Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர்.

Featured Replies

 

 

 

மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர்.

 

Tamil_News_large_169103120170116004645_318_219.jpg

முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியில், பதவி களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், இதில் உடன்பாடு இல்லை.

இருப்பினும், தங்களது பதவிகளை தக்க வைப் பதற்காகவும், பலமான எதிர்ப்புகள் உருவாகா மல் இருப்பதற்காகவும், பலர் அமைதி காத்து வருகின்றனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியதில் இருந்து ஜெயலலிதா பாணியில், உடை அலங் காரம், முடி அலங்காரம், பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றை, ஜெ., போலவே சசிகலா மாற்றி யமைத்து வலம் வருகிறார்.இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் பலரும், சசிகலா மீது

கடும் கோபத்தில் உள்ளனர். தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் சசிகலா எதிர்ப்பு பேனர்களை அவர்கள் வைத்து வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர் கள் கிழிக்கப்பட்டு வருவது டன், அவற்றின் மீது மாட்டு சாணமும், வீசப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, ஜெயலலிதா அண்ணன் மகன் தீபா வீட்டு முன் திரண்டு, அவருக்கு, அ.தி.மு.க.,வினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் சற்றும் அசராத சசிகலா, அடுத்த கட்டமாக, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புனைப்பெயர்களை தனக்கும் சூட்டி, வலரும் வரத் துவங்கிஉள்ளார்.
 

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவ தாவது:


அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுடனும், எம்.ஜி.ஆர்., எளிமையாக பழகியவர். அதனால் தான், அவருக்கு, 'புரட்சித் தலைவர்' என்ற புனைப் பெயரை, அனைவரும் சூட்டினர்.அதே பாணி யில், மக்களுக்காக, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

அதனால், அவருக்கு,'புரட்சித் தலைவி' என்ற புனை பெயரை, கட்சியினர் சூட்டினர். சொத்துக் குவிப்பு வழக்கில் பதவி விலகியதால், 'மக்கள் முதல்வர்' என்றும் அவர் அழைக்கப்பட்டார்.

தற்போது சசிகலா, இந்த இரண்டு தலைவர்களின்

 

புனைப்பெயர்களை தனக்கும் சூட்டிக் கொண்டுள்ளார். அவரை, 'மக்கள் தலைவி சின்னம்மா' என்று அழைக்க வேண்டும் என, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி பேனர் மற்றும் போஸ்டர் விளம்பரங்களில், இதே புனைப் பெயரை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., 'டிவி' மற்றும் நாளிதழிலும், இதே போன்ற புனைப்பெயரில் சசிகலாவை குறிப்பிட்டு வருகின்றனர். இது, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உண்மை விசுவாசிகள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் செல்வாக்கை நிரூபித்துவிட்டு, இந்த புனைப்பெயரை சசிகலா சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை, சமூக வலைதளங் களில் பலரும் பதிவிட துவங்கியுள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691031

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.