Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video)

Featured Replies

''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video)

girlsviral1_17090.jpg

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது.  

’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி, ‘இவர் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்.  எங்களுக்காகத்தான் கோஷம் எழுப்புகிறார்’ என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர்.  

ஆனால், அந்தப் பெண்ணோ, ''நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் அல்ல; நான் ஒரு தமிழ் பெண். என் இனத்துக்காகதான் அப்படி கோஷமிட்டேன். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழினத்துக்காக போராடினேன் அவ்வளவுதான். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என தெரிவித்துள்ளார். 

இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணைக் காணவில்லை என்றெல்லாம் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதோடு விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு இவர் புகைப்படத்தை இணைத்தும் வதந்தி பரவுகிறது. ’நலமாகத்தான் இருக்கிறாரா..?’ என்று விசாரித்தோம். மேலும் அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகளையும் கேட்டோம். அனைத்து விசாரணைகளுக்கும் பதிலாக ‘செல்ஃபி  வீடியோ’ அனுப்பி வைத்தார். 

பி.குறிப்பு: அவருடைய நலன் கருதி அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை!

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/78527-i-am-safe-and-am-not-in-any-political-party-says-viral-girl.art

  • தொடங்கியவர்

வைரல் பெண்ணுக்கு பேனர் வைத்தேன்.. போலீஸ் கலங்கடித்து விட்டது!’

DMK_Party_Family_1_17586.jpg

ஜல்லிக்கட்டு போராளி வீரத்தமிழச்சிக்கு பேனர் வைத்த தி.மு.க. பிரமுகரின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீஸார் துளைத்தெடுத்து விட்டனர்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஒரு இளம் பெண். போராட்டத்தின் போது அந்த இளம்பெண்ணின் போராட்ட ஸ்டைல் அவருக்கு வீரத்தமிழச்சி, வைரல் பெண் என்ற அடைமொழியை பெற்றுக் கொடுத்தது. பெயர், ஊர் என எந்த விவரமும் தெரியாத பலர் அவரை தன்னுடைய மகளாக கருதினர். அந்த பெண்ணின் போராட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. லைக்ஸ்களை அள்ளி குவித்த அந்த வீடியோ வைரல் பெண்ணுக்கு அடுத்த நாளே மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவருக்கு அரசியல் சாயமும் பூசப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த அவர், 'தான் நலமாக இருப்பதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் இல்லை' என்று விளக்கமளித்து முகநூலில் ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

DMK_Party_Family_17202.jpgஇதன்பிறகே வைரல் பெண் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் 'வீரத்தமிழச்சி என் மகளுக்கு வாழ்த்துக்கள்' என்று திருவண்ணாமலை, மேற்கு ஆரணி தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயராணி ரவி என்பவர் ஆரணி டவுனில் 5 இடங்களில் பேனர் வைத்திருந்தார். தற்போது அந்த பேனர் விவகாரம் சூடுபிடித்துள்ளது. பேனர் வைத்த ஜெயராணி மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். வைரல் பெண் குறித்து பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெண் குறித்த எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது என்று போலீஸாரிடம் பதில் அளித்த பிறகும், சென்னை வேளச்சேரியில் உள்ள ரவியின் மகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதுகுறித்து தி.மு.க.வில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி கூறுகையில், "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துடிப்புடனும், துணிவுடனும் செயல்பட்ட அந்த வீரத் தமிழச்சிக்கு பேனர் வைத்தோம். தற்போது அந்த பெண் குறித்த விவரங்களை கேட்டு போலீஸார் எங்களை நிம்மதி இழக்க வைத்து விட்டனர். சென்னையில் இருக்கும் என்னுடைய மகள் வீட்டுக்குச் சென்றும் போலீஸார் விசாரித்துள்ளனர். இதனால் அந்த 5 பேனர்களையும் அகற்றி விட்டோம்" என்றார். 

போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அந்த பெண் குறித்த விவரத்தை சேகரிக்க ரவியிடம் விசாரணை நடத்தினோம். தற்போது அவர் உயிரோடு இருக்கும் தகவல் கிடைத்து விட்டது. இதனால் பேனரை மட்டும் அகற்றும்படி தெரிவித்துள்ளோம்" என்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/78642-police-questioned-about-marina-girl-as-banners-were-placed-in-aarani.art

  • தொடங்கியவர்
'சின்னம்மா சின்னம்மா... ஒபி.எஸ். எங்கம்மா','நேற்று வந்த ஆயாம்மா... நீயெல்லாம் சி.எம்மா? : 'இன உணர்வுடன் கோஷம் போட்ட என் மீது அரசியல் சாயம் பூசுகிறார்கள்'- மெரீனா ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக கோஷமிட்ட மதுரை யுவதி கூறுகிறார்
2017-01-24 11:58:46

21972_22-1485099915-student3.jpgஜல்­லிக்­கட்டு மீதான தடைக்கு எதி­ராக சென்னை மெரீனா கடற்­க­ரையில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் ஒன்று திரண்டு நடத்­திய ஆர்ப்­பாட்­டத்தில் பல்­வேறு கோஷங்கள் ஒலித்­தன.

 

இவற்றில், 'சின்­னம்மா சின்­னம்மா ஒபிஎஸ் எங்­கம்மா', 'நேற்று வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா? வரச் சொல் வரச்சொல் ஓபி­எஸ்ஸை வரச்சொல், ஊரை சுத்­துற மோடி மதுரைப் பக்கம் வாடி' போன்ற கோஷங்­களை எழுப்­பிய ஒரு யுவதி பலரின் கவ­னத்­தையும் ஈர்த்தார்.

 

நாட்கள் செல்ல செல்ல அவர் கோஷ­மி­டு­வதைப் பார்ப்­ப­தற்­காக அவரைச் சூழ திரண்­ட­வர்­களின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­தது. பல்­வேறு வகை­யான கோஷங்­களை அவர் எழுப்­பினார்.

 

இந்த இளம் பெண் உணர்­வு­பூர்­வ­மாக வீரா­வே­ச­மாக முழக்­க­மிடும் வீடி­யோக்கள்  இணை­யத்­த­ளங்­க­ளிலும் வெளி­யாகி வேக­மாகப் பர­வின. இந்த யுவ­தி யின் துணிச்­சலைக் கண்டு பலரும் வியப்­ப­டைந்­தனர்.

 

21972_Metro-06-19.jpg

மிகப் பிர­ப­ல­மான ஒரு­வ­ரா­கி­விட்ட  அவர், தற்­போது பெரும் வேத­னையில் உள்ளார். காரணம், அவ­ருக்கு அர­சியல் முத்­திரை குத்தி குறிப்­பிட்ட கட்­சி­யினர் அவரை பேஸ்­புக்கில் மிகக் கடு­மை­யாக விமர்­சித்து வரு­வதே.

 

21972chennai-girl.jpg

 

சசி­கலா, மோடி முத­லா­னோரை குறிப்­பிடும் வித­மாக கோஷ­மிட்ட இந்த யுவ­தியின் பாது­காப்பு குறித்து பலர் கரி­சனை தெரி­வித்­துள்­ளனர். ஆனால் தன் மீதான அர­சியல் முத்­தி­ரையை முற்­றாக மறுத்­துள்ளார் மதுரை மாவட்­டத்தைச் சேர்ந்த இந்த யுவதி.

 

தான் மிக மிக சாதா­ரண பெண் என்றும், சாதா­ர­ண­மான முறையில் சென்­னையில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­யாற்றி வரு­வ­தா­கவும் கூறி­யுள்ள அவர், தனக்கும் ஜல்­லிக்­கட்­டுக்கும் உணர்­வு­பூர்­வ­மான நெருக்கம் இருப்­ப­தா­கவும் அதனடிப்­ப­டை­யில் தான் போராட்­டத்தில் கலந்து கொண்டேன் என்றும் கூறி­யுள்ளார்.

 

21972fds-fdff.jpgஇது தொடர்­பாக அவர் 'ஒன்­இந்­தியா' தமிழ் இணை­ய­த­ளத்­துக்கு அளித்த செவ்­வியில்  கூறி­யி­ருப்­ப­தா­வது,

நான் சாதா­ர­ண­மா­னவள்

 

எனக்கும் எந்தக் கட்­சி க்கும் தொடர்பு கிடை­யாது. அர­சி­ய­லுக்கும் எனக்கும் எந்த சம்­பந்­தமும் கிடை­யாது. நான் மிக மிக சாதா­ரண பெண்.

 

எந்தக் கட்­சி­யையும் எனக்குத் தெரி­யாது. நான் திமு­கவும் இல்லை, அதி­மு­கவும் இல்லை. தமிழ் உணர்ச்­சி­யோடு, தமிழ்­நாட்­டுக்­காக பேச வந்தேன்.

 

தனி ஆளாக மெரீனா போராட்­டத்தில் கலந்து கொண்டேன். என் பின்னால் நின்­றி­ருந்த நபர் எந்தக் கட்­சியைச் சேர்ந்­தவர் என்று எனக்குத் தெரி­யாது. அவர் தி.மு­.க.வைச் சேர்ந்­தவர் என்­றெல்லாம் எனக்குத் தெரி­யாது. அங்கு பலரும் கூடி­யி­ருந்­தனர். அனை­வ­ருமே கறுப்புச் சட்­டை தான் போட்­டி­ருந்­தனர்.

 

நான் பயப்­பட மாட்டேன்


எந்த விமர்­ச­னத்­திற்­கா­கவும் நான் பயப்­படப் போவ­தில்லை . சர்ச்­சை­களைக் கண்டு நான் பயப்­ப­ட­வில்லை. நான் சர்ச்­சைக்­கு­ரிய வகையில் பேசவும் இல்லை. எல்­லோ­ரையும் போலதான் கோஷ­மிட்டேன்.

 

வாடி­வா­ச­லுக்கு அருகில் என் வீடு

 

ஜல்­லிக்­கட்­டுடன் உணர்­வு­பூர்­வ­மாக நெருங்­கிய தொடர்பு கொண்­டவள் நான். ஜல்­லிக்­கட்டு நடக்கும் ஊர் தான் நானும். வாடி வாச­லுக்கு அரு­கில் தான் எனது வீடு. அந்த உணர்­வில் தான் நான் கலந்து கொண்டேன். அந்த உணர்வின் அடிப்­ப­டை­யில் தான் போராட்­டத்தில் பங்­கேற்றேன்.

 

21972fdf-df.jpg

 

யாரையும் அவ­மா­னப்­ப­டுத்­த­வில்லை.


அ.தி­.மு.க. பொதுச் செய­லாளர் சசி­கலா அம்­மாவை நான் குறிப்­பிட்டு விமர்­சித்துப் பேச­வில்லை. அதே­போ­லத் தான் பிர­தமர் மோடி­யையும் நான் திட்­ட­மிட்டு விமர்­சிக்­க­வில்லை.

 

அவ­மா­னப்­ப­டுத்தும் நோக்கில் நான் விமர்­சித்து கோஷ­மி­ட­வில்லை. அனை­வரும் எப்­படி முழக்­க­மிட்­டார்­களோ அதே­போ­லத் தான் நானும் கோஷ­மிட்டேன்.

 

என் தமிழ் இனத்­திற்­காக, ஜல்­லிக்­கட்­டுக்­கா­கத் தான் நான் போரா­டினேன். உயி­ருள்­ள­வரை போரா­டுவேன். போராட்­டத்­தின்­போது நான் கோஷ­மிட்டபோது தவ­று­த­லாக தவ­றான வார்த்­தைகள் வந்­தி­ருக்­கலாம்.

 

அது யாரையேனும் வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

21972asssss.jpg

 

முத்திரை குத்த வேண்டாம்


நான் கட்சி சார்பற்றவள், அரசியல் சார்பற்றவள். ஆனால் பலரும் எனக்கு முத்திரை குத்திப் பேசுவது வருத்தம் தருகிறது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் அந்த யுவதி.

 

வீடியோக்கள் :

 

 

நேத்து வந்த ஆயாம்மா நீயெல்லாம் சி.எம்மா?:

 

 

 

நன்றி: ஒன் இந்தியா

 

21972_Metro-06-19-2-merina.jpg

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=21972#sthash.7o7k2ZG0.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.