Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!

Featured Replies

'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்!’ - சொன்னவர் இவர்தான்!

b1_13191.jpg

தோழர். நேற்று துவங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த வார்த்தை. 'தோழர் எனச்சொல்லி உங்களிடம் யாராவது பேசினால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்' என போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னது தான் இந்த வார்த்தை வைரலாக காரணம். சைலேந்திரபாபு இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சைலேந்திரபாபு இதை சொல்லவில்லை. இதைச் சொன்னவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, கோவை வஉசி மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தின் 7-வது நாளான கடந்த 23-ம் தேதி அதிகாலை போராடிய மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். வெளியேறாதவர்கள்  தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர். அன்றைய தினம் முழுக்க கோவையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

b2_13350.jpg

இந்நிலையில், தடியடி நடத்தப்பட்ட மறுதினம் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ். "மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சில அமைப்பினர் இணைந்து கொண்டனர். அவர்கள் யார் யார் என்ற விவரம் இருக்கிறது" எனச்சொன்னவர், பேப்பரில் எழுதியிருந்த அமைப்பின் பெயர்களை படிக்க ஆரம்பித்தார்.  "மக்கள் அதிகார மையம், நாம் தமிழர், மே 17 இயக்கம், ஆர்.எஸ்.ஒய்.எப், எஸ்எப்ஐ, டிஒய்எப்ஐ, சிபிஐ (எம்எல்) போன்ற மதவாத, இனவாத அமைப்புகள் தான் மாணவர்களோடு இருக்கிறார்கள். இவர்கள் போராட்டத்தின் போது மாணவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் உங்களை (மாணவர்களை) அழைக்க கூடும். தோழர் என அழைத்து உங்களிடம் பேசினால் தொடர்பை துண்டியுங்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவர், தடையை மீறி அரசே நடத்திய ரேக்ளா ரேஸ், போலீஸார் நடத்திய தாக்குதல் குறித்த செய்தியாளர்கள் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். அப்போது அவருக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அழைப்பை பார்த்தவர், திடீரென இது லைவ்வாக (நேரடி ஒளிபரப்பு) ஒளிபரப்பாகி வருகிறதா என கேட்டார். ஆம் என்றதும் வேகமாக வெளியேறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/78727-if-someone-calls-by-saying-thozhar-cut-their-contact---he-is-the-one-who-said-that.art

  • தொடங்கியவர்

வைரலான 'தோழர்' பதமும் சைலேந்திர பாபுவின் விளக்கமும்

 
கோவை மாநகர காவல்துறை ஆணையஎர் அமல்ராஜ்.
கோவை மாநகர காவல்துறை ஆணையஎர் அமல்ராஜ்.
 
 

இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வார்த்தை 'தோழர்'.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் கலந்துகொண்டவர்களிடம் தோழர் என சொல்லி யாராவது பேசினால் அவர்களின் தொடர்பைத் துண்டியுங்கள் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது இதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்களை கோயம்புத்தூரில் முடித்து வைத்த காவல்துறை ஆணையர் அமல்ராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''போராட்டத்தில் இருந்து உங்களுக்கு புதிய நட்பு கிடைத்திருந்தால் அவற்றை விலக்கி விடுங்கள். தோழர் என்று கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால் அதைத் துண்டித்து விடுங்கள்.

பெற்றோர்கள் உங்களின் பிள்ளைகளின் அலைபேசியில் புதிய வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நண்பர்கள் இணைந்திருந்தால் அவற்றை நீக்கிவிடுங்கள்'' என்று பேசியிருந்தார்.

ஆனால் காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு இவ்வாறு பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதுகுறித்து நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், தான் அவ்வாறு எதுவும் கூறவில்லை என்று தன் ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார் சைலேந்திர பாபு.

இது ஒரு பொய்யான செய்தி. தோழர் என்ற வார்த்தையில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. தமிழ்வழி கல்வி பயின்ற எனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சைலேந்திர பாபு.

http://tamil.thehindu.com/tamilnadu/வைரலான-தோழர்-பதமும்-சைலேந்திர-பாபுவின்-விளக்கமும்/article9501819.ece?widget-art=four-rel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.