Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் இழுபறி

Featured Replies

Page-18-b91c1875766cd7e7ae0f96a5bcd6557a

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2016-12-31#page-2

 

 

தொடரும் இழுபறி

 

தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் போராட்­டங்கள், கோரிக்­கைகள், தீர்க்­கப்­பட்டு நாட்டில் நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் அமை­தியும் கொண்டு வரப்­பட வேண்­டு­மாயின் முறை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­த­கைய அதி­கா­ரப்­ப­கிர்வை ஒற்­றை­யாட்­சியை வலி­மைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் பழைய அர­சியல் சாச­னத்தின் மூலம் தீர்வு காண­மு­டி­யாது என்ற யதார்த்த நிலை உண­ரப்­பட்­ட­த­னா­லேயே சமஷ்டி வரை­வி­லான ஆட்­சி­மு­றை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற உண்­மை­நிலை உண­ரப்­பட்­டது. 

நாளை பிறக்கப் போகும் புது­வ­ரு­டத்தில் முன்­னேற்­ற­க­ர­மான பல மாற்­றங்கள் நடை­பெ­றலாம், ஏற்­ப­டாலாம் என தமிழ் மக்கள் எதிர்­பார்க்­கி­றார்­களோ என்­னவோ பல அதிர்ச்­சி­யான மாற்­றங்­களும் நிலை மாறு­முடி­வு­களும் ஏற்­ப­டலாம் என்று அவ­தானம் கொள்ளும் அள­வுக்கு அண்­மைக்­கால போக்­கு­களும் சவால்­களும் காணப்­ப­டு­கின்­றன.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்­பு­கின்­றார்கள் தமிழ் மக்கள். ஆனால் நிலை­மை­களை ஊடு­ருவிப் பார்ப்­போ­மானால் நடக்­கக்­கூ­டா­த­வைகள் எதிர்­பா­ரா­த­வைகள் நடந்து விடுமோ என்று பயங்­கொள்­ளு­ம­ள­வுக்கு இலங்­கையின் அர­சியல் போக்­குகள் நடந்து செல்­கின்­றன.

ஆட்­சியில் தற்­போது இருக்­கின்ற அரசு தமிழ் மக்­க­ளையும் ஐ.நா. தீர்­மா­னத்­தையும் ஏமாற்­றினால் தென்­னி­லங்­கையில் ஆட்­சியை நடத்­தாது தடுக்கும் போராட்­டத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­னெ­டுக்கும், இப்­போ­ராட்­டத்­துக்கு தமிழ் மக்கள் பூரண ஆத­ரவைத் தரவும் காத்­தி­ருக்­கி­றார்கள். என யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தேசிய அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்­கை­யொன்றை விடுத்­தி­ருக்­கிறார்.

இதே­நேரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கடு­மை­யான தொனியில் இவ்­வா­றா­ன­தொரு கருத்தைக் கூறி­யி­ருக்­கிறார்.

எனது மக்­க­ளுக்­கான தீர்­வா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் ஏற்­ப­ட­மு­டி­யாது. புதிய அர­சியல் சாச­னத்­துக்கு பெரு­வா­ரி­யான மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக எமது மக்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது. ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வை இலங்கை அர­சாங்கம் காண­மு­டி­யாது என சம்­பந்தன் காட்­ட­மான கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

மாவை சேனா­தி­ரா­ஜா­வி­னு­டைய எச்­ச­ரிக்­கை­யையும் சம்பந்தனுடைய உணர்வு பூர்­வ­மான கருத்­தையும் சாதா­ர­ண­மாக எடை­போட்டு விட­மு­டி­யாது. அர­சியல் தீர்­வையும், இன்­றைய அர­சியல் சூழ்­நிலை வாதங்­க­ளையும் அவ­தா­னிக்­கின்ற போது ஒரு சில விட­யங்­களை பட்­ட­வர்த்­த­ன­மாக அவ­தா­னிக்­கவும் முடி­கி­றது அனு­மா­னிக்­கவும் முடி­கி­றது.

தேசிய அர­சாங்­கத்தின் பலமும் பய­ணமும் இடையில் நின்று விடுமோ என்ற விவ­கா­ர­மொன்று இரண்­டா­வது விடயம். எந்த நோக்­கத்­துக்­காக அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற இலக்கும் கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டதோ அந்த இலக்கை விட்டு அது நகர்ந்து செல்­வ­தா­கவும் கூறப்­பட்ட கருத்து திரிந்­து­வ­ரு­கி­ற­தா­கவும் காணப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே மேற்­படி இரண்டு தலை­வர்­க­ளு­டைய எச்­ச­ரிக்­கையும் கருத்தும் வெளிக்­கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது.

நல்­லி­ணக்க அர­சாங்கம் அல்­லது தேசிய அர­சாங்கம் கரு­நிலை பெற்­றுக்­கொண்ட வேளையில் புதிய அர­சியல் சாசனம் பற்­றிய கருத்துப் பரி­மாற்­றங்கள் தமிழ் மக்கள் சார்ந்­த­தா­கவே அனு­மா­னிக்­கப்­பட்­டது. தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் பிரச்­சினைக்கு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாச­ன­மொன்றை புதி­தாக உரு­வாக்­கு­வதன் மூலம் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்­வொன்றை கொண்­டு­வ­ர­மு­டியும். தற்­போ­தைய அர­சியல் சாச­னத்தின் அதற்­கான மாற்று வழிகள் இல்­லை­யென்­பது கண்­ட­றி­யப்­பட்ட நிலை­யி­லேயே புதிய அர­சியல் சாசனம் என்ற வியூகம் வளர்ந்து கொள்ள ஆரம்­பித்­தது. இன்னும் அழுத்­த­மாகக் கூறப்­போனால் தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தே ஆழ­மாக வேரூன்றி நின்­றது.

இவ்­வி­ட­யத்­தையே தமிழ்த் தலை­மை­களும் புத்தி ஜீவி­களும் சிங்­கள மக்கள் சார் முன்­னோ­டி­களும் கொண்­டி­ருந்­தார்கள். இந்த எதிர்­பார்ப்பின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தலை­மைகள் தைரி­ய­மாக தம் மக்­க­ளிடம் கருத்துக்களை கூறி­வந்­தன. புதிய அர­சியல் சாச­ன­மொன்று உரு­வாக்­கப்­பட்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற கருத்தை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­னார்கள். இதன் இன்­னொரு பெறு­மா­ன­மா­கவே 2016 முடி­வுக்­குமுன் தீர்வை அடைந்து விடு­வோ­மென்ற காலக்­க­ணக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

சிங்­கள மக்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் புதிய அர­சியல் சாச­ன­மொன்றை நாட­வேண்­டிய தேவையும் இருக்­க­வில்லை. கோர­வேண்­டிய அவ­சி­யமும் காணப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி முறையின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களின் மாற்றம், தேர்தல் முறை மாற்றம் சம்­பந்­த­மாக அவர்கள் சின்ன அளவில் அக்­கறை கொண்­டி­ருந்­தார்­களே தவிர அதுவும் முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் நிறை­வேற்று அதி­கார பலத்தின் கொடு­மையால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணக்­க­ருத்­தாக அது இருந்­ததே தவிர புதிய அர­சியல் சாச­னத்தின் தேவை­பற்றி சிங்­கள மக்கள் பெரிய அளவில் அலட்டிக் கொள்­ள­வில்லை.

யுத்தம் முடி­வுக்கு கொண்டு வந்­த­தன்பின் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு பற்றி உள்­நாட்­டிலும் சர்­வ­தேச அள­விலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ வுடன் பேசப்­பட்ட விட­யமும் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட செய்­தி­களும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­கு­வ­தற்கு தான் 13+ க்கு அப்­பாலும் செல்லத் தயா­ராக இருக்­கின்றேன் என வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டதே தவிர புதிய அர­சியல் சாசனம் பற்றி பிரஸ்­தா­பிக்­கப்­பட்­ட­தாக எந்­த­வொரு அர­சியல் குறிப்­பே­டு­க­ளிலும் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அறி­ய­மு­டி­ய­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வுப்­பொதி முன்­மொ­ழி­வு­களை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்த வேளை­யிலும் இந்த அர­சியல் சாசன உரை­பற்றி சிந்­தித்­த­தா­கவே தெரி­ய­வில்லை. தமிழ் மக்கள் மற்றும் சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ர­வுடன் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் விளைவே புதிய அர­சாங்­கத்­துக்கு புதிய அர­சியல் சாசன உரு­வாக்கம் பற்றி சிந்­திக்க வேண்­டிய தேவை­யை உருவாக்கியிருக்கின்றது. காரணம் நீண்ட கால­மாக நில­வி­வரும் சிறு­பான்மை சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வேண்­டிய நிலை­க­ளி­லி­ருந்து கடந்­த­கால அர­சாங்­கங்கள் தவ­றிய நிலையும் தட்டிக் கழித்த போக்கின் விளைவே புதிய அர­சியல் சாச­னத்தின் அவ­சியம் உண­ரப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி இலங்­கைக்கு போர்­முடி­வுக்­குப்பின் சர்­வ­தேச ரீதி­யாக ஏற்­பட்­டி­ருக்கும் நெருக்­க­டி­யி­லி­ருந்து காப்­பாற்ற வேண்­டு­மாயின் தீர்­வொன்றை முன்­வைக்­க­வேண்­டு­மென்ற உண்­மை­நிலை புதிய அர­சாங்­கத்­தினால் உண­ரப்­பட்­டதன் விளைவே புதிய அர­சியல் சாசனம் பற்­றிய சிந்­தனை முகிழ்ப்­பாகும்.

குறிப்­பாக தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் போராட்­டங்கள், கோரிக்­கைகள், தீர்க்­கப்­பட்டு நாட்டில் நல்­லி­ணக்­கமும் சமா­தா­னமும் அமை­தியும் கொண்டு வரப்­பட வேண்­டு­மாயின் முறை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­த­கைய அதி­கா­ரப்­ப­கிர்வை ஒற்­றை­யாட்­சியை வலி­மைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் பழைய அர­சியல் சாச­னத்தின் மூலம் தீர்வு காண­மு­டி­யாது என்ற யதார்த்த நிலை உண­ரப்­பட்­ட­த­னா­லேயே சமஷ்டி வரை­வி­லான ஆட்­சி­மு­றை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற உண்­மை­நிலை உண­ரப்­பட்­டது.

சமஷ்டி என்­பது இலங்­கையில் வாழும் பேரின சமூ­கத்தின் மத்­தியில் மாறு­பட்ட கருத்­து­க­ளையும் அர்த்­த­மற்ற வாதங்­க­ளையும் உரு­வாக்­கி­வந்த நிலை கார­ண­மா­கவே அதற்கு மாற்­றீ­டான புதிய அர­சியல் சாச­ன­மொன்று எல்லா மக்­க­ளையும் திருப்­திப்­ப­டுத்தும் வகையில் கண்­டு­பி­டிக்­கப்­பட வேண்­டு­மென்ற உண்மை நிலை உண­ரப்­பட்­டதன் கார­ண­மா­கவே புதிய அர­சியல் சாசனம் பற்றி தேடி ஓட­வேண்­டிய தேவையும் அவ­சி­யமும் கண்டு கொள்­ளப்­பட்­டது. இது இவ்­வாறு இருக்கும் சூழ்­நி­லையில் சமஷ்­டி­யென்ற விவ­காரம் இன்று இலங்­கை­ய­ர­சி­யலில் மீண்டும் நெருக்­க­டி­க­ளையும் எதிர்­வா­தங்­க­ளையும் உரு­வாக்கி வரு­வதைக் காண­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­கியே தீரு­வோ­மென தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐ.தே.கட்­சியும் வாக்­கு­று­தி­களை நல்­கி­வ­ரு­கிற போதும் அது வழங்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய சூழ்­நி­லை­யாக தேசிய அர­சாங்கம் பலம் கொண்­ட­தாக தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் போக்கு நிலை­களை பார்க்­கின்ற போது தேசிய அர­சாங்­கத்தின் பலமும் கூட்டு நம்­பிக்­கை­களும் நாளுக்கு நாள் உடைந்து கரைந்து செல்­வ­தையே சாதா­ர­ண­மாக அவ­தா­னிக்க முடி­கி­றது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் துணை­யின்றி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சித் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டு­மாயின் எம்­முடன் இணை­யுங்கள் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சி­யா­ளர்கள் அழைப்பு விட்­டி­ருப்­பது நல்­ல­தொரு சகு­ன­மாகத் தெரி­ய­வில்லை. இது­போ­லவே மஹிந்த அணி­யி­னரும் மைத்­திரி அணி­யி­னரும் இணைந்து கொள்ளும் நாள் வெகு­தூ­ரத்தில் இல்­லை­யென்ற ஆரூ­டமும் அண்­மைக்­கா­லத்தில் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

கூட்டு அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை சுதந்­திரக் கட்­சி­யினர் ஐ.தே.கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்­டி­ருப்­பது பல மூத்த அமைச்­சர்­க­ளுக்கும் சுதந்­திரக் கட்­சியின் மூல­வா­தி­க­ளுக்கும் விருப்­ப­மான ஒரு செய­லாக உடன்­பாடு கொண்­ட­தாக காணப்­ப­ட­வில்­லை­யென்­பது கசிந்து கொண்­டி­ருக்கும் செய்­தி­களால் அறிந்து கொள்­கின்ற விட­ய­மாகும். காரணம் கூட்டு அர­சாங்­கத்­துக்குள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பலமும் செல்­வாக்கும் வளர்ந்து கொண்டு போகின்­றது என்ற அபிப்­பி­ராயம் மேற்­படி நபர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது என்­பது உண்­மையே.

இது­போ­லவே கூட்­ட­ர­சாங்­கத்தின் முக்­கிய பங்­கா­ளிக்­கட்­சி­யான ஐ.தே.கட்­சி­யினர் மத்­தி­யிலும் கூட்­ட­ர­சாங்­கத்தின் இணக்­கப்­பா­டான தேசிய அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் பூரண திருப்தி காணப்­ப­ட­வில்லை. சுதந்­திரக் கட்­சி­யினர் எவ்­வாறு தமது தனித்­துவம் பேணப்­பட வேண்­டு­மென்று கரு­து­கி­றார்­களோ அதே­போ­லவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனித்­து­வமும் மக்கள் வாக்கு வங்­கியும் காப்­பாற்­றப்­பட வேண்­டு­மென்ற கவனம் கொண்­ட­வர்­க­ளாக ஐ.தே.க.வின் மூத்த உறுப்­பி­னர்­களும் சிரேஷ்ட தீர்­மா­னிப்­பா­ளர்­களும் காணப்­ப­டு­கின்­றார்கள். இது ஒரு­பு­ற­மி­ருக்க தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு ஆண்டு கால ஒப்­பந்தம் முடி­வ­டை­கிற நிலையில் மூன்­றா­வது ஆண்டும் தேசிய அர­சாங்­க­மா­கவே பய­ணிக்க வேண்­டுமா இல்­லையா என்­பதை இரு­பக்க கட்­சி­களும் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் நெருங்கி வரு­கின்ற நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான பிதா மக்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவும் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு விவ­கா­ரத்தில் ஒரு நேர்­கோட்டுப் பாதையில் பய­ணிக்க வேண்­டிய தேவை இருந்து வரு­கின்ற போதும் இவ்­விரு கட்­சி­க­ளுக்குள் இருக்கும் அமுக்­கக்­கு­ழுக்கள் தேசிய அர­சாங்­கத்தின் போக்கை முடி­வு­றுத்­தி­வி­டுமா? என்ற பயமும் தலை­தூக்கி வரு­வதை அர­சியல் அவ­தா­னிகள் அவ­தா­னிக்­கா­ம­லில்லை.

இவ்­விரு கட்­சி­களும் தமது உடன்­ப­டிக்­கையை முறித்துக் கொண்டு தனித்­தனிப் பாதையில் பய­ணிக்க முடிவு கொள்­வார்­க­ளாக இருந்தால் அர­சியல் தீர்­வா­னது இல­வு­காத்த கிளி­போன்ற நிலையை தமிழ் மக்­க­ளுக்கு உரு­வாக்­கு­மென்­ப­தற்கு மாற்று வாதம் இருக்க முடியாது.

தமிழ் மக்கள் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எண்ணமெல்லாம் நிறைந்திருப்பதை சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு மற்றும் இணைப்பு என்ற விவாகாரமுமாகும். இவை இரண்டும் தமிழ் மக்களின் தாரக மந்திரமாக கடந்த 70 வருடங்களாக இருந்து வந்துள்ளன. அது நோக்கிய பயணத்துக்காகவே 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்கள் தங்கள் ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள். இதன் இறுதி உச்சரிப்பாகவே 2016 குள் அரசியல் தீர்வு என்ற கட்டியம் கூறப்பட்டது.

ஆனால் போகிற போக்கின் அனுமானத்திலேயே மாவை மற்றும் சம்பந்தன் ஆகியோரின் வலுவான கருத்து கடந்த வாரம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. நாடிப்பிடித்துப் பார்த்தல் என்ற அடிப்படையில் தேசிய அரசாங்கத்தின் தீர்வு என்னும் நிலைப்பாடு தடம் புரண்டு போகிறது என்பது உணரப்பட்டதன் காரணமாகவோ என்னவோ தேசிய அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு வழங்கி வரும் ஆதரவு வாபஸ் பெறப்பட வேண்டும். வகிக்கும் பதவிகள் துறக்கப்பட வேண்டுமென்ற மறைபொருளான கோரிக்கையை அண்மையில் ஒரு அமைப்பு கூட்டமைப்பினரை நோக்கி விடுத்திருந்தமையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான இறுகிவரும் சூழ்நிலையில் அரசு தீர்க்கமான முடிவை எடுக்கத்தவறின் ஜே.வி.பி.யினர் கூறியது போல் தமிழ் மக்கள் வேற்று நிலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையே உருவாகும். 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.