Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா

Featured Replies

ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா

Deepa press meet

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான இன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. இளைஞர்கள் மற்றும் மக்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன்' என்று பேசியுள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/77951-i-will-decide-about-entering-politics-on-jayas-birthday-says-deepa.art

  • தொடங்கியவர்

Tamil_News_large_169236820170117121141_318_219.jpgஅரசியல் பிரவேசம் எப்போது?: தீபா பேட்டி

 

 

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெ., வின் அண்ணன் மகள் தீபா நிருபர்களிடம் கூறினார்.

 

அரசியல் பிரவேசம்:

இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது: ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்தவர். ஜெ.,வை இழந்ததால், தமிழக மக்கள் தவிக்கின்றனர். தெய்வமாக இருந்து ஜெயலலிதா மக்களை வழிநடத்த வேண்டும். 1971ல் அதிமுகவை உருவாக்கி மக்களாட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவரது மறைவுக்கு அந்த பணியை துவங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற பலனின்றி மறைந்தார் என்பது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அதிர்ச்சியில் மக்கள் மீள்வதற்குள் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

 

அழைத்ததற்கு நன்றி :

நான் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள விரும்புகின்றனர். நான் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த பெண். இதழியல் படித்து பத்திரிகையாளராக பணியாற்றினேன். எனக்கு குடும்பம் என சில பணிகள் உள்ளது. இருப்பினும், என்மீது நம்பிக்கை வைத்து அழைத்ததற்கு நன்றி. என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இனி வரும் காலங்களில் தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் பணியாற்றுவேன். தமிழகமும், தமிழும் எனது இரு கண்களாக இருக்கும். எனது வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்து ஜெயலலிதாவின் நல்லாசியோடு, அவர்கள் பாதசுவடு வழிநடந்து, மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்.

 

ஜெ., வின் கனவு :

அதிமுக என்ற ஆலமரத்தின் பசுமை காக்கும் இலைகளாக அதன் உண்மை தொண்டர்கள் உள்ளனர். இன்று முதல் புதிய பயணத்தை துவங்க உள்ளேன். எம்ஜிஆரின் நுாற்றாண்டு பிறந்தநாளின் இன்று வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை துவங்க உள்ளேன். மக்களின் புன்னகையால், வாழ்ந்து வழிகாட்டிய எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய வழியில்மக்களையும், தமிழகத்தையும் வழிநடத்திட உங்களில் ஒருவராக. உங்களில் ஒருவராக உங்களின் அன்பு சகோதரியாக கேட்டு கொள்கிறேன்.
மக்கள் நலத்திட்டங்கள், மக்களுக்கான பணிகள் தொடர வேண்டும். ஜெயலலிதாவின் கனவை ஒன்று சேர்ந்து இன்று முதல் தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக்கும் நோக்கத்துடன் நற்பணிகளை மேற்கொள்வேன். எம்.ஜி. ஆர் விட்டு சென்ற நல்லாட்சியை அவர்களின் வாரிசான ஜெ.,வின் நல்லாட்சியை தொடர செய்வதே, அதிமுக தொண்டர்களின் நோக்கமாகும்.

இந்த நேரத்தில் எனது உரிமைகளையும் கடமைகளையும் நிலைநாட்டிட பேராதரவு அளித்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. ஜெ., கனவை நிறைவேற்றும் வகையில் நம் அனைவரின் களப்பணிகள் இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் . ஜெ., பிறந்த நாளன்று, அரசியலில் ஈடுபடுவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை வெளியிட உள்ளேன். மக்களின் கருத்தையும், தொண்டர்களின் கருத்தையும் சேகரித்து விட்டு உரிய காலகட்டத்தில் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தவிரவேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக ஏற்க மாட்டேன். ஜெ., சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மக்களிடம் கேட்க வேண்டும். இதற்காக நான் வரவில்லை. இதுவரை யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1692368

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவை மிஞ்சிய தீபா!

deepa_2a_16438.jpg

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஜெயலலிதாவை மிஞ்சும் வகையில் இருந்தது. 

ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு சசிகலாவை தலைமை ஏற்க வருமாறு அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதையடுத்து டிசம்பர் 28ம் தேதி பொதுக்குழுவில் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அவர் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். அடுத்து சசிகலாவை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் தலைமையை ஏற்காத அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தக் காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லம் முன்பும், அப்போலோ மருத்துவமனை முன்பும் காத்திருந்த தீபாவை கண்டுக் கொள்ளாத அ.தி.மு.க.வினர் இப்போது ஆதரவு தெரிவிப்பதாக சொல்வதுதான் அரசியல்!

ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது கூட்டத்தோடு கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தீபாவிற்கு கொடிப்பிடிக்கத் தொடங்கி உள்ளனர் அதிருப்தி அ.தி.மு.க.வினர். தீபா, அரசியலுக்கு வருவதாக இன்று அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் தொடர்பான அடுத்தக்கட்ட அறிவிப்பை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளரை சந்தித்த தீபா, ஜெயலலிதாவைப் போலவே ஆங்கிலத்தில் சரளமாக பேசினார். நிருபர்களின் கேள்விகளுக்கு அமைதியாக பதிலளித்தார். ஆனால் அந்த பதில்களில் உருப்படியான, தெளிவான தகவல்கள் எதுவுமே இல்லை. பேட்டியின் போது தீபாவின் மேனரிஷம் முழுவதும் ஜெயலலிதாவைப் போல தெரிந்தது. ஜெயலலிதா பேட்டி அளிக்கும் போது அவருக்கு அருகில் யாரும் நிற்க முடியாது. ஆனால் தீபா அருகிலேயே நிருபர்கள் நிற்க முடிந்தது. இதற்கு முன்பு தொண்டர்களை தீபா சந்தித்த போது டென்ஷனாகி வீட்டுற்குள்ளே சென்று விட்டார். ஆனால் இந்த முறை அவரிடம் அந்த டென்ஷன் இல்லை. ஜெயலலிதாவின் ஸ்டைலை சசிகலாவும், தீபாவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். தீபாவைப் பார்க்கும் போது இளமை கால ஜெயலலிதாவை நினைவுப்படுத்துவதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

deepa-_admk_16091.jpg

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரசியலுக்குள் கால்பதிப்பதாக தெரிவித்த தீபாவுக்கு அரசியல் பாடத்தை கற்றுக் கொடுக்க தனி டீமே களமிறங்கி இருக்கிறது. அந்த டீம், தீபாவிடம் எப்படி தொண்டர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை அப்படியே பின்பற்றி வருகிறாராம் தீபா. ஜெயலலிதாவின் வழியை பின்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் வழி என்பது சாதாரணமானது இல்லை. அதை பின்பற்ற தனி துணிச்சல் தேவை. எம்.ஜி.ஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட ராணுவ வண்டியிலிருந்து ஜெயலலிதா தள்ளி விடப்பட்ட பிறகு அ.தி.மு.க.வின் தலைமை பதவிக்கு வர அவரின் உழைப்பு சாதாரணமானது அல்ல. அவரைப் போல இருக்கும் தீபாவும், ஜெயலலிதா ஸ்டைலில் மட்டுமல்ல.... மற்ற செயல்களிலும் அவரைப்போல தனித்துவமாக செயல்பட்டால் மட்டுமே அரசியலில் முத்திரைப் பதிக்க முடியும்.

இதுகுறித்து தீபாவின் ஆதரவாளர் இளையராஜா கூறுகையில், "அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் செயல்பட நாங்கள் முடிவு எடுத்து விட்டோம். அரசியலுக்கு வருவதாக மட்டுமே தீபா அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்றாலும் இன்றைய சூழ்நிலையில் எம்.ஜி.ஆர்., அம்மா வழிநடத்திய அ.தி.மு.க.வையும், தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. இதனால் தீபா, உடனடியாக மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்போது தீபாவுக்கு அதிகளவில் ஆதரவு கிடைக்கும். காலதாமதமில்லாமல் எம்.ஜி.ஆர்., அம்மாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தீபாவுக்கு உள்ளது. தீபாவை சந்திக்க என்னுடைய தலைமையில் திருவேற்காடு பகுதியிலிருந்து 30 வேன்களில் இன்று தி.நகர் வந்துள்ளோம்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/77983-deepa-follows-the-mannerisms-of-jayalalithaa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.