Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டில்லியில் 'லாபி'

Featured Replies

டில்லியில் 'லாபி'
முதல்வரோடு திரும்பாமல் டில்லியில் தங்கி 'லாபி'
வர்தா புயலை வைத்து மோகன ராவ் 'வாரே வாவ்...
 
 
 

'வர்தா' புயல் நிவாரண நிதி கேட்பதற்காக வந்த, தமிழக அரசின், 'மாஜி' தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முதல்வருடன் சென்னை திரும்பா மல், டில்லியிலேயே ஒருநாள் முழுவதும் தங்கி, சேகர் ரெட்டிக்கு ஆதரவாக, 'லாபி' செய்தது, அம்பலமாகியுள்ளது.

 

Tamil_News_large_1675013_318_219.jpg

தமிழக முதல்வர், டில்லிக்கு பயணம் செய்தால், அதிகாரிகள் மத்தியில், அது, முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும்.

முதல்வருடன் வரும் அமைச்சர்கள், அதிகாரி கள் மற்றும் அவரை டில்லியில் வரவேற்கும் அதிகாரிகள், முதல்வர் மீண்டும் சென்னை திரும் பும்போது வழியனுப்பும் நடைமுறை உட்பட, அனைத்துமே அரசின், 'புரோட்டோகால்' படி, நடந்தாக வேண்டும்.

சமீபத்தில், வர்தா புயல் நிவாரண நிதி கேட்டு, முதல்வர் பன்னீர்செல்வம் டில்லி வந்திருந்தார். அவருடன், தலைமை செயலர் ராமமோகன ராவ் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.
ஜெயலலிதாவோ, கருணாநிதியோ டில்லி வரு கின்றனர் எனில், அந்த கட்சிகளின், எம்.பி.,க்கள் அனைவரும், ஆஜராகி வரவேற்பது வழக்கம்.

அ.தி.மு.க.,வுக்கு, 49 எம்.பி.,க்கள் இருந்தும், முதல்வரை வரவேற்க, யாரும் விமான நிலை யத்திற்கு வரவில்லை. லோக்சபா துணை சபா நாயகர் தம்பிதுரை மட்டுமே வந்திருந்தார்.

இது குறித்து விசாரித்தபோது, 'பன்னீர்செல்வத் திற்கு வரவேற்பு அளிக்க, யாரும் டில்லிக்கு செல்ல வேண்டாம் என, சென்னை யிலிருந்து

அறிவுறுத் தப்பட்டதாக' எம்.பி.,க்கள் தரப்பில் கூறப்பட்டது.
 

அதிருப்தி


வரவேற்பு தந்த தம்பிதுரை, தன் ஆலோசனை களை முதல்வர் பின்பற்றவில்லை என்பதால், அதிருப்தி யாகி வீட்டிற்கு கிளம்பிச் சென்றார்; முதல்வரை வழியனுப்பவும் வரவில்லை.

இந் நிலையில் தான், டில்லி வந்த ராமமோகன ராவ், முதல்வருடன் சென்னைக்கு திரும்பாமல், டில்லி யிலேயே தங்கினான். பிரதமருடன் சந்திப்பை முடித்ததும், முதல்வருடன் தமிழ்நாடு இல்லத் திற்கு திரும்பி வந்தபோது, ராமமோகன ராவ், பதற் றத்துடன்இருந்ததை கவனிக்க முடிந்தது.

தன் அறையில், பத்திரிகையாளர்கள் சிலரை, முதல்வர் அழைத்துப் பேசினார். அப்போது, முதல் வரிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு, ராம மோகன ராவே, அவசர அவசரமாக பதிலளித்து, சீக் கிரமாக அந்த சந்திப்பை முடிப்பதில் ஆர்வம் காட்டினார். முதல்வர் சென்னைக்கு கிளம்பிய போது, தலைமை செயலரும் உடன் கிளம்பியிருக்க வேண்டும்; ஆனால், ராமமோகன ராவ், அன்றிரவு டில்லியி லேயே தங்கி விட்டார்.அடுத்த நாள் காலையில், தனக்கு நெருக்கமான மத்திய அமைச்சரை சந்திக்க கிளம்பினார்.

அப்போது, ரெய்டுக்கு உள்ளான சேகர் ரெட்டிக்கு, ஆதரவு கேட்டு, தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகும் மத்திய அமைச்சரிடம் அவர், பேசியதாக தெரிகிறது; இந்த சந்திப்பு, 40 நிமிடங்கள் நீடித்தது. டில்லியில் உள்ள அதிகாரிகள் பலரும், ராமமோகன ராவுக்கு பழக்கம். அந்த அடிப்படையில், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த, இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவரையும், அவர் சந்தித்தார்.

இந்த ரகசிய சந்திப்புகளை முடித்த பின், அடுத்த நாள், டில்லியிலிருந்து, பகல், 12:30 விமானத்தை பிடித்து, சென்னை திரும்பினார். ஏற்கனவே பல முறை,அந்த மத்தியஅமைச்சரிடம்,சேகர் ரெட்டியை காப்பாற்றும் நோக்கில் சில கோரிக்கைகளை வைத் தாலும், டில்லி சந்திப்பின்போது, எப்படியாவது சேகர் ரெட்டி ரெய்டு விவகாரத்தை அடுத்த கட்டத் திற்கு நகர்த்தாமல், தடுத்து நிறுத்த வேண்டு மென வலியுறுத்தியுள்ளார், ராமமோகன ராவ்.

 



சேகர் ரெட்டியை துருவினால், தன் தொடர்புகள் அம்பலத்துக்கு வரலாம் என்பதை, ராமமோகன ராவ் உணர்ந்திருந்ததே இதற்கு காரணம். கரூர் அன்புநாதன் கைது, தமிழக அரசியலில் புயலை கிளப்பியது; ஆனால், அது அடுத்தடுத்த கட்டங் களை எட்டாமல், அன்புநாதனோடு மட்டுமே நிற்கிறது. இதேபோல, சேகர் ரெட்டி விவகாரத் தையும் நிற்க வைத்துவிட வேண்டுமென்பதே, ராமமோகன ராவின் திட்டம்.

'நம்பர் டூ' தனக்கு நெருக்கமான அந்த அமைச்சரி டம், இதுகுறித்து அடிக்கடி, அவர் வலியுறுத்தி வந்தார். இதையடுத்து, அமைச்ச ரும், தன்னால் முடிந்தளவு, 'நம்பர் டூ' அமைச்சரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி யுள்ளார்; அதற்கு பலன் ஏதும் இல்லை. இந்த விவகாரம் தன்னிடம் வந்தபோது, 'பிரதமருக்கு அனைத்தும் தெரியும். அவரது விர லசைவில் தான், அத்தனை ரெய்டுகளும் நடக் கின்றன. இதில் என்னால் எதுவும் செய்ய முடி யாது' எனக் கூறி, 'நம்பர் டூ' கைவிரித்து விட்டார்.
இவை அனைத்தும், மத்திய அரசின் முக்கிய மான உயர் வட்டாரங்களுக்கு, உடனடியாக தெரிய வரவே, இனியும் தாமதிக்க வேண்டா மென, ரெய்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 'புயல் நிவாரண நிதி' என்ற பெயரில், சேகர் ரெட் டிக்காக, 'லாபி' செய்து திரும்பிய பயணக் களைப் பில், அன்றிரவு துாங்கிய ராமமோகன ராவை, வருமான வரித்துறை அதிகாரிகள், அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுப்பிய கதை இதுதான்.

- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1675013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.