Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு!

Featured Replies

அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு!

சசிகலா

மிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.வின் தோழி சசிகலா.

சசிகலா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றது, கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டாலும், தங்களால் ஜெயலலிதா இருந்த இடத்தில் வைத்து, சசிகலாவைப் பார்க்க முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தினமும் நூற்றுக்கணக்கானோர் கூடி, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினமும் தனது வீட்டின் முன் குவியும் தொண்டர்களிடையே உரையாற்றும் தீபா, கட்சியினர் எதிர்பார்க்கும் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளான இன்று தனது முடிவை அறிவிக்க இருப்பதாகவும், தனது அரசியல் பிரவேசம் பற்றி தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். சசிகலா தரப்பினர், தீபா வீட்டிற்கு வரும் தொண்டர்கள், கட்சியினரை உளவுத்துறை போலீசார் ரகசியமாக அறிந்து போயஸ் கார்டனுக்கு தகவல் தெரிவித்து வந்தனர். 

தீபா

 

இதுஒருபுறம் இருக்க, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.பி. முனுசாமி, சசிகலா உறவினர்களுக்கு எதிராக முதல்முறையாக கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரன், எம்.ஜி.ஆர் இருந்தபோதே, ஜெயலலிதாவுக்கு, தங்கள் குடும்பம் பாதுகாப்பு அளித்ததாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திவாகரனின் பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ள முனுசாமி, அ.தி.மு.க-வில் அவர் எப்போது இருந்தார்? என்பதை உணர்ந்து, இதுபோன்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்ப்பதுடன், பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கே.பி. முனுசாமியின் கண்டனத்திற்கு, அமைச்சர்கள் ஒ.எஸ். மணியன், எஸ். காமராஜ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேசியிருப்பதுடன், முனுசாமி விலைபோய் விட்டதாகவும், கட்சியை உடைக்கப்பார்க்கிறார் என்பது போலவும் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். இதுவரை, கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது, மூத்த தலைவர்கள் மத்தியிலும் சசிகலா எதிர்ப்பு நிலை உருவாகி இருப்பதால், சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை இன்னமும் அடங்குவதற்குள்.. 75 நாட்கள் ஜெ.வுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? அவர் எப்போது மரணம் அடைந்தார்? என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவிய வண்ணம் உள்ள நிலையில், கட்சிக்குள்ளும் எதிர்ப்பு உருவாகி வருவதால், சசிகலா சற்றே அதிர்ச்சியில் உள்ளார்.

தீபா

இந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்த நாளான இன்று முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நலப்பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தீபா தெரிவித்து இருப்பதுடன், செய்தியாளர்களையும் இன்று சந்திக்கிறார். அ.தி.மு.க தொண்டர்களின் எதிர்பார்ப்பு போலவே தனது பொதுவாழ்வு அமையும். என்றும் அவர் கூறியிருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தியது, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தீபா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களை திறந்து வைக்க இருப்பதாகவும், அதன் பின்னர் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, தனது எதிர்காலத் திட்டத்தை அறிவிக்க இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார், இதனால், ஊடகத்துறையினரும், செய்தியாளர்களும் தீபா வீட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஜெயலலிதா இடத்தை சசிகலா நிரப்புவார் என அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். எனினும், ஒருபுறம் அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எதிர்ப்பை வெளிப்படுத்துவது, ஜெ. அண்ணன் மகள் தீபாவின் அரசியல் பிரவேசம் என அடுத்தடுத்து தனக்கு எதிரான நிலைப்பாடு முற்றி வருவதால், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவின் எதிர்காலத் திட்டத்தைப் பொறுத்தே கார்டனின் அடுத்த மூவ் இருக்கும் என்று சசிகலா தரப்புக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/coverstory/77940-sasikala-family-shocked-over-opposition-for-her-leadership.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.