட்­டி­ய­வர்­களில் ஹஸனலியும் ஒரு­வ­ராவார். ஆயினும், இவர்­க­ளி­டையே மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தின் போது பனிப் போர்­களும் இடம்­பெற்­றுள்­ளன. இவர்­க­ளி­டையே காணப்­பட்ட சுய­நலம், பொது நலம் ஆகி­ய­வற்றில் மிகுந்த ஏற்­றத்­தாழ்­வுகள் காணப்­பட்­டுள்­ளன.

முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை கையாள்­வ­திலும், மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்தில் ஒட்டிக் கொண்­டி­ருப்­ப­திலும் ஹஸன்­அலி உடன்­பா­டு­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்க்­கட்சி வரி­சைக்கு செல்ல வேண்­டு­மென்று பகி­ரங்­க­மாக அறிக்­கை­களைக் கூட ஹஸனலி வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால், ரவூப் ஹக்கீம் எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் தீர்த்துக் கொள்­ள­லா­மென்று தெரி­வித்துக் கொண்­டி­ருந்தார். மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷவை வெறுக்கும் துணிச்சல் கட்­சியின் தலை­மைக்கு இருக்­க­வில்லை. ஹஸனலியை தவிர முஸ்லிம் காங்­கி­ரஸின் எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மஹிந்­த­ரா­ஜ­ப­க் ஷ­வுடன் நெருக்­கத்தைக் கொண்­டி­ருந்­தார்கள். ஒரு சிலரின் தனிப்­பட்ட தவ­றுகள் கடந்த அர­சாங்­கத்­துடன் ஒட்டி உற­வாட வைத்­தது.

மேலும், இவர்கள் ஆட்சி மாறும் போதெல்லாம் அர­சாங்­கத்தின் பக்கம் மாறிக் கொண்­டுதான் இருப்­பார்கள். அதற்­கேற்­ற­வாறு கட்­சியை வழி நடத்திக் கொண்­டி­ருப்­பார்கள்.

இந்­நி­லையில் ஹஸனலியின் சில நட­வ­டிக்­கைகள் ரவூப் ஹக்­கீமை தர்­ம­சங்­க­டத்­திற்குள் மாட்­டி­யது. ஐ.நாவின் மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யா­ள­ராக இலங்­கைக்கு வருகை தந்த நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் பற்றி ஆவ­ணத்தை தலை­வ­ருக்கு தெரி­யாமல் ஹஸனலி வழங்­கினார்.

இதனால், மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ கடும் கோபத்தை ரவூப் ஹக்­கீ­மிடம் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். மேலும், ஹஸன்­அ­லியின் பாரா­ளு­மன்ற உரை­களும் தலை­மைக்கு சங்­க­டத்­தையும், சிக்­க­லையும் ஏற்­ப­டுத்­தி­யது.

 ஹஸன்­அ­லியின் இத்­த­கைய செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே செய­லாளர் நாய­கத்­திற்­கு­ரிய அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்டு உயர்­பீட செய­லா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டன. தனது கட்­டுக்குள் இருக்கும் ஒரு­வரை செய­லா­ள­ராக நிய­மனம் செய்தால் தலைக்கு ஆபத்து வராது என்று ரவூப் ஹக்கீம் முடிவு செய்து ஹஸன்­அ­லியை பொம்­மை­யாக மாற்­றி­யுள்ளார். 

மேலும், மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது ஹஸன்­அ­லியின் நட­வ­டிக்­கைகள் முஸ்­லிம்­க­ளி­டையே வர­வேற்பைப் பெற்­றி­ருந்­தன. ஐ.தே.கவி­னரும் இவரை நேசித்­தார்கள். ஹஸன்­அ­லியின் இமேஜ் உச்­சத்­தி­லி­ருப்­ப­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், தலை­மையும் விரும்­ப­வில்லை.

இத­னால்தான் அவரை தந்­தி­ர­மாக வெளி­யேற்­று­வ­தற்கு நெருப்பை வைத்து கையை சுட்டுக் கொண்­டார்கள்.

தேர்தல் ஆணை­யா­ளாரின் கெடு­வி­திப்பு கடி­தத்­திற்கு முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் பதில் அளித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கட்­சியின் உண்மைச் செய­லாளர் மன்சூர் ஏ.காதர் என்று தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளதாம். உயர்­பீ­டத்தை கூட்டி முடிவு எடுப்­ப­தற்­கு­ரிய கால அவ­காசம் இல்­லாமை கார­ண­மா­கவே தலைமை தாமாக முடிவு செய்து செய­லாளர் மன்சூர் ஏ.காதர் என்று அறி­வித்­துள்­ளாராம். இது­பற்றி உயர்­பீடக் கூட்­டத்தில் சூச­க­மாக தலைமை தெரி­வித்துக் கொண்­டதாம்.

2016 நம்­பவர் 16ஆம் திகதி அனுப்­பப்­பட்ட கடி­தத்­திற்கு 2016 டிசம்பர் 15ஆம் திக­திக்கு முன்னர் பதி­ல­ளிக்க வேண்­டு­மென்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது ஒரு மாதம் அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. ஆதலால், கால­அ­வ­காசம் போதாது என்­ப­தனை விடவும் ஹஸன்­அ­லிக்கு அதி­கா­ரங்கள் வழங்கக் கூடா­தென்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டுள்­ளது. கட்சி முக்­கி­யமா, ஹஸன்­அ­லியை அதி­கா­ரங்­க­ளில்­லா­த­வ­ராக மாற்­று­வது முக்­கி­யமா என்று முடிவு செய்ய வேண்டும். ஹஸன்­அ­லியை பலி தீர்க்க வேண்­டு­மென்று முடிவு செய்தால் கட்சி முக்­கி­ய­மல்ல என்­ப­துதான் முடி­வாகும். செய­லாளர் யார் என்று அறி­விக்­கப்­பட்­டமை உண்­மை­யாயின் 14ஆம் திகதி நடை­பெற்ற உயர்­பீடக் கூட்டம் ஒரு ஏமாற்று நட­வ­டிக்கை எனலாம்.

உயர்­பீடக் கூட்­டத்தில் ஹஸன்­அ­லிக்கு சார்­பாக பலர் இருப்­ப­துடன் அவ­ருக்கு செய­லாளர் பதவி வழங்க வேண்­டு­மென்று கேட்டுக் கொண்­டாலும் ரவூப் ஹக்கீம் உயர்­பீடக் கூட்டம் முடி­வ­டைந்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போது கூறி­யுள்ளார்.

இதே வேளை, உயர்­பீட செய­லா­ளரை கட்­சியின் செய­லாளர் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளமை ஏமாற்று நட­வ­டிக்கை என்று உயர்­பீட உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றார்கள். பேராளர் மாநாட்டில் தமிழில் ஒரு வித­மா­கவும், ஆங்­கி­லத்தில் வேறு வித­மா­கவும் அறி­விப்பு செய்­யப்­பட்­ட­தா­கவும் உயர்­பீடக் கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தமது முடிவில் மாற்றம் ஏற்­பட்டு விட்டால் மீசையில் மண்­பட்ட கதை­யாக மாறி­விடும். இத­னால்தான் செய­லாளர் பத­வியில் உள்ள சிக்­கலை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்­காது ஹஸன்­அ­லியை நீக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன.

சரி­யான நேரத்தில் சரி­யான முடி­வுகள் எடுக்­கப்­பட வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸார் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், அஸ்­ரப்பின் மர­ணத்­திற்கு பின்னர் சரி­யான நேரத்தில் எடுக்­கப்­பட்ட சரி­யான முடி­வுகள் எது­மில்லை என்­பதே கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் பல­ரி­னதும் கருத்­தாகும்.

திவி­நெ­கு­ம­விற்கும், 18வது திருத்­தத்­திற்கும் பாரா­ளு­மன்­றத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் ஆத­ரவு அளித்­தமை. முஸ்­லிம்­களின் காணியை மீட்­டெ­டுப்­ப­தற்­கு­ரிய முடி­வு­களை எடுக்­காமை. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கடைசி வரைக்கும் மஹிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு ஆயத்­த­மாக இருந்­தமை. கடந்த அர­சாங்­கத்­திலும், இன்­றைய அர­சாங்­கத்­திலும் ஆளுந் தரப்பில் இருப்­ப­தற்கு முடிவு செய்­யப்­பட்­டமை. செய­லாளர் பத­வியின் அதி­கா­ரங்­களை குறைத்­தமை, கல்­முனை மாந­கர சபையின் மேயர் விட­யத்தில் சிராஸ் மீரா­சா­ஹிப்பை நீக்­கி­யமை, பொதுத் தேர்­தலில் அம்­பாரை மாவட்­டத்தில் ஐ.தேக­வி­னதும், தலை­மை­யி­னதும் நன்­மைக்­காக மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டாமை. வன்னியில் தனித்துப் போட்டியிட்டமை என பலவற்றை குறிப்பிட முடியும். இவற்றில் சரியான நேரத்தில் பிழையான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவே உள்ளன.

தற்போது முஸ்லிம் காங்கிரஸில் உள்ள ஒரு சிலரினால் புதுத் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாக மூத்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கட்சியில் உள்ள சிரேஸ்ட உறுப்பினர்களை நீக்கியோ, அல்லது அவர்களின் அதிகாரங்களைக் குறைத்தோ கட்சியை விட்டும் தூரமாக்குவதற்கே புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம். பழைய உறுப்பினர்கள் கட்சியை விட்டும் தூரமாகிப் போவதுதான் தலைக்கு பாதுகாப்பு என தலைமை எண்ணுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. அதே வேளை, முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டுமென்று மாற்றுக் கட்சியில் செயற்பட்ட பலர் இன்று முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள். இவர்கள், பழையவர்கள் கழிந்து சென்றால்தான் தங்களுக்கு சிரேஸ்டத்துவ அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ளலாமென்று நினைக்கின்றார்கள்.

முஸ்லிம் காங்கிரஸிற்கு பல பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்காது கட்சியை அழிப்பதற்கு சதி செய்யப்படுகின்றது என்று ரவூப் ஹக்கீமின் முடிவினை ஆதரிக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள். கட்சியை அழிக்க முயற்சி என்று தெரிவித்து தங்களின் பிழைகளை மறைப்பதற்கு இடம் தேடப்படுகின்றது. இதனால்தான் கட்சியை அழிப்பதற்கு சதி என்று தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் என்றுமில்லாத சிக்கலில் இருக்கின்றது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-18#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.