Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பேசவேண்டும்

Featured Replies

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச­வேண்டும்

 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்­புக்கு முஸ்லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்றுசேர்ந்து ஒத்­து­ழைக்­க­வேண்டும் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும், தமிழ்த் ­தே­சி­யக் ­கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான மாவை சேனா­தி­ராஜா அழைப்பு விடுத்­துள்ளார்.

கல்­மு­னையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்துகொண்­டு உரை­யாற்றும் போதே அவர் இந்த பகி­ரங்­க அழைப்பை விடுத்­தி­ருக்­கின்றார். இவ்­வி­டயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பது இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு 18 ஆண்­டுகள் நடை­மு­றையில் இருந்­தது. முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் இணைந்த வடக்கு, கிழக்கு தாய­கத்தில் ஒற்­று­மை­யாக வாழ­வேண்டும் என்­ப­துதான் எமது குறிக்­கோ­ளாகும். வடக்கின் பலம் கிழக்கு மக்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று அன்று தந்தை செல்வா கூறி­யி­ருந்தார். அத­னையே நாங்­களும் எதிர்­பார்த்து நிற்­கின்றோம். நாங்கள் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றி ஜனா­தி­ப­தி­யி­டமும் கூறி­யுள்ளோம். அதற்­காக முஸ்­லிம்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­து­மாறு நாங்கள் கூறி­யுள்ளோம். அதற்­காக நாம் பொறுத்­தி­ருக்­க­வேண்­டிய சூழ­லுக்குள் இருக்­கின்றோம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

சமஷ்டி தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு இணைந்த வடக்கு, கிழக்கில் ஆட்சி அதி­கா­ரத்­தினை நாங்­களே பயன்­ப­டுத்­து­கின்ற அள­விற்கு தீர்வு கிடைக்­க­வேண்டும். 'நம்­ப­நட நம்­பி­ நட­வாதே' என்று தந்தை செல்வா அன்று கூறினார். அதற்­கி­ணங்­கவே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். மிகவும் மோச­மான கொள்கை வேறு­பா­டு­களைக் கொண்ட ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளன. அந்த இரு ­கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் எம்­மையும் இணைத்தால் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் பெற்­று­விட முடியும். மக்கள் தந்த ஆணைப்­படி ஒரு தீர்வை நோக்­கியே நாம் சென்­று­கொண்­டி­ருக்­கின்றோம் என்றும் மாவை சேனா­தி­ராஜா சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவ­சியம் குறித்து தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தனும் அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்றார். வடக்கு, கிழக்கு இணைப்­பிற்கு முஸ்லிம் மக்கள் இணக்கம் தெரி­விக்­க­வேண்டும். இவ்­வி­டயம் தொடர்பில் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு தயார் என்று அவர் பல தட­வைகள் பகி­ரங்­க­மா­கவே அறி­வித்­தி­ருக்­கின்றார்.

 வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி முறை­யி­லான ஒரு ஆட்சி அமை­யா­விட்டால் அதனை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஏற்­கப்­போ­வ­தில்லை என்று தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வ­ரனும் சில தினங்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கையில் கருத்து கூறி­யி­ருக்­கின்றார்.

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் அர­சியல் கட்­சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­வ­ரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் காணப்­படும் அர­சியல் தீர்­வா­னது. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியின் அடிப்­ப­டையில் அமை­ய­வேண்டும் என்­பதே தமிழர் தரப்­பி­ன­ரது நிலைப்­பா­டாக உள்­ளது.

ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு விட­யத்தில் முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பாடும் பெரும்­பான்மை கட்­சி­களின் நிலைப்­பாடும் வேறு­பட்­ட­ன­வா­கவே அமைந்­துள்­ளன. வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு பெரும்­பான்­மை­யான முஸ்லிம் கட்­சிகள் கடும் எதிர்ப்புத் தெரி­வித்து வரு­கின்­றன. அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மை­யி­லான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் ஆகி­யன வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு பகி­ரங்­க­மாவே எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றன. அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைமை வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் பகி­ரங்­க­மாக எதிர்ப்புத் தெரி­விக்­கா­வி­டினும் கீழ்மட்டத் தலை­வர்கள் அதற்கு எதி­ராக குரல்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

வடக்கு, கிழக்கு இணைந்த வகையில் தீர்வு காணப்­ப­டு­மானால் அப்­ப­கு­தியில் சிறு­பான்மை மக்­க­ளா­கிய தமக்கு அநீதி இழைக்­கப்­பட்டு விடுமோ என்று முஸ்லிம் மக்­களின் தலை­மைகள் அஞ்­சு­வ­தா­கவே தெரி­கின்­றது. விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலத்தில் தமிழ் – முஸ்லிம் உறவு என்­பது பெரும் நெருக்­க­டி­களை சந்­தித்து வந்­தது. திட்­ட­மிட்ட வகையில் பேரி­ன­வாத சக்­தி­களும் தமிழ் – முஸ்லிம் உறவை சீர்­கு­லைப்­பதில் முன்­னின்று செயற்­பட்டு வந்­தன.

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம் ­மக்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் சில மணி­நேர கால அவ­கா­சத்தில் வெளி­யேற்­றப்­பட்­டனர். விடு­த­லைப்­பு­லிகள் உட்­பட ஆயு­தக்­கு­ழுக்கள் முஸ்லிம் மக்கள் மீது தாக்­கு­தல்­க­ளையும், நடத்­தி­யி­ருந்­தன. இதேபோல் முஸ்லிம் ஊர்­கா­வற்­ப­டை­யி­னரால் தமிழ் மக்கள் மீதும் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. திட்­ட­மிட்ட வகை­யிலும், பேரி­ன­வாத சக்­தி­களின் சதிமுயற்­சி­யினால் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்­பெற்றும் வந்­தன. இத்­த­கைய சூழ­லினால் தமிழ் – முஸ்லிம் உறவு என்­பது யுத்­த­கா­லத்தின் போது சீர்­கு­லைந்தே காணப்­பட்­டது. விடு­த­லைப்­பு­லிகள் பலம்­பெற்­றி­ருந்த காலத்தில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் போது வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் வலி­யு­றுத்­தப்­பட்டே வந்­தது. அப்­போது கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி அலகு வழங்­கு­வது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டது. அன்று அத்­த­கைய அல­கொன்றை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு முஸ்லிம் தலை­மை­களும் தயா­ரா­கவே இருந்­தன. ஆனால் இன்று விடு­த­லைப்­பு­லிகள் முற்­றாக அழிக்­கப்­பட்­டுள்ள நிலையில் கடந்த 18 வரு­டங்­க­ளாக இணைந்­தி­ருந்த வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் தனித்­த­னி­யாகப் பிரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் தீர்­வொன்று ஏற்­படும் போது தமக்­கு­ரிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் முஸ்லிம் தலை­மைகள் உள்­ளன. இவர்­க­ளது இந்த நிலைப்­பாட்டைப் பொறுத்­த­வ­ரையில் அதனை தவறு என்று கூற­மு­டி­யாது.

ஏனெனில் கடந்த கால அனு­ப­வங்­க­ளையும், படிப்­பி­னை­யையும் வைத்து அவர்கள் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தமது அச்­சத்­தையும் வெளிக்­காட்டி வரு­கின்­றனர். இதேபோல் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மூன்று தசாப்­த­கா­ல­மாக தமிழ் மித­வாத தலை­வர்கள் அஹிம்­சை­வ­ழியில் போரா­டி­னார்கள். அத்­த­கைய போராட்­டங்கள் கணக்கில் எடுக்­கப்­ப­டா­மை­யி­னால்தான் வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்­டிய நிலை மித­வாத தமிழ் தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து மூன்று தசாப்­த­கா­ல­மாக தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் தூக்கி போராட வேண்­டிய நிலை உரு­வா­னது. இந்த போராட்­டங்­களின் போது இலட்­சக்­க­ணக்கில் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­துடன் உடை­மை­களும் அழிக்­கப்­பட்­டன. இவ்­வாறு பேர­ழி­வு­களை சந்­தித்­துள்ள தமிழ் மக்கள் தமக்கு பூரண அதி­கா­ரத்­து­ட­னான தீர்வை எதிர்­பார்த்­துள்­ளனர்.

இத்­த­கைய தீர்வு இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்­டியின் அடிப்­ப­டையில் அதி­கூ­டிய அதி­கா­ரப்­ப­கிர்­வாக இருக்­க­வேண்டும் என்று தமிழ் மக்கள் எண்­ணு­கின்­றனர். வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் என்­பது தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.

தமிழ் மக்­களின் இத்­த­கைய எதிர்­பார்ப்­பா­னது நியா­ய­மா­ன­தொன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. தற்­போ­தைய நிலையில் தமிழ் – முஸ்லிம் மக்­க­ளி­டையே உறவு கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு இரு சமூகங்களும் ஒன்றிணைந்து தமது அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய தீர்வொன்றை காணவேண்டியது அவசியமாக உள்ளது. சிறுபான்மை சமூகங்கள் முரண்பட்டு – பிளவுபட்டு காணப்பட்டால் அதனால் நன்மையடையப்போவது பெரும்பான்மை இனமே தவிர வேறொன்றும் இல்லை.

'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பதுபோல் இனியும் தமிழ் – முஸ்லிம் மக்கள் பிளவுபட்டு இருப்பதனால் பயன் கிடைக்கப்போவதில்லை. எனவே வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் தலைமைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் மக்களின் தலைமைகளும் நல்லெண்ணத்துடன் விட்டுக்கொடுப்புடன் பேச்சுக்களை நடத்தவேண்டும். இதன் மூலமே இரு சமூகங்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய தீர்வினை காணமுடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-28#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.