Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தவர் இந்தியாவிலேயே இல்லையாம்!

Featured Replies

மதுரையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஆரம்பித்தவர் இந்தியாவிலேயே இல்லையாம்!

 

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழ்நாட்டிலும், இலங்கை உட்பட உலகில் தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் மும்முரமாக நடைபெற்றன. தமிழக அரசின் அறிவிப்பையடுத்து ஒரு வார காலமாக இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. 

4_Thamukkam_Protest.jpg

இந்தப் போராட்டத்தை சமூக வலைதளங்கள் வாயிலாகவே இளைஞர்கள் ஒன்று திரட்டியதும் நீங்கள் அறிந்ததே!

இந்த நிலையில், மதுரையில் தமுக்கம் - அழகர்கோவில் வீதியில் நடைபெற்ற ஒரு வார காலப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்தவர் இந்தியாவிலேயே இல்லை என்ற ஆச்சரியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கான முதல் அழைப்பை விடுத்திருப்பவர் உக்ரெய்னில் பொறியியல் கற்று வரும் மதுரை மாணவர் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து பொலிஸார் விசாரித்தபோதே இந்தத் தகவல் அம்பலமாகியுள்ளது.

பொலிஸார் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தபோது, தான் மதுரை - அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் உக்ரெய்னில் பொறியியல் கல்லூரியில் கல்வி கற்று வருபவர் என்றும், தனக்கு வந்த ஒரு வட்ஸ் அப் தகவலை மதுரையில் உள்ள தனது நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு தனது அன்றாட நடவடிக்கையைக் கவனிக்கச் சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

அவர் அனுப்பிய அந்த ஒரு செய்தியே இளைஞர்கள் மூலம் காட்டுத் தீயாகப் பரவி தமுக்கத்தில் கடந்த ஏழு நாட்களாக ஆர்ப்பாட்டமாக வெடித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.virakesari.lk/article/15755

  • தொடங்கியவர்

உக்ரைனில் இருந்தபடி தமுக்கம் போராட்டத்துக்கு வித்திட்ட தமிழ் மாணவர்!

 
தமுக்கம் போராட்டம் | கோப்புப் படம்: ஜி.ஞானவேல்முருகன்
தமுக்கம் போராட்டம் | கோப்புப் படம்: ஜி.ஞானவேல்முருகன்
 
 

தமுக்கத்தில் நடந்து வந்த இந்தப் போராட்டத்துக்கு வாட்ஸ் அப் மூலம் வித்திட்டவர், உக்ரைனில் வசிக்கும் தமிழ் மாணவர் என்ற தகவல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை தமுக்கம் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் போராட்ட வியூகத்தை மாற்றி, நிரந்தரச் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி போராடத் தொடங்கினர். போலீஸாரின் 12 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் விவரம் > 12 மணிநேர பேச்சுக்கு பின் முடிவுக்கு வந்த மதுரை தமுக்கம் போராட்டம்

தமுக்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாணவர்கள், பேராசிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு போராடி வந்தனர்.

ஒட்டுமொத்த மதுரையையுமே ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு வித்திட்டதும், ஒருங்கிணைக்க உதவியதும் வாட்ஸ் அப்பில் வந்த குறுந்தகவல் ஒன்றுதான் என்பது தெரியவந்தது.

உக்ரைனில் இருந்தபடி தமிழ் பொறியியல் மாணவர் ஒருவர் தட்டிவிட்ட வாட்ஸ் அப் குறுந்தகவல் ஒன்றுதான் அது என்பதும் தெரியவந்துள்ளது. அந்த மாணவரின் சொந்த ஊர் அவனியாபுரம்.

"அந்த வாட்ஸ் அப் குறுந்தகவலை உருவாக்கி வெளியிட்டது குறித்து தீவிரமாக விசாரித்தபோது, அந்த மாணவரை அடையாளம் கண்டோம். அவரிடம் விசாரித்தபோது, 'மிக எளிதாக அதைச் செய்து முடித்தேன்' என்று அவர் விளக்கம் தந்தார்" என்று துணை ஆணையர் ஏஜி.பாபு தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/உக்ரைனில்-இருந்தபடி-தமுக்கம்-போராட்டத்துக்கு-வித்திட்ட-தமிழ்-மாணவர்/article9499085.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.