Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்கு நான் பயப்பட மாட்டேன்: தீபா

Featured Replies

சசிகலாவுக்கு நான் பயப்பட மாட்டேன்: தீபா

Tamil_News_large_1692622_318_219.jpg

 

''சசிகலாவை பார்த்து, நான் பயப்படவில்லை,'' என, தீபா தெரிவித்தார். சென்னையில், நேற்று தீபா அளித்த பேட்டி:



* ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா?

மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, என் சகோதரர் தீபக், 25 நாட்கள் உடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகமெல்லாம் இல்லை.

* புதுக் கட்சி துவங்க உள்ளீர்களா?

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, என் அரசியல் பயணத்தை வெளியிட ஆசைப்படுகிறேன்.

* போலீஸ் பாதுகாப்பு கேட்டீர்களா?

கேட்கவில்லை; அதற்கான அவசியம் ஏற்படவில்லை. எனக்கு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்; தொண்டர்கள் அரணாக உள்ளனர்.

* ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, சசிகலா காலி செய்ய வேண்டும் என வலியுறுத்திவீர்களா?

இதற்காக, நான் அரசியலுக்கு வரவில்லை.

* போயஸ் கார்டன் வீடு அரசுடமை ஆக்கப்படுமா?

மக்கள் விருப்பத்தை கேட்க வேண்டும்.

* முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக சொன்னீர்கள்; அந்த அறிவிப்பு என்ன?

அரசியலுக்கு நான் வருவேனா, வரமாட்டேனா, ஓடி ஒளிந்து விடுவேனா என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, நான் அரசியலில் ஈடுபடுவேன்; மக்களுக்கு இனிமேல் பணியாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன், என் அரசியல் விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறேன். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். ஜனநாயகம் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. என்னிடம், எந்த ஒளிவு மறைவும் கிடையாது.

* அ.தி.மு.க.,வில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என சொல்லப்படுகிறதே?

யார் வேண்டுமானாலும், எனக்கு ஆதரவு அளிக்கலாம்.

* பா.ஜ.,வில் சேர இருப்பதாக கூறப்படுகிறதே?

நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது; அப்படியொரு விஷயம் பற்றி நான் பேசவில்லை.

* 'ஜெயலலிதாவை, 33 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தோம்; அவரது மூளையாக நாங்கள் செயல்பட்டோம்' என, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் பேசியது பற்றி உங்கள் கருத்து?

அந்த கருத்து தவறானது. ஜெயலலிதா ஒப்பற்ற ஆற்றல், திறன் கொண்டவர். அவர் சுயமாக சிந்தித்து, முடிவு எடுக்கும் குணம் உடையவர். அவரது கருத்தை ஆணித்தரமாக, எங்களிடம் பதிவு செய்வார். அவர் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, அதில் அவருடைய அதிகாரம் தொனிக்கும்.

* இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பீர்களா?

அடுத்த மாதம், 24ல் அறிவிப்பேன்

* சுற்றுப்பயணத்தை எங்கிருந்து துவக்க திட்டமிட்டுள்ளீர்கள்?

* நிச்சயமாக, தமிழகத்தில் இருந்து தான் துவக்குவேன். ஒரு மாதம் வரை பயணம் இருக்கும். தொண்டர்கள், பொது மக்களின் கருத்துக்களை கேட்பேன். அவர்களின் எண்ண ஓட்டத்தின் அடிப்படையில், என் முடிவு அமையும்.

* எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல், அரசியலில் வெற்றி பெற முடியுமா?

அரசியல் என்பது பொது வாழ்க்கையின் ஒரு அங்கம். மக்களுக்கு தொண்டாற்றுவது; நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது. இதற்கு, எந்த அனுபவமும் தேவையில்லை. அரசியலுக்கு படித்தவர்கள், இளைய தலைமுறையினர் வர வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். அதற்கான தகுதி என்னிடம் உள்ளது என, மக்களும், தொண்டர்களும் கருதுகின்றனர். அனுபவ சான்று எல்லாம் தேவையில்லை. உண்மை, திறமை, நேர்மை, நம்பிக்கை, நாணயம், உறுதி இருந்தால் போதும்.

* முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

ஏற்கனவே இருமுறை முதல்வராக இருந்துள்ளார்; சிறப்பாக பணியாற்றுகிறார்.

* ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு, நீங்கள் உரிமை கோருவீர்களா?

அத்தையின் பொருட்கள் மீது, எந்த விருப்பமும் கிடையாது. அவரது சொத்துக்களை கேட்கப் போவதில்லை.

* ஜெயலலிதா பயன்படுத்திய நுாலகத்தில் உள்ள, புத்தகங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துவீர்களா?

நான் அடிப்படையில், ஒரு பத்திரிகையாளர். எனவே, எனக்கு ஜெயலலிதா பயன்படுத்திய பேனா மட்டும் வேண்டும். அதை வைத்து, நான் கையெழுத்து போட விரும்பவில்லை. அவரது நினைவு பொக்கிஷமாக பாதுகாக்க விரும்புகிறேன்.

* ஜெயலலிதாவை போலவே நடை, உடை பாவனையை பின்பற்றுகிறீர்களோ?

என்னுடைய தோற்றம், அப்படி எண்ண வைக்கலாம். என்னுடைய உருவமும், குரலும் அவரை போலவே இருக்கிறது. அதற்காக, அவரை போல உடைகள் உடுத்தவில்லை. நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக, அவர் விட்டு சென்ற பல நல்ல திட்டங்களை தொடர்வதற்கு ஆசைப்படுகிறேன்.

* சசிகலா, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டால், நீங்களும் போட்டியிடுவீர்களா?

அரசியலுக்கு வந்து விட்டால், தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். ஆர்.கே.நகர் மட்டுமல்ல, எந்த தொகுதியானாலும் போட்டியிடுவேன்.

* நீங்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவியிருப்பதாக தகவல் வருகிறதே?

என்னை பற்றியும், என் பாரம்பரியமான குடும்பத்தை பற்றியும் அனைவருக்கும் தெரியும். நான் மதச்சார்பற்றவளாக வாழ ஆசைப்படுகிறேன். மனிதர்களுக்கு, மதம் பிடித்து விடக் கூடாது. பத்திரிகையாளர் என்ற முறையில், அனைத்து மதத்தை சேர்ந்த மக்களையும், உலகளவில் சந்தித்து பேசியுள்ளேன். தயவு செய்து, மதம் என்ற பெயரில், மனித குலத்தை பிரித்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

* 'குடும்ப ஆட்சி தான் இனி நடக்கும்' என, சசிகலா கணவர் நடராஜன் பேசியுள்ளாரே?

அவரிடம் தான் கேட்க வேண்டும்.

* சசிகலா தரப்பிலிருந்து, உங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதா?

எந்த மிரட்டலும் கிடையாது.

* சசிகலாவை கண்டு நீங்கள் பயப்படுகிறீர்களா?

அவருக்கு நான் பயப்பட மாட்டேன்.

* சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என, அமைச்சர்கள் பேசி வருவது பற்றி?

அமைச்சர்கள் பேசியது, அவர்களின் தனிப்பட்ட கருத்து. முதல்வர் யார் என்பதை, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

* தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது என, ரஜினி தெரிவித்துள்ளாரே?

கருத்து சொல்ல விரும்பவில்லை.

* சட்டசபை, பார்லிமென்டில், உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா?

பொறுத்திருந்து பாருங்கள்.

* முதல்வராக வேண்டும் என, கனவு காண்கிறீர்களா?

அந்த நோக்கத்தில், அரசியலுக்கு வரவில்லை. முதல்வர் பதவி ஏற்க, முதலில் மக்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தீபா கூறினார்.
- நமது நிருபர் -
தீபா முடிவில் திடீர் மாற்றம் ஏன்?
சமீப காலமாக, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சிலர், அவரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அவர்கள், 'தனி கட்சி வேண்டாம். சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு, சசிகலாவுக்கு பாதகமாக அமைந்தால், அவரும், அவரது குடும்பத்தினரும் வெளியேறும் நிலை வரும். அப்போது, தலைமை பொறுப்பு, உங்களை தேடி வரும்' என, ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன் காரணமாக, தீபா, தன் முடிவை ஒத்தி வைத்துள்ளார். தீபாவின் நேற்றைய பேச்சு, சசிகலா எதிர்ப்பாளர்களிடம் மகிழ்ச்சியையும், சசிகலா தரப்பினரிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1692622

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.