Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அதிகாரம் போலியானது 'என்பதை உணர்ந்து செயல்படும் ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

'அதிகாரம் போலியானது 'என்பதை உணர்ந்து செயல்படும் ஜனாதிபதி மைத்திரி

011-d432743974f5c26ef4990568c66ef8568a3df7ef.jpg

 

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு ஒரு பின்னோக்கிய பார்வை

– ப.பன்னீர்செல்வம் –

ஒரு நாட்டின் அரசன் அந்த நாட்டின் தற்­கா­லிக பாது­கா­வ­லனே தவிர அந்­நாட்­டுக்கு சொந்­தக்­காரர் அல்ல என்ற பௌத்த தர்­மத்தின் போத­னைக்கு இலங்­கையின் ஜனா­தி­பதி பத­வியை ஏற்று அப் பத­வியில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக நாட்­டையும் மக்­க­ளையும் தர்­மத்தில் ஆள்­பவர் தான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவார். சர்­வ­தே­சத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இலங்­கையை உயர்த்தி சர்­வ­தே­சத்தில் புகழ்­பெறச் செய்த பெருமை ஜனா­தி­ப­தி­யையே சேரும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் ஒரு யுகப் புரட்­சியை ஏற்­ப­டுத்தி மனி­தா­பி­மா­னத்­தையும் மக்­களின் சுதந்­தி­ரத்­தையும் முதன்­மைப்­ப­டுத்தி ஆட்­சியை கைப்பி­டித்­தவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆவார். நாளை அதா­வது 2017 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திக­தி­யுடன் ஜனா­தி­பதி பத­வி­யேற்று இரண்டு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

இந்த இரண்டு வரு­டங்­களில் ஜனா­தி­ப­தியின் திட்­டங்கள், நட­வ­டிக்­கை­களை பின்­னோக்கி மீளாய்வு செய்து பார்த்தால், அனைத்தும் ஆக்­க­பூர்­வ­மா­ன­தா­கவே உள்­ளன. ஜனா­தி­ப­தி­யொ­ருவர் இரண்டு தட­வைக்கு மேல் போட்­டி­யி­டலாம் என்ற சர்­வா­தி­கார சட்­ட­மான 18 ஆவது திருத்­தத்தை ஒழித்து 19 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­றினார். அதி­கா­ரங்­களை பலப்­ப­டுத்தும் உலகில் தனது நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைத்து பாரா­ளு­மன்­றத்­திற்கும் பிர­த­ம­ருக்கும் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளித்தார்.

இதன்மூலம் இலங்­கையின் சர்­வா­தி­கா­ரத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்தார். இது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் முத­லா­வது வெற்­றி­யாகும். இரண்­டா­வ­தாக அர­சி­ய­ல­மைப்பு சபை நிறு­வப்­பட்­டது. இதற்கு ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்த அதி­கா­ரமும் கைய­ளிக்­கப்­பட்­டது.

அத்­தோடு தேர்தல், அரச சேவைகள், பொலிஸ், கணக்­காய்வு, மனித உரி­மைகள், இலஞ்சம் அல்­லது ஊழல் குற்­றச்­சாட்டு விட­யங்கள் தொடர்­பிலும் ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. அதற்­கான உறுப்­பி­னர்­களை அர­சி­ய­ல­மைப்பு சபை தெரிவு செய்யும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தினார்.

நீதித்­து­றையின் சுயா­தீனமும், சுதந்­திரமும் பாது­காக்­கப்­பட்­டன. இதற்­க­மைய பிர­தம நீதி­ய­ரசர் மற்றும் உயர் நீதி­மன்றம், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், நீதி­மன்ற சேவைகள் ஆணைக்­குழு உறுப்­பி­னர்கள், சட்­டமா அதிபர், கணக்­காய்­வாளர், பொலிஸ் மா அதிபர், ஒம்­புட்ஸ்மன், பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் போன்ற பத­வி­க­ளுக்­கான ஜனா­தி­ப­தியின் பரிந்­து­ரைகள் அர­சி­ய­ல­மைப்பு சபையால் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்ற நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. மோச­டிக்­கா­ரர்கள் பாரா­ளு­மன்றம் வரு­வது தடுக்­கப்­பட வேண்­டு­மென்­பது அனை­வ­ரதும் கருத்­தாக இருந்­தது. இதற்­க­மைய 20 ஆவது திருத்­தத்தை கொண்டு வந்து விருப்பு வாக்­கு­மு­றை­மையை மாற்­று­வ­தற்கு ஜனா­தி­ப­தியாலும் அரசாலும் அதிக கவனம் செலுத்­தப்பட்டது.

இது தொடர்­பி­லான அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தோடு அச்­சட்­ட­மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி அரச வர்த்­த­மா­னி­யிலும் பிர­சு­ரிக்­கப்­பட்­டது. அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் நியா­ய­மான முறையில் தேர்தல் மாற்­றங்கள் அமைய வேண்­டு­மென்­பதே ஜனா­தி­ப­தியின் நோக்­க­மாக இருந்­தது.

விருப்பு வாக்கு முறையை ஒழித்தல், தொகு­தி­வா­ரி­யாக எம்.பி. ஒரு­வரை தெரி­வு­ செய்தல், பல் ஆசன முறைமை, விருப்பு மற்றும் தொகு­தி­வாரி கலப்பில் எம்.பி.யை தெரிவு செய்தல், சிறு கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு எந்­த­வி­த­மான அநீ­தியும் ஏற்­ப­டாது இருத்தல் போன்ற விட­யங்­களை தேர்தல் முறைமை மாற்­றத்தின் போது ஜனா­தி­பதி முதன்­மைப்­ப­டுத்­தினார்.

இது தொடர்பில் பல சுற்­றுப்­பேச்­சுகள் பல்­வேறு கட்­சி­க­ளுடன் நடத்­தப்­பட்­டன. அதன்­போது முரண்­பா­டு­களும் தலை­தூக்­கின. இக் கட்­சி­களில் சிறு­பான்மைக்­கட்­சிகள் சில விட­யங்­களை ஏற்­றுக்­கொள்ள மறுத்­தன. இவ்­வா­றான சிக்­க­லான சூழ்­நி­லை­களால் திருத்தப் பிரே­ர­ணையை நிறை­வேற்றிக் கொள்­வது தடைப்­பட்­டது. இது நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்தால் இலங்­கையில் ஜன­நா­யக சமூ­க­மொன்றை ஏற்­ப­டுத்தும் சந்­தர்ப்பம் மேலும் வலுப்­பெற்­றி­ருக்கும்.

20 ஆவது திருத்­தத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வது ஜனா­தி­ப­தியின் அபி­லா­ஷை­யாகும். ஆனால் அப்­பி­ரே­ர­ணையை அன்று நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாமல் போனது. தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தன்­மூலம் அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு வித்­தி­டப்­பட்­டுள்­ளன. கடந்த தேர்­தலின் போது ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­பதி உறுதி வழங்­கினார். அதனை நடை­மு­றைப்­ப­டுத்த தற்­போது நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்­காக பாரா­ளு­மன்றம் ஊடாக அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக இயங்­கு­வ­தற்­கான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இதன் தலைவர் சபா­நா­யகர் கரு­ ஜ­ய­சூ­ரிய ஆவார். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 21 பேர­டங்­கிய செயற்­குழு ஒன்று இதற்­காக ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிர­தமர் இந்த செயற்­பாட்டுக் குழுவின் தலைவர் பதவி வகிக்­கின்றார். இது தொடர்பில் 6 குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

அடிப்­படை உரி­மைகள், நீதி­மன்றம், சட்டம் மற்றும் சமா­தானம், அரச சேவை, அரச நிதி, கேந்­திரம் மற்றும் நிறு­வன தொடர்­புகள். இதற்கு மேல­தி­க­மாக புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­களின் கருத்­து­களை அறி­வ­தற்­காக அரச அர­சி­ய­ல­மைப்புச் சபை திருத்தம் தொடர்­பான மக்கள் கருத்­த­றியும் ஆணைக்­குழு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தில் நிய­மிக்­கப்­பட்­டது. தகவல் அறியும் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டதன் மூலம் சுய­வி­மர்­ச­னங்கள் கருத்­து­களை வெளி­யிடும். மற்றும் எழுதும் உரிமை ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டதன் மூலம் 19 ஆவது திருத்­தத்தின் ஊடாக மக்கள் எதிர்­பார்ப்­புகள் மேலும் பலப்­ப­டுத்­தப்­பட்­டன.

 

சர்­வ­தேச தொடர்­புகள்

சர்­வ­தே­சத்தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த இலங்­கையை உயர்­நி­லைக்கு கொண்டு வந்த பெருமை ஜனா­தி­ப­தி­யையே சாரும். ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­களை பாது­காப்­ப­தற்கு பொறுப்­பு­மிக்க நாடாக இலங்­கை­யுடன் மேற்­கத்­தேய நாடுகள் தொடர்­பு­களை பேண ஆரம்­பித்­ததும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நட்­பு­ற­வுகள் ஆரம்­ப­மா­கின. இலங்­கைக்கு எதி­ராக கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. இதனால் வெளி­நா­டு­க­ளு­ட­னான தொடர்­புகள் சீர்­கு­லைந்­தன. பொரு­ளா­தார தடையும் ஏற்­ப­டுத்­தப்­படும் நிலைமை தலை­தூக்­கி­யது.

சீனா­விடம் அதிக வட்­டிக்கு கடன் பெறு­வது, சீனா­வுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கி­யது போன்ற பிழை­யான வெளி­நாட்டு கொள்­கைகள் அயல்­நா­டான இந்­தி­யா­வு­ட­னான இராஜ­தந்­திர உற­வு­களில் பாதிப்­பு­களை கடந்த ஆட்­சி­யினர் ஏற்­ப­டுத்திக் கொண்­டனர். அமெ­ரிக்கா உட்­பட மேற்­கத்­தேய நாடுகள் பல இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்­டன. ஜீ.எஸ்.பி.வரி இழக்­கப்­பட்­டது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்ற பின்னர் வெளி­நா­டு­க­ளுடன் நட்­பு­ற­வுகள் பேணப்­பட்­டன. இலங்­கை­யுடன் சர்­வ­தேசம் நெருங்கிச் செயற்­பட ஆரம்­பித்­தது. ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் இலங்­கைக்கு சாத­க­மான நிலை­மைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

ஜனா­தி­ப­தி­யையும் இலங்­கை­யையும் சர்­வ­தேசம் மதிக்க ஆரம்­பித்­தது. அது மட்­டு­மல்­லாது இலங்­கையில் இனங்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதற்­காக புதிய நிறு­வ­னங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

ஜெனி­வாவில் மனித உரிமை ஆணைக்­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பதவிக் காலம் இலங்­கையின் பொற்­காலம் என வர்­ணித்­தது. இலங்­கையில் வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்ட பொரு­ளா­தாரம் உறுதி­யான நிலை­மைக்கு உயர்த்­தப்­பட்­டது. அரச ஊழி­யர்­களின் சம்­பளம் உயர்த்­தப்­பட்­டது. மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­பட்­டன.

கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கு போஷாக்கு உணவுப் பொட்­ட­லங்கள் வழங்­கப்­பட்­டன. மருந்து வகை­களின் விலைகள் குறைக்­கப்­பட்­டன. நாட்டில் மத்­திய, உயர்­தர அபி­வி­ருத்தித் திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. ஊழல் மோச­டி­களை தடுப்­ப­தற்கு அனைத்து மட்­டங்­க­ளிலும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இவ்­வாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு அபி­வி­ருத்­தி­களையும் மேம்­பா­ட்டுத்திட்டங்களை­யும் முன்­னெ­டுத்தார். இதன் பலா­ப­லன்­களை பெற்றுக் கொள்­வ­தற்கு மக்­க­ளுக்கு சில காலம் எடுக்கும்.

சூழலை பாது­காப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி அதிக கவனம் செலுத்­தி­ய­தோடு பல்­வேறு திட்­டங்­களை அமுல்­ப­டுத்­தினார். கல்­வித்­துறை முன்­னேற்­றத்­திற்­காக ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தோடு தொழில்துறை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நல்­லாட்சி ஊடாக ஜன­நா­யகக் கோட்­பா­டுகள் நிலை­யாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டுள்­ள­தோடு அதனை மக்கள் உண­ரா­விட்­டாலும் அதுவே உண்மை நிலை­யாகும். கடந்த ஆட்சிக் காலத்தில் காட்டு தர்பார் நடந்த இலங்­கையில் ஜன­நா­ய­கத்­தையும் மக்கள் சுதந்­தி­ரத்­தையும் மனித உரி­மை­க­ளையும் பாது­காத்து நிலை­யான அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வதில் ஜனா­தி­ப­தியின் கடந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் விசே­ட­மான பல்­வேறு திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அத்­தோடு நாட்­டுக்கு தேவை “கொன்கிரீட் காடுகள்” அல்ல.

 சூழல் பாது­காப்­பு­ட­னான நிலை­யான தேசிய அபி­வி­ருத்­தியே என்­பதை உணர்ந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2017 ஆம் ஆண்டை இலங்­கையில் வறுமை ஒழிப்பு ஆண்­டாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தோடு அண்­மையில் இலங்­கையின் தேசிய அபி­வி­ருத்தி தொடர்­பான நிலை­யான பிர­க­ட­னத்தை வெளி­யிட்டு அதற்­காக நிபுணர்கள் குழுவையும் நியமித்தார்.  

இவ்­வாறு ஜனா­தி­ப­தியின் இரண்டு வருட கால பதவிப் பூர்த்­தி­ய­டையும் போது இலங்­கைக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் உழைத்த உய­ரிய தலை­வ­ராக ஜனா­தி­பதி திகழ்­கிறார். ஒரு நாட்டின் தலைவர் அந்த நாட்டின் தற்­கா­லி­க­மான பொறுப்­பா­ளியே தவிர அந்­நாட்­டுக்கு சொந்­தக்­காரன் அல்ல என்ற பெளத்த தர்ம போத­னைக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்­டையும் மக்களையும் ஆட்சி செய்கிறார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.