Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன?

Featured Replies

ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன?

Jayalalithaa-90a3cbffdfc28c667da69e050375521042e3be7e.jpg

 

வரட்சி ஒரு­புறம் வாட்­டு­கின்­றது. மறு­புறம் காவிரி ஆற்றில் நீரைத்­ தி­றந்து விடு­வ­தற்கு கர்­நா­டக மாநில அரசு மறுத்து வரு­கி­றது. இந்த நிலையில் விவ­சாய பயிர்ச்­செய்­கைகள் அழிந்து போனதால் அதிர்ச்­சி­யுற்ற விவ­சா­யிகள் தற்­கொலை ஒன்றே இதற்குத் தீர்வு என்று தங்கள் உயிர்­களை மாய்த்துக் கொள்­கின்­றனர்.

கடந்த சில மாதங்­களில் மாத்­திரம் இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்ட விவ­சா­யி­களின் எண்­ணிக்கை 100 ஐ தாண்டி விட்­டது. இந்த நிலைமை விவ­சா­யி­களை மட்­டு­மின்றி அனைத்து மக்­க­ளையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது.

பரு­வத்தில் பெய்ய வேண்­டிய மழை பொய்த்து விட்­டது. இதனால் வரட்சி தொடர்­கின்­றது. கடந்த சில ஆண்­டு­க­ளாக காவி­ரியில் நீர் வரவு குறைந்து காணப்­பட்­டது. காவி­ரியில் நீரை திறந்து விடு­மாறு உச்ச நீதி­மன்றம் அறி­வு­றுத்­தி­ய­போதும் கர்­நா­டக அரசு அதனை செயல்­ப­டுத்­து­வ­தற்கு மறுப்பு தெரி­வித்து வரு­கி­றது. இதனால் காவிரி ஆறும் வரண்­டுபோய் விட்­டது. ஆற்றில் கற்­களும் மணல் குன்­றுமே தெரி­கி­ன்றன.

இது பற்றி மத்­திய அரசும் கண்­டு­கொள்­வ­தாக இல்லை. கர்­நா­டக அர­சுக்கு சார்­பான முறை­யி­லேயே மத்­திய அரசு நடந்து கொள்­வ­தாக தமி­ழக விவ­சா­யிகள் கூறு­கின்­றனர்.

இதே­வேளை, நிலத்­தடி நீர் மட்­டமும் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. விவ­சா­யத்­தையே நம்­பி­வாழும் விவ­சா­யி­களின் நிலைமை பெரும் சிக்­க­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது. விவ­சா­யி­களின் பயிர்கள், நெல், கரும்பு, வாழை அனைத்­துமே நீரின்றி கரு­கிப்­போ­யுள்­ளன.

இதனைப் பார்த்து விவ­சா­யிகள் பெருந்­து­ய­ரமும் கவ­லையும் அடைந்­துள்­ளனர். துயரம் தாள முடி­யாத நிலை­யி­லேயே அவர்கள் தற்­கெலை செய்­துகொள்ளும் முடி­வுக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

தமி­ழக அரசு வரட்சி நிலை­வரம் பற்றி ஆய்வு செய்­வ­தற்­காக அமைச்­சர்கள், மாவட்ட ஆட்­சி­யா­ளர்கள் அடங்­கிய குழுவை நிய­மித்து மாவட்ட ரீதி­யாக ஆய்­வுப்­ப­ணி­களை மேற்­கொண்­டது. இவர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கப்­படும் என்று அரசு தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

விவ­சா­யிகள் தற்­கொலை செய்து கொண்­டதை சில அமைச்­சர்கள் கொச்­சைப்­ப­டுத்தி பேசி­யி­ருந்­தனர். "விவ­சா­யிகள் கவ­லையில் தற்­கொலை செய்து கொள்­ள­வில்லை. நோய் மற்றும் மூப்பு கார­ண­மா­கவே இறந்­தார்கள்" என்று தமி­ழக அமைச்­சர்கள் தெரி­வித்­தி­ருந்த கருத்து விவ­சா­யி­க­ளிடம் அதிர்ச்­சி­யையும், ஆத்­தி­ரத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. தமி­ழக அமைச்­சர்­களின் அவ­தூறு பேச்­சுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமது கடு­மை­யான கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வேண்டும் என்றும் அவர்கள் தற்­கொலை செய்து கொள்­வதை தடுக்க வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி சென்னை சேப்­பாக்­கத்தில் கடந்த ஞாயி­றன்று பெரும் எண்­ணிக்­கை­யி­லான இளை­ஞர்கள் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் குதித்­தனர். சேப்­பாக்கம் விருந்­தினர் மாளி­கையில் இந்த உண்­ணா­வி­ரத போராட்டம் நடை­பெற்­றது. இதில் அதி­க­ளவில் பெண்­களும் கலந்து கொண்­டனர். அதே­வேளை, ஜல்­லிக்­கட்டை மீண்டும் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென வலி­யு­றுத்தி சென்னை மெரீனா கடற்­க­ரையில் பேரணி நடத்­தப்­பட்­டது.

விவ­சா­யிகள் பிரச்­சினை, ஜல்­லிக்­கட்டு விவ­காரம் போன்­ற­வற்­றுக்­காக நடத்­தப்­படும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் மற்றும் பேர­ணியில் சென்னை மாந­கர இளை­ஞர்–­யு­வ­திகள் கலந்­து­கொள்ள மாட்­டார்கள் என்று எதிர்வு கூறப்­பட்­டி­ருந்த நிலையில் அதனை பொய்ப்­பிக்கும் வகையில் பல ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள் கலந்து கொண்­டமை பெரும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சென்­னையைத் தொடர்ந்து மேலும் பல நக­ரங்­களில் இது போன்ற பேர­ணிகள் நடத்­தப்­பட்­டன.

எவ்­வா­றா­யினும் இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­குமா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­தாகும். கர்­நா­டகா அரசு நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையே அலட்­சியம் செய்து விட்­டது. அந்த அர­சுடன் தமி­ழக அரசு பேச்­சு­வார்த்தை நடத்தி காவிரி நீரைப்­பெற்றுக் கொடுக்­குமா என்­பது சந்­தே­கமே. விவ­சா­யி­களின் தற்­கொ­லை­களை விளை­யாட்­டாக எடுத்­துக்­கொள்ளும் தமி­ழக அமைச்­சர்கள் இது­

பற்றி பேசப்­போ­வ­தில்லை.

அது­மட்­டு­மன்றி, பொதுச்­செ­ய­லாளர் மற்றும் முத­ல­மைச்சர் பத­வி­க­ளுக்­காக பெரும் போராட்டம் நடத்­திக்­கொண்­டி­ருக்கும் அ.தி.மு.க. வினர் விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­களைப் பற்­றியா பேசப்­போ­கி­றார்கள்? அதற்கு அவர்­க­ளுக்கு நேரம் இருக்­கி­றதா? என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகும்.

தமி­ழக அரசு போகட்டும்! மத்­திய அர­சா­வது இது­பற்றி சிந்­திக்­கி­றதா? இல்லை! மத்­திய அரசின் செயற்­பா­டு­களும் கூட தமி­ழ­கத்­துக்கு சாத­க­மா­ன­தாக இல்லை. இந்த நிலையில் விவ­சா­யிகள் விரக்­தியின் விளிம்பில் இருந்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

பொங்­கலின் போது ஜல்­லிக்­கட்டை நடத்த வேண்­டு­மென ஒட்­டு­மொத்த தமி­ழக மக்­களும் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­வந்த நிலையில், அதனை நடத்­து­வ­தற்­கு­ரிய அவ­சர சட்­ட­மொன்றை கொண்­டு­வர வேண்­டு­மென்று தமி­ழகத் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வந்­தனர்.

பொங்கல் பண்­டி­கை­யை­யொட்டி நடத்­தப்­படும் ஜல்­லி­க்கட்டு விளை­யாட்டு தொடர்­பாக உட­ன­டி­யாக எதுவும் செய்ய முடி­யா­தென உச்ச நீதி­மன்­றமும் அறி­வித்­து­விட்­டது. சில தினங்­க­ளுக்கு முன்னர் முத­ல­மைச்சர் ஓ.பன்­னீர்­செல்வம் தடை­களை மீறி ஜல்­லிக்­கட்டை நடத்­தப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

வேறு சில அமைப்­பு­க­ளும்­கூட இது­பற்றி அறி­வித்­தி­ருந்­த­துடன் அலங்கா நல்லூர், மதுரை, காங்­கேயம் போன்ற பகு­தி­களில் அதற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டு வந்­தன. அது தொடர்பில் ஒட்­டு­மொத்த தமி­ழக மக்­க­ளி­டை­யேயும் ஒரு பெரும் எதிர்ப்பு இருந்து வந்­தது.

இந்த நிலையில், 'தடை­யை ­மீறி தமி­ழ­கத்தில் ஜல்­லிக்­கட்டு நடத்­தப்­பட்டால், ஆட்­சியைக் கலைக்க முடியும்' என்று ஆளும் பா.ஜ.க. தலை­வர்­களில் ஒரு­வரும், பா.ஜ.க. ராஜ்­ய­சபா எம்.பி.யுமான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். தமி­ழ­கத்தில் ஆட்­சி­யி­லுள்ள அ.தி.மு.க. அரசை கலைப்­ப­தற்கு விடுக்­கப்­பட்ட ஒரு எச்­ச­ரிக்­கை­யா­கவே இதனை தமி­ழகத் தலை­வர்கள் நோக்­கு­கின்­றனர்.

'ஜல்­லிக்­கட்டை நடத்­தக்­கூ­டாது' என்ற நீதி­மன்ற உத்­த­ரவை மீறி அதனை நடத்­தினால் தமி­ழக அரசு நீதி­மன்­றத்தின் கண்­ட­னத்­துக்கு உள்­ளா­குமே தவிர, ஆட்­சியை கலைக்க முடி­யாது. அவ்­வாறு ஆட்­சியைக் கலைப்­ப­தென்றால், முதலில் காவிரி ஆற்றில் நீரைத் திறந்­து­விட வேண்­டு­மென்று அம்­மா­நில அர­சுக்கு உச்­ச­நீ­தி­மன்றம் பிறப்­பித்த உத்­த­ரவை நிரா­க­ரித்த கர்­நா­டகா அர­சையே கலைக்க வேண்டும் என்று தமி­ழக வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எவ்­வா­றா­யினும், தமி­ழக அரசை தமது பூரண கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள  மத்­திய பா.ஜ.க. அரசு, தற்­போது மாநில அரசைக் கலைப்­ப­தற்கு 'ஜல்­லிக்­கட்டு' பிரச்­சி­னையைக் கையில் எடுத்­துக்­கொண்­டுள்­ள­தா­கவே தமி­ழக அர­சியல் தலை­வர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். 

சுப்­பி­ர­ம­ணியன் சுவா­மியின் இந்த அச்­சு­றுத்தல் தமி­ழக அர­சி­யல்­வா­திகள் பல­ரையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது. திரா­விடர் கழகத் தலைவர் கி.வீர­மணி உள்­ளிட்ட பலர் இதற்கு தமது கடும் கண்­ட­னத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, மறைந்த முதல்வர் ஜெய­ல­லி­தாவின் சொத்­துக்கள் அனைத்­தையும் அர­சு­டை­மை­யாக்க வேண்டும் என உத்­த­ர­வி­டு­மாறு உயர்­நீ­தி­மன்­றத்தின் மதுரைக் கிளையில் பொது­நல வழக்கு மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மதுரை பொது­நல வழக்­குகள் மைய நிர்­வாக அறங்­கா­வ­ல­ரான ரமேஷ் என்­ப­வரே இதனை தாக்கல் செய்­தி­ருந்தார்.

இந்த வழக்கு தொடர்­பான மனுவை உயர் நீதி­மன்ற மதுரை கிளை பெஞ்ச் தள்­ளு­படி செய்­து­விட்­டது. தனி­நபர் சொத்­துக்கள் தொடர்­பாக பொது­நல மனு தாக்கல் செய்ய முடி­யாது என்று நீதி­ப­தி­களின் தீர்ப்பில் தெரி­வித்­துள்­ளனர்.

ஜெய­ல­லிதா பிர­பல சினிமா நடி­கை­யாக இருந்த போது அத்­து­றையில் பல­கோடி ரூபா சம்­பா­தித்தார். பின்னர் அர­சி­ய­லிலும் ஈடு­பட்டார். 1989 இல் அ.தி.மு.க. வின் பொதுச்­செ­ய­லா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்­ட­துடன் எம்.எல்.ஏ.வாகவும் எதிர்­கட்சித் தலை­வ­ரா­கவும் இருந்தார்.

தேர்­தல்­களில் வெற்றி பெற்று 4 முறை தமி­ழ­கத்தின் முத­ல­மைச்­ச­ரா­கவும் பதவி வகித்தார். கடந்த வருடம் (2016) நடை­பெற்ற சட்­டப்­பே­ரவைத் தேர்­தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகு­தியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார்.

அப்­போது, அவ­ரது வேட்பு மனுவில் தனது சொத்­துக்­க­ளாக, வங்­கியில் 10.63 கோடி வைப்­பி­லுள்­ள­துடன், பத்­திர முத­லீடு 27.44 கோடி எனவும் நகை­களின் பெறு­மதி 41.63 கோடி என்றும் தனது நிலத்தின் பெறு­மதி 72 கோடி ரூபா என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். அத்­துடன் தமது வாக­னங்­களின் பெறு­ம­தி­யையும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பின்னர் அவர் சுக­யீ­ன­முற்று சென்னை அப்­பல்­லோவில் அனு­ம­திக்­கப்­பட்டு டிசம்பர் 5 ஆம் திகதி கால­மானார். ஜெய­ல­லி­தாவின் பெயரில் தமி­ழகம் மற்றும் பிற மாநி­லங்­களில் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் (அசையும்/அசையா சொத்­துக்கள்) உள்­ளன. அவ­ருக்கு வாரிசு யாரும் இல்லை. தவிர, தனது வாரிசு யார் என்­ப­தையும் அவர் குறிப்­பி­ட­வில்லை.

'மக்­களால் நான், மக்­க­ளுக்­கா­கவே நான்' என்று அடிக்­கடி குறிப்பிடுவார். எனவே, அவரது சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வறிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கமுடியும். எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையாளங்கண்டு, அதன் விபரங்களை அறிக்கையாக வெளியிடப்படவேண்டும் என்று ரமேஷின் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பொது மக்கள் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவையே உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் பெஞ்ச் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்துக்கும் என்ன நடக்கும்? யார் அவற்றுக்கு வாரிசு? தற்போதைய அதன் நிலைமை என்ன? என்ற பல்வேறு கேள்விகள் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இதற்குரிய விடை எப்போது கிடைக்குமென்று அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கின்றனர். விடை கிடைக்குமா? அல்லது விடை கிடைக்காமலே மறைந்து போகுமா? என்பதற்கு காலந்தான் பதில் சொல்லவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.