Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளாளுக்கு பதவி கேட்டு சசியின் மன்னார்குடி சொந்தங்கள்... குடுமிப்பிடி!:

Featured Replies

ஆளாளுக்கு பதவி கேட்டு சசியின் மன்னார்குடி சொந்தங்கள்... குடுமிப்பிடி!: சொத்து குவிப்பு வழக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள்: ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படி நெருக்கடி

Tamil_News_large_1696948_318_219.jpg

 

ஆட்சியிலும் கட்சியிலும் ஆளாளுக்கு பதவி கேட்டு மன்னார்குடியை சேர்ந்த சசிகலாவின் சொந்தங்கள் குடுமிப்பிடி சண்டை போடும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து, சசிகலாவுக்கு பயம் காட்டி நாடகமாடும் உறவுகள், போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் தினகரனை வெளியேற்றும்படியும், நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் முழு கட்டுப்பாடும், சசிகலா கைக்கு வந்து விட்டது. முதல்வராக பன்னீர்செல்வம் இருந்தாலும், சசிகலா சொல்படி செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்.எனவே, சசிகலாவின் உறவினர்கள், கட்சியிலும், ஆட்சியிலும் பங்கெடுக்க விரும்புகின்றனர். அதற்கான நடவடிக்கைகளில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சசிகலாவின் நெருங்கிய உறவினர் முதல்வர் பதவியில் அமர ஆசைப்படுகிறார்.

ஆனால் சசிகலாவோ தன் சகோதரி மகனான தினகரன் ஆலோசனைப்படி செயல்படுகிறார். முதல்வராகப் பதவி ஏற்று தினகரன் சொல்லும் தொகுதியில் நின்று வெற்றி பெறுவதே அவரின் எண்ணமாக உள்ளது.முதல்வர் பன்னீர் செல்வம், தினகரனின் விசுவாசி. அவரது உதவியால் தான் பன்னீரை, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜதந்திரத்தை சசிகலா கையாண்டு
வருகிறார்.

இது, அவரின் தம்பியான திவாகரனுக்கும் கணவரான நடராஜனுக்கும் போயஸ் கார்டனில்
சசிகலா உடனேயே இருக்கும் இளவரசிக்கும் பிடிக்கவில்லை.தினகரன் கைக்கு முழு
அதிகாரமும் போய் விடுமோ என கவலைப்படுகின்றனர்.அதனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், கட்சியிலும் ஆட்சியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கின்றனர்.
தினகரனை, சென்னை, போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றி விட்டு, தங்களுக்கு முக்கியத் துவம் தர வேண்டும் என, திவாகரன் தரப்பில், பகிரங்க கொடி துாக்கி உள்ளதாக தெரிகிறது
.
இதற்கிடையில், உச்ச நீதி மன்ற தீர்ப்பு எதிராக வந்தால், தான் முதல்வராக வேண்டும் என
சசிகலா கணவர் நடராஜன் விரும்புகிறார்; திவாகரனோ, தனக்கும், தன் மகனுக்கும் கட்சியில் முக்கிய பதவி வேண்டும் என்கிறார். போயஸ் கார்டனில் புகைந்து கொண்டிருக்கும் இந்த பிரச்னை, விரைவில் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச்செயலர் ஆனதில் இருந்தே, சசிகலாவுக்கு அடுத்தடுத்து பிரச்னைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தொண்டர்களின் அதிருப்தி ஒரு புறம், மத்திய அரசின் பாராமுகம்
மறுபுறம் என, அவர் கடும் நெருக்கடியில் இருக்கிறார்.

இந்நிலையில், ஜெ., மரணம் தொடர்பான கேள்விகள், கணவர், தம்பி உள்ளிட்ட
குடும்பத்தினரின் பதவி சண்டை, தீபாவுக்கு பெருகும் ஆதரவு என, பல தரப்பிலும் பிரச்னைகள் கிளம்புவதால், சசிகலா கடும் விரக்தியில் இருப்பதாக, கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதனால் தான், கடந்த சில நாட்களாவே, அவர் வெளியில் முகம் காட்டாமல் இருந்து வருகிறார் என்றும், கார்டன் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1696948

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.