Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தில் சசிகலா Vs தீபா! தொண்டர்கள் யார் பக்கம்?

Featured Replies

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தில் சசிகலா Vs தீபா! தொண்டர்கள் யார் பக்கம்?

சசிகலா


.தி.மு.க என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் தலைமை குறித்த குழப்பம் நிலவுகிறது. சுமார் 26 ஆண்டுகள் அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்து டிசம்பரின் மறைந்த ஜெயலலிதாவின் மேனரிசத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளராகி இருக்கும் சசிகலாவும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் பின்பற்றத் தொடங்கி இருப்பது வேடிக்கையான விந்தையாக உள்ளது.

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவி‌த்து மரியாதை செலுத்தினார். ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலரையும் சசிகலா வெளியிட்டார். மலரை கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பெற்றுக் கொண்டார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாயை குடும்பநல நிதியுதவியையும் சசிகலா வழங்கினார்.

எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்குச் சென்ற சசிகலா, அங்கு நுழைவு வாயிலில் மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இல்லத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். திருஉருவச் சிலையை திறந்து வைத்தார். அங்கு கருத்தரங்கையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அ.தி.மு.க தலைமைக்கழகத்துக்கு வருகை தந்தது முதல், கட்சி அலுவலகத்தில் மாலை அணிவித்தது வரை, கொடியேற்றியது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளின் போதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போன்றே தொண்டர்களைப் பார்த்து கையசைக்க முயன்று, அதில் சசிகலா வெற்றிபெற முடியவில்லை. கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா எந்த இடத்தில் நின்று கொண்டு தொண்டர்களைப் பார்த்து, இரட்டை விரலைக் காண்பித்து வாழ்த்து தெரிவிப்பாரோ, அதே போன்று சசிகலாவும் இரு விரல்களை உற்சாகமின்றி காண்பித்ததை அறிய முடிந்தது. தொண்டர்களிடத்திலும் பெரிய அளவில் உற்சாகம் மிஸ்ஸிங். ஜெயலலிதாவின் நிழலாக திகழ்ந்த சசிகலா, அவரைப் போன்று பிரதிபலிக்க முயற்சிக்கிறார். 

தீபாஇந்த நிலையில், ஜெ-வின் அண்ணன் மகள் தீபா, நேற்று தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ஜெயலலிதாவைப் போன்று பேட்டியளிக்க முயற்சித்தார். ஆனாலும், "சிங்கம் எப்போதும் சிங்கம் தான். சிறுத்தை அல்லது சிங்கம் வேடமிட்ட கரடி" போன்று தான்சசிகலா மற்றும் தீபாவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

சசிகலாவும், தீபாவும் ஜெயலலிதாவைப் போன்று சிகை அலங்காரம் செய்து கொண்டிருப்பதுடன் உடைகளும் ஜெ-வைப் போன்றே அணிந்திருந்தனர். ஜெயலலிதாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்த மக்கள் செல்வாக்கு எந்த அளவுக்கு இருவருக்கும் உள்ளது என்பதை, அவர்களோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரும் தலைவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால், அதுபோன்ற தலைவர்களைப் போல் நாம் நடிக்க வேண்டும் என்று யாரும் புறப்படவில்லை. தங்களுக்கான தனி அடையாளத்தையே பின்னர் வந்த தலைவர்கள் பின்பற்றினார்கள். ஜெயலலிதாவும் தனக்கான தைரியத்தை அவரிடம் உள்ள இயல்பான குணாதியசத்தின் அடிப்படையிலேயே ஏற்படுத்திக் கொண்டார் எனலாம். ஆனால், அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்றால் ஜெயலலிதாவை இமிடேட் செய்ய வேண்டும் என்று சசிகலாவும், ஜெ.வின் அண்ணன் மகள் என்பதால், சற்றே தோற்றத்தில் அவரைப் போன்று காட்சியளிக்கும் தீபாவும், ஜெயலலிதாவைப் போன்றே செயல்பட வேண்டும் என்றும் முயற்சிப்பது மக்களிடம் ஆதரவை ஏற்படுத்துவதற்கு மாறாக வெறுப்பையே ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி!

சசிகலாவுக்கோ, தீபாவுக்கோ மக்கள் செல்வாக்கும், தொண்டர்களின் ஆதரவும் இருந்தால் யாரும் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், அவர்கள் தங்களுக்கென தனியான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்!

http://www.vikatan.com/news/coverstory/78020-sasikala-deepa-both-imitating-jayalalithaa-but-what-will-be-the-party-cadres-stand.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.