Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷமிகள் ஊடுருவல்

Featured Replies

gallerye_000446975_1696148.jpg

 

  • gallerye_223528399_1696148.jpg

 

உலகையே திரும்பி பார்க்க வைத்த, மாணவர்களின், சென்னை, மெரினா போராட்டத்தை, தேச விரோத சக்திகள் தங்களின் விஷமத்தால், கொச்சையாக்கி விட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதி வழியில் நடந்த, ஒரு வார போராட்டத்தை வன்முறையாக்கி, அதில் குளிர் காய்ந்தனர். காவல் நிலையங்கள், குடிசைகளுக்கு தீ வைத்து, கலவரத்தை துாண்டினர். போலீசுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் மறியல்களால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பெண்கள், பள்ளி மாணவர்கள் பரிதவித்தனர்.
 

இதுவரை இல்லாத அளவுக்கு


ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, ஜன., 17 காலை, சென்னை, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லம் முன், மாணவர்கள் அமைதியாக போராட்டத்தை துவங்கினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கடற்கரையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளிலும், அவர்களே ஈடுபட்டனர்.
இதை பார்த்து வியந்த இளைஞர்கள், பெண்கள் என, பலரும், அவர்களுக்கு ஆதரவாக, மெரினாவில் குவிந்தனர். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, லட்சக்கணக்கானோர் ஆதரவுடன், மெரினா போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதை பார்த்து, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடினர். மெரினா கூட்டத்தை பார்த்த, சில, தேச விரோத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் போர்வையில், மெரினாவில் புகுந்தனர். அவர்கள், ஜல்லிக்கட்டு பிரச்னையை தவிர்த்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, போராட்டத்தை திசை திருப்பினர்.அவர்கள் செய்த ஏற்பாடுகளால், போராட்டக் களத்தில் இருந்த லட்சக்கணக்கானவர்களுக்கு,தினமும் குடிநீர், உணவு வகைகள் கிடைத்தன.
 

கடலை நோக்கி ஓட ஆரம்பித்தனர்


இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியதை அடுத்து, மாணவர்கள், போராட்டத்தை திரும்ப பெற முடிவு செய்தனர். ஆனால், குடியரசு தின விழாவை சீர்குலைக்க நினைத்த, தேச விரோதி சக்திகள், அரசு நடவடிக்கைகளை தவறாக சித்தரித்து, மாணவர்களை கலைந்து செல்ல விடாமல், அங்கேயே முகாமிட வைத்தன. அந்த விபரம், போலீசாருக்கு கிடைத்தது.

 

இதையடுத்து, மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி, நேற்று காலை, 4:00 மணிக்கு, போலீசார் கூறினர். அதை ஏற்று, பல மாணவர்கள் கலைந்து சென்றனர். சிலர் மட்டும், கடலை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அவர்களையும், வீடுகளுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதை ஏற்காத சிலர், கடலில் இறங்கி போராடினர். போலீசார், மணலில் இருந்த படி, பாதுகாப்பு பணியில்ஈடுபட்டனர்.

விஷமிகள் ஊடுருவல்


இன்னொரு பக்கத்தில், தேச விரோத அமைப்புகளைச் சேர்ந்த விஷமிகள், கும்பலாக, ஐஸ் அவுஸ், நடுக்குப்பம் பகுதிகள் வழியாக, மெரினாவில் நுழைய முயன்றனர்; அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால், போலீஸ் தடுப்புகளை தாண்டி, அவர்கள் கடற்கரைக்கு வர முயன்றதை அடுத்து, போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமை மோசமானதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, அவர்களை விரட்டி அடித்தனர். ஆத்திரமடைந்த கும்பல், ஐஸ் அவுஸ் காவல் நிலையம் முன் நிறுத்தியிருந்த, இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தது. இதில், காவல் நிலையத்தின் பெயர் பலகையும் எரிந்தது. உள்ளிருந்த, பெண் போலீசார் அலறியடித்து, வெளியே ஓடி தப்பினார்.

இதே போல, கடற்கரையோர மீனவர் குடிசைகளுக்கு தீ வைத்து, வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை வெறியாட்டம், நகரின் பல பகுதிகளுக்கும், உடனடியாக பரவத் துவங்கியது. போலீஸ் அதிகாரிகளின் கார், பஸ்களையும் தீ வைத்து கொளுத்தினர்.
இதற்கிடையே, போலீசுக்கு எதிர்ப்பு என்ற பெயரில், சாலைகளில் ஆங்காங்கே, மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தகைய திடீர் போராட்டங்களால், சென்னை முழுவதும், நேற்று மாலை வரை, போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால், பள்ளி மாணவர்கள், அலுவலகம் சென்ற பெண்கள், வீடு திரும்ப முடியாமல் பரிதவித்தனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1696148

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.