Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை- சமஷ்டி தேவையில்லை என கூறிய சம்பந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைய முழுஐமயாக ஏற்று க்கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடி ப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ளதாக  மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர புதிய தக வலொன்றை வெளியிட்டுள்ளார்.
 
இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்பந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
 
நாம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் வரை அதேபோல் உண்மையான பௌத்த மதத்தவனாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்க இட மளிக்கப்பட மாட்டாது. அது மாத்திரமன்றி நீக்கவும் அனுமதியோம். அதேபோல் சமஸ்டி அல்லது வேறு எந்த வழியிலாகவோ நாட்டை பிரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என்ப தையும உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றோம்.
 
இவை மாத்திரமன்றி வடக்கு – கிழக்கு அல்லது வேறு எந்த மாகாணங்களையும் இணை க்கவும் இடமளிக்க மாட்டோம். எதிர்க்கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறுவது போல் ஒற்றையாட்சி நீக்கப்படவோ சமஸ்டிமுறை ஏற்படுத்தவோ மாட்டாது என்பதை மாநாயக்க தேரர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் சில ஊடகங்களில் வெளி யான புதிதாக தேசிய கீதமொன்று தயாரிக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளிலும் உண்மையில்லை என்பதை எடுத்துரைத்தோம். அதனை சிங்கள மொழியிலும் தமிழ் மொழி யிலும் பாடலாம்.
 
இந்த உரையின் போது எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை பாராட்டிய அமைச்சர் மஹி ந்த அமரவீர, சம்பந்தன் இருக்கும் காலத்திலேயே தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
எமது நாட்டில் தற்போது தமிழர் ஒருவராக இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். சிறந்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன், வரலாற்றில் எமக்குக் கிடைத்த சுமுகமாக பிரச்சனைகளை பேசித் தீர்த்துக்கொள்ளக் கிடைத்த சிறந்த அரசியல் தலைவர் ஆவார். சம்பந்தனுடன் நாமும் கலந்துரையாடினோம். அந்த சந்தர்ப்பங்களில் இந்த நாடு பௌத்த நாடு என்பதை அவரும் ஏற்றுக்கொண்டதுடன் பௌத்த மதத்திற்கான முன்னுரி மையை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
 
மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் தான் அதனை முன்வைக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அவர் பல தடவைகள் எம்மிடம் கூறியிருக்கின்றார். அதேபோல் தான் ஒருபோதும் சமஸ்டியையோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கையையோ முன்வைக்கப்போ வதில்லை என்றும் தெரிவித்தார். சம்பந்தன் போன்ற மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியிடமிருந்து இவ்வாறான கருத்துக்களை வெளியாகும் போதே நாட்டின் பிரதான பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
சம்பந்தன் தலைமை வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் இனவாதிகள் பலர் இருக்கின்றனர். சிவாஜிலிங்கம் போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை நினைவு கூருவதுடன் தனிநாட்டுக் கோரிக்கையையும் அடிக்கடி முன்வைக்கின்றனர். எம்மிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் இருப்பது போல்தான் அங்கும் இரு க்கின்றனர். பௌத்த விகாரைகளுக்கு ஒருபோதும் செல்லாத சிலர் பௌத்த வெறியர்களைப் போல் நடந்துகொள்ளும் அணியொன்றும் எம்மத்தியில் இருக்கின்றது.
 
அவர்கள் முகநூல் ஊடாக இஸ்லாமியர்களையும் கத்தோலிக்கர்களையும் திட்டித்தீர்ப்ப துடன் அவர்களை பழிவாங்க வருமாறு அழைப்பும் விடுக்கின்றனர். அதேபோல்தான் முஸ்லிம் ஒருவரும் புத்த பெருமானை இழிவுபடுத்தி பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். ஆனால்அவரை முஸ்லிம் சமூகம் ஒதுக்கி வைத்துவிட்டது. அதேபோல்தான் தமிழர்கள் மத்தியிலும் சிலர் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்காக நாடு பிளவுபடப்போவதில்லை. அதனால் நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இதுவே சிறந்த தருணம். அதனை நாம் சரியாப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். Sampanthan

 

http://www.thinakkathir.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.