Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்?

Featured Replies

புஸ்வாணமாகப் போகின்றனவா ஜெனிவா அழுத்தங்கள்?

 

ரொபட் அன்­டனி

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை கொண்­டு­வ­ரப்­பட்டு காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­வது அவ­சி­ய­மாகும். இலங்கை அர­சாங்கம், சர்­வ­தேச தரப்பு மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் இதனை புரிந்­து­கொள்­ள­வேண்டும். எனவே இந்த விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் எவ்­வாறு அமையும் என்­பது தெளிவற்­ற­தாக உள்­ளன. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொட­ரா­னது பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தாக அமை­யப்­போ­கின்­றது என்­பது மட்டும் திண்­ண­மாகும்

 

எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் இலங்­கை­யிலும் ஜெனி­வா­விலும் பர­ப­ரப்­பா­கவே அமை­யப்­போ­கின்­றன. ஆனால் உண்­மை­யி­லேயே பர­ப­ரப்­பாக அமை­யப்­போ­கின்­ற­னவா? அல்­லது வெறு­மனே புஸ்­வா­ண­மா­கப்­போ­கின்­ற­னவா என்­பதே தற்­போது மனித உரிமை ஆர்­வ­லர்­களும் இந்த விட­யத்தில் அக்­கறை கொண்­ட­வர்­களும் விவா­திக்கும் விட­ய­மாக மாறி­யுள்­ளது.

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த மூன்று ஐக்­கிய நாடுகள் சபை நிபு­ணர்கள் முன்­வைக்­க­வுள்ள இலங்கை விஜயம் குறித்த அறிக்­கைகள், இலங்கை தனது தரப்பில் முன்­வைக்­க­வுள்ள அறிக்கை மற்றும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் முன்­வைக்­க­வுள்ள அறிக்கை என இம்­முறை 34 ஆவது ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் கூட்டத் தொடர் பர­ப­ரப்­பா­கவே அமை­யப்­போ­கின்­றது. ஆனால் அந்த பர­ப­ரப்­புக்கு முற்­றுப்­புள்­ளியும் இம்­முறை கூட்டத் தொட­ரி­லேயே முன்­வைக்­கப்­பட்­டு­வி­டுமா என்பது அவ­தா­னத்­துக்கு உட்­படும் விட­ய­மாகும்.

ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் பிர­காரம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­டுமா? இல்­லையா என்­பது இது­வரை உறு­தி­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் பிரே­ர­ணையின் ஆணைக்கு உரிய காலம் முடி­வ­டை­ய­போ­கின்­றது.

அந்­த­வ­கையில் பிரே­ர­ணையின் காலம் முடி­வ­டை­யப்­போ­கின்ற நிலையில் அர­சாங்கம் அதனை எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டு­த­்தி­யது? அதன் பரிந்­து­ரைகள் எவ்­வாறு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன என்­பன தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இம்­முறை 34 ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் எழுத்­து­மூல அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளார்.

அது மட்­டு­மின்றி தற்­போ­து­வரை எவ்­வாறு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­தினோம் என்­பது குறித்து இலங்கை ஒரு தொகுப்­பு­ரையை அறிக்கை வடி­வத்தில் வெளி­யி­ட­வுள்­ளது. அது­மட்­டு­மன்றி அண்­மையில் முக்­கிய பரிந்­து­ரை­களை முன்­வைத்த நல்­லி­ணக்க பொறி­முறை தொடர்­பான செய­ல­ணியின் அறிக்கை இலங்­கையின் பக்­கத்தில் பிர­தா­ன­மாக பேசப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் அர­சாங்­கத்­தினால் நிறு­வப்­ப­ட­வுள்ள காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்­தர அலு­வ­லகம் தொடர்­பா­கவும் அர­சாங்கம் ஜெனி­வாவில் பேச­வுள்­ளது. அர­சாங்கம் எந்­த­வ­ளவு தூரம் நல்­லி­ணக்க விட­யத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றது என்­ப­தனை காட்­டவே இந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­லக விட­யத்தை முன்­வைக்­க­வுள்­ளனர்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஜெனி­வாவில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு ஒன்­றரை வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் கூட அர­சாங்கம் இது­வரை பொறி­மு­றையின் வடி­வத்தை தயா­ரிக்­க­வில்லை.

தற்­போ­தைய நிலை­மையில் நல்­லி­ணக்க பொறி­மு­றையை எவ்­வாறு வடி­வ­மைக்­க­வேண்டும் என்­பது குறித்த மக்­களின் ஆலோ­ச­னைகள் மற்றும் கருத்­துக்கள் அடங்­கிய பரிந்­து­ரை­களை நல்­லி­ணக்க செய­லணி முன்­வைத்­துள்­ளது. ஆனால் அத­னையும் அர­சாங்கம் முழு­மை­யாக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. முடி­யு­மான பரிந்­து­ரை­களை மட்­டுமே அமுல்­ப­டுத்­துவோம் என்று அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது.

தற்­போ­தைய நிலை­மையில் ஜெனிவா கூட்டத் தொட­ருக்கு முன்­பாக அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை வடி­வ­மைக்­க­வேண்டும். இந்­நி­லையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் பல்­வேறு முக்­கிய விட­ய­ங்கள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன.

மொத்­த­மாக 20 பரிந்­து­ரை­களை இந்த பிரே­ரணை முன்­வைத்­தி­ருந்­தது. அதா­வது 6, 10, 12, 16 , 18, 20 ஆகிய இலக்­கங்­க­ளைக்­கொண்ட பரிந்­து­ரைகள் மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. அதா­வது இந்த பரிந்­து­ரைகள் என்ன கூறு­கின்­றது என்று பார்க்­கலாம்.

6.பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் உள்­நாட்டு நீதித்­துறை கட்­ட­மைப்­புடன் கூடிய விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும்.

10.அர­சாங்­கப்­ப­டை­யி­னரால் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். இதற்­காக எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கத்­தக்­கன. குறிப்­பாக சிவி­லியன் விவ­கா­ரங்­களில் இரா­ணு­வத்தின் தலை­யீடு முழு­மை­யான அகற்­றிக்­கொள்­ளப்­பட வேண்டும். சிவ­ிலி­யன்­களின் இயல்பு வாழ்க்­கையை உறுதி செய்ய வேண்டும்.

12.பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்பு வர­வேற்­கப்­பட வேண்­டி­யது. சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தில் திருத்­தங்கள் செய்­யப்­பட முடியும்.

16.அர­சியல் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்கக் கூடிய வகையில் அதி­காரப் பகிர்வு திட்­ட­மொன்றை அர­சாங்கம் அமுல்­ப­டுத்த வேண்டும். அவ்­வாறு அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிப்­பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்­தொ­கை­யி­னரும் மனித உரி­மை­களை அனு­ப­விக்க முடியும். 13ஆவது திருத்தச் சட்­டத்தின் பிர­காரம் அனைத்து மாகாண சபை­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

18. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலு­வ­லகம், இலங்­கையின் மனித உரிமை நிலை­மை­களை ஆராய்ந்து மதிப்­பீடு செய்ய வேண்டும். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பரிந்­து­ரைகள் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா என்­பது மதிப்­பீடு செய்­யப்­பட வேண்டும். குறிப்­பாக குற்றச் செயல்­க­ளுக்கு பொறுப்பு கூறுதல் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தல் மற்றும் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இந்த நிலை­மைகள் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 32 அமர்­வு­களின் போது வாய்­மொழி மூல அறிக்­கையை ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் ஆணை­யாளர் சமர்ப்­பிக்க வேண்டும். பரிந்­து­ரைகள் எவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்­பது குறித்து 34 அமர்­வு­களில் முழு அளவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்­மானம் நிறை­வேற்­றப்­படும்.

20. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் விசேட அறிக்­கை­யா­ளர்கள் ஆணை­யா­ளர்கள் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஆலோ­ச­னை­க­ளையும் தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் வழங்­க­வேண்டும்.

அதன்­படி 20 பரிந்­து­ரை­களில் இந்த ஆறு பரிந்­து­ரை­களே முக்­கி­யத்­து­வ­மிக்க தாக காணப்­ப­டு­கின்­றன. அந்­த­வ­கையில் கடந்த ஜூன் மாதம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள்ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த வாய்­மூல அறிக்­கையை வெளியிட்டார்.

அதன்­படி இம்­முறை 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கை­ தொடர்பாக செய்ட் அல் ஹுசைன் எழுத்­து­மூல அறிக்­கையை வெ ளியி­ட­வுள்ளார். ஆனால் பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்ட ஒன்­றரை வரு­டங்கள் கடந்தும் அர­சாங்கம் இது­வரை பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை வடி­வ­மைக்­க­வில்லை.

குறிப்­பாக இலங்கை அர­சாங்­க­மா­னது நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை தயா­ரிப்­ப­தாக அறி­வித்­தி­ருந்­தது. அதா­வது உண்­மையை கண்­ட­றிதல் நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழா­மையை உறு­தி­ப்ப­டுத்தல் ஆகிய நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டையில் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான நல்­லி­ணக்க வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த நான்கு விட­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே மக்­களின் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெறு­மாறு நல்­லி­ணக்க செய­ல­ணி­யிடம் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அந்­த­வ­கையில் மக்­க­ளிடம் கருத்­துக்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்ற நல்­லி­ணக்க செய­லணி தனது பரிந்­து­ரையை முன்­வைத்­துள்­ளது.

அதில் நீதியை நிலை­நாட்­டுதல் என்ற விட­ய­தா­னத்தின் கீழேயே சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்­புடன் கூடிய கலப்பு நீதி­மன்ற பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அர­சாங்கம் இந்த சர்­வ­தேச நீதி­ப­தி­க­ளுடன் கூடிய கலப்பு நீதி­மன்ற பரிந்­து­ரையை நிரா­க­ரித்­துள்­ளது.

உண்­மையில் நல்­லி­ணக்க செய­ல­ணியின் பரிந்­துரை வரும் முன்­னரே ஜனா­தி­பதி சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­கா­ரத்தை நிரா­க­ரித்­து­விட்டார். எனினும் அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட ஜெனிவா பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்­கி­ய­மையின் கார­ண­மாக சர்­வ­தேச நீதி­ப­திகள் குறித்து மீள் பரி­சீ­லனை செய்யும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அர­சாங்கம் தற்­போது கூட அதனை முழு­மை­யாக நிரா­க­ரித்­துள்­ளது.

 இந்­நி­லையில் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை என்ன கூறப்­போ­கின்­றது என்­பது குறித்து சர்­வ­தேசம் ஆர்­வத்­துடன் இருக்­கின்­றது. மிக முக்­கி­ய­மாக நீதி­வ­ழங்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் எவ்­வா­றான பொறி­மு­றையை முன்­வைக்கப் போகின்­றது என்­பதே சர்­வ­தே­சத்தின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது.

இந்த விட­யத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் முன்­வைக்கப் போகும் அறிக்கை ஆர்­வத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாகி­யுள்­ளது. அதா­வது ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் இலங்­கைக்கு மேலும் கால அவ­கா­சத்தை வழங்­கப்­போ­கி­றாரா? அல்­லது இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ர­ணை­கொண்டு வரு­வ­தற்­கான வழியை ஏற்­ப­டுத்தப் போகி­றாரா? என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­யங்­க­ளாகும்.

காரணம் இலங்கை தொடர்பில் இம்­முறை கூட்டத் தொடரில் மற்­று­மொரு பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­ப­டா­து­விடின் அல்­லது 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையின் ஆணை நீடிக்­கப்­ப­டா­விடின் அனைத்து விட­யங்­களும் புஸ்­வா­ண­மா­கி­விடும் அபா­யமே உள்­ளது.

எனவே தமிழர் தரப்பு இந்த விட­யத்தில் இரா­ஜ­தந்­திர நகர்­வு­களை முன்­னெ­டுத்து உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெற்று இலங்கை தொடர்பில் மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்­டு­வர முயற்­சிக்­க­வேண்டும். கடந்த 2012, 2013, 2014, 2015 ஆம் ஆண்­டு­களில் நிறை­வேற்­றப்­பட்ட நான்கு பிரே­ர­ணை­க­ளையும் அமெ­ரிக்­காவே முன்­னின்று கொண்­டு­வந்­தது.

ஆனால் தற்­போது அமெ­ரிக்­காவில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு அந்­நாட்டின் குடி­ய­ரசு கட்­சியின் டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான மற்­று­மொரு பிரே­ர­ணைக்கு அமெ­ரிக்கா தலைமை தாங்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும்.

ஆனால் இங்கு அனைத்து தர­ப்­பி­ன­ரும ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது இலங்கை அர­சா­ங்கம் சர்­வ­தேச தரப்பு மற்றும் ஐக­்கிய நாடுகள் சபை உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் இதனை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் போன்­ற­வற்­றினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட மக்கள் நீதியை எதிர்­பார்த்து நீண்­ட­கா­ல­மாக காத்­தி­ருக்­கின்­றனர். குறிப்­பாக தமது உற­வுகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கூடத் தெரி­யாமல் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

அத்­துடன் யுத்த காலத்தில் கடத்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் தமது உற­வுகள் அல்­லது காணாமல் போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா என்பது கூடத் தெரியாமல் அந்த மக்கள் தவிப்புடனும் திண்டாட்டத்துடனும் வாழ்க்கையை கொண்டுநடத்துகின்றனர். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வாழ்வாதார விடயத்தில் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் அதிகளவான பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வாழ்வாதார ரீதியில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். விதவைப் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் இந்த விடயங்களுக்கு விடை காண்பதும் தீர்வு காண்பதும் அவசியமாகும். எனவே பொறுப்புக்கூறல் பொறிமுறை கொண்டுவரப்பட்டு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிவது அவசியமாகும். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையும் என்பது தெ ளிவற்றதாக உள்ளது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரானது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமையப்போகின்றது என்பது மட்டும் திண்ணமாகும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-21#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.