Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பன்னீருக்கு நெருக்கடி பதவி விலக பன்னீருக்கு மறைமுக நெருக்கடி ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி

Featured Replies

பன்னீருக்கு நெருக்கடி
பதவி விலக பன்னீருக்கு மறைமுக நெருக்கடி
ஜல்லிக்கட்டு போராட்டம் நீடிப்பதன் பகீர் பின்னணி
 
 
 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு மறைமுக நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக, அ.தி.மு.க., வில் ஒரு தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதன் மூலம், அவரை பதவி விலகச் செய்து, சசிகலாவை முதல்வராக்க காய் நகர்த்துவதாக வும், தகவல் வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_1695791_318_219.jpg

தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக, ஜல்லிக் கட்டு போட்டிகள் நடத்த முடியவில்லை. 'இந்த ஆண்டு தடையை நீக்கி விடுவோம்' என, மாநில அரசு உறுதி அளித்தது; மத்திய அமைச்சர்களும் உத்தரவாதம் கொடுத்தனர். ஆனாலும், தடை நீக்கப்படவில்லை.
 

களமிறங்கினர்


பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜல்லிக் கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக, சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் களமிறங்கி னர். தமிழகம் முழுவதும், போராட்டம் பரவியது.

சென்னை, மெரினா கடற்கரையில், லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்தது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும், நேற்று ஜல்லிக்கட்டு

நடைபெறும் என, முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்; அதை, போராட்டத்தில் ஈடு பட்டோர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'நிரந்தர சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே, போராட் டத்தை கைவிடுவோம்' என, அறிவித்துள்ளனர்.

இச் சூழ்நிலையில், மாணவர்களின் போராட் டத்தை பயன்படுத்தி, தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள, சசிகலா குடும்பத்தினர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது.
 

விரும்பவில்லை


இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமனம் செய்யப் பட்டதும், முதல்வராக பதவியேற்க, சசிகலா முடிவு செய்தார். அதை, மத்திய அரசு விரும்பவில்லை. மத்திய அரசு ஆதரவு காரணமாக, முதல்வர் பதவி யில் இருந்து, பன்னீர்செல்வத்தை, சசிகலா தரப்பின ரால் இறக்க முடியவில்லை.

இந்நிலையில், ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக, தமி ழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்தது. போராட் டத்தை முடித்து வைக்க, முதல்வர் பன்னீர்செல்வம், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்; மத்திய அரசும், அவருக்கு உதவியது. இதையடுத்து, இரண்டே நாட் களில், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
 

திரும்பினார்


ஆனால், போராட்டக்காரர்கள், அதை ஏற்க மறுத்து விட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்த போதிலும், போட்டியை நடத்த, ஆங்காங்கே தடை போட்டனர். ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க, அலங்காநல்லுார் சென்ற முதல்வர் பன்னீர் செல்வம், துவக்கி வைக்க முடியாமல் திரும்பினார்.

இதெல்லாமே, பன்னீர்செல்வத்திற்கு கொடுக்கப் படும் மறை முகமான நெருக்கடிகள். ஒரு முதல் வரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து, திருப்பி அனுப்பிய செயலுக்கு, போராட்டம் மட்டும்

 

காரணமல்ல; அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

அதேபோல், அவசர சட்டம் கொண்டு வரும், பன்னீர்செல்வத்தின் முயற்சிக்கு, பிரதமரும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் பெரிதும் துணையாக இருந்தனர். அவர்களின் ஆதரவால் தான், ஒரே நாளில், சட்ட வரைவுக்கு, மத்திய உள்துறை, சட்டத் துறை, சுற்றுச்சூழல் துறைகளின் ஒப்புதல் பெற முடிந்தது.
 

குற்றச்சாட்டு


அதனால், பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டில்லியில் அளித்த பேட்டியில், பிரதமர் மீது குற்றச்சாட்டு சுமத்தினார். இதேபோல், மத்திய அரசு மீது, ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜனும் குற்றம் சாட்டியிருந்தார்.

இது போன்ற நெருக்கடிகள் காரணமாக, பன்னீர்செல்வம், தானாகவே பதவி விலக முன்
வருவார் என, எதிர்பார்க்கின்றனர். அது நடக்காத போது, சட்டம் - ஒழுங்கை சமாளிக்க தவறிவிட்டதாகக் கூறி, கட்சிக்குள் அவருக்கு எதிராக பிரச்னையை கிளப்பி, அதன் மூலம் காய் நகர்த்தலாம் என்றும் கணக்கு போடு கின்றனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1695791

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.