Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல்

Featured Replies

ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல்
 
 
 

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், வருவாய் துறையினர் மூலம், ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1691883_318_219.jpg


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான இன்று, அவர் தன் முடிவை அறிவிக்க உள்ளார். தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, சசிகலா தரப்பில், பல்வேறு வளைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதில், தீபாவுக்கு ஆதரவு அதிகம் உள்ள மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள், போலீஸ் வழியாக மிரட்டல் கொடுப்பது துவங்கி உள்ளது. தீபாவுக்கு ஆதரவாக வைக்கப்படும் பேனர்களை, போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் இணைந்து, அகற்றி வருகின்றனர்.
 

தீபாவை முன் நிறுத்தி வருகிறோம்.



இதுகுறித்து, அகில இந்திய அம்மா ஜெ.தீபா பேரவையின் தர்மபுரி மாவட்ட, நல்லம்பள்ளி ஒன்றிய இணை ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.சேகர் கூறியதாவது: ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு மாறாகவும், தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், சிலர் சசிகலாவை, அ.தி.மு.க., பொதுச்செயலராக்கி உள்ளனர். இதற்கு, அ.தி.மு.க., உண்மை விசுவாசிகள் மத்தியில் ஆதரவு இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக, அவரது அண்ணன் மகள் தீபாவை முன் நிறுத்தி வருகிறோம்.

நாளுக்கு நாள் தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதை கண்டு, பொறுத்துக் கொள்ள முடியாத சசி கும்பல், தர்மபுரி மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் தீபா பேரவை நிர்வாகிகள் வைத்து வரும் பேனர்களை, வருவாய்த் துறையினர் மூலம் மிரட்டி அகற்றி வருகின்றனர்.
எங்களை மிரட்டுவதால், அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று போகாது என்பது போல்,தமிழக மக்கள் மத்தியில் இருந்தும்,
அ.தி.மு.க.,வில் இருந்தும் தீபாவை அகற்ற முடியாது என்பதை, சசி கும்பல் விரைவில் தெரிந்து கொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.

தீபா பேரவையில் 'மாஜி' எம்.எல்.ஏ.?



தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், தீபாவுக்கு ஆதரவாக களம் இறங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. தமிழகம் முழுவதும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அ.தி.மு.க., சார்பில், இன்று முதல் கொண்டாடப்படுகிறது.
மானாமதுரையில், இன்று மாலை, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அதற்கான, 'நோட்டீஸ்'களில் பொதுச் செயலர் சசியின் படம் இல்லை. இதனால், அவர் தீபா பேரவைக்கு தாவ இருப்பதாக தகவல் பரவியுள்ளது. அவர் ஒன்றிய செயலராகவும் உள்ளார். குணசேகரனிடம் கேட்ட போது, ''நான் தீபா பேரவைக்கு போவது குறித்து, இன்று தெரியும். மேலிட வழிகாட்டு தல்படி தான், 'நோட்டீஸ்' அச்சடிக்கப்பட்டது,'' என்றார்.
 

ஆதரவாளர்கள்அதிர்ச்சி



நாமக்கல் மாவட்டத்தில், ஆறு தொகுதிகளில், குமாரபாளையம் தொகுதி தவிர, மற்ற தொகுதிகளில், தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பிளக்ஸ் பேனர்கள் வைத்தனர்; போஸ்டர்கள் ஒட்டினர்.

 

குமாரபாளையம் தொகுதி, அமைச்சர் தங்கமணியின் சொந்த தொகுதி என்பதால், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அமைதி காத்து வந்தனர். கடந்த, 12ல், ஆவத்திபாளையத்தில், முதன் முறையாக, தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேனர் வைத்தனர். தொடர்ந்து, தொகுதி முழுவதும், தீபாவுக்கு
ஆதரவு தெரிவித்து, பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை பள்ளிபாளையத்தில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, பொதுக் கூட்டம் நடக்கிறது. இதற்காக, பள்ளிபாளை யம் முழுவதும், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
 

பெண்கள் சபதம்


தொகுதி முழுவதும், பல இடங்களில் சசிகலாவுக்கு எதிர்ப்பும், தீபாவுக்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தீபாவுக்கு, ஆதரவு அதிகரித்து வருவதால், அமைச்சர் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.'உள்ளாட்சி தேர்தலில், சசிகலாவுக்கு சரியான பாடம் புகட்டுவோம்' என, திருப்பூரில் நடந்த, தீபா பேரவை கூட்டத்தில், பெண்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
திருப்பூரில், அ.தி.மு.க., மகளிர் அணியினர், தீபா பேரவை துவக்குவது குறித்து, நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில், 'கட்சியை வழிநடத்தும் தகுதி, சசிகலாவுக்கு கிடையாது. ஜெ., இருந்த இடத்தில், சசிகலா இருப்பதை,
தமிழக பெண்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691883

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.