Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்!

Featured Replies

மனைவியுடன் குடியரசு தின விழாவை சிறப்பித்த முதல்வர் பன்னீர்செல்வம்!

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சென்னையில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் மனைவியுடன் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதுவரை முதல்வரின் மனைவி பொது நிகழ்வில் பங்கற்றது இல்லை. முதன் முறையாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி, பொது நிகழ்வில் கலந்து கொண்டது, அரசு ஊழியர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மனைவியுடன் பன்னீர் செல்வம்

 

நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல பிரச்னைகள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தன. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலாதான், முதல்வராக பொறுப்பேற்க வேண்டுமென தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்தால்,  நிம்மதியாக ஆட்சி நடத்த முடியாத சூழல் நிலவியது. 

இதற்கிடையே ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டில் வலுபெறத் தொடங்க,  மெரினாவில் இளைஞர்கள், மாணவிகள், பெண்கள் குழந்தைகள் திரண்டனர். 7 நாட்களாக மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமே போராட்டம் பரவியது.  இனிமேல் சமாளிக்க முடியாது என்ற எண்ணம் அரசுக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் இயற்றப்பட்டது.  

ஜல்லிக்கட்டுக்காக நிரந்தரச் சட்டம் வேண்டுமென போராட்டக்காரர்கள் ஒற்றைக் காலில் நிற்க, முதல்வருக்கு மீண்டும் தூக்கம் போனது. போராட்டக்காரர்கள் கலைந்தால்தான் மெரினாவில் குடியரசுத் தின விழாவை நடத்த முடியுமென்ற நிலை வேறு இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய தடியடி அராஜகம் ஊருக்கே தெரியும். இளைஞர் படை கலைந்ததையடுத்து சென்னை மெரினாவில் இன்று குடியரசு தின விழா உற்சாகமாக நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் ஒரு மாற்றத்தை காண முடிந்தது. இத்தனை ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்விலும் பன்னீர் செல்வத்தை மனைவியுடன் காண முடிந்தது இல்லை. அரசு நிகழ்வு, கட்சிக் கூட்டம் என்று எதிலுமே பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து அவரது மனைவியை கண்டது இல்லை. ஆனால், குடியரசு தின விழாவில் முதன்முறையாக பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் பங்கேற்று  ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். 

குடியரசு தின விழாவில், பன்னீர் செல்வத்தின் அருகில் அவரது மனைவி விஜயலட்சுமியும் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார். முதல்வரின் பேரக்குழந்தைகளும் கூட குடியரசு தின விழாவைக் காண வந்திருந்தனர். பொதுவாக குடியரசுத் தின விழா கவர்னர் விழாவாகத்தான் இருக்கும். ஆனால், தமிழகத்தை பொறுத்த வரை, பொறுப்பு கவர்னர்தான் இருப்பதால், இந்த முறை குடியரசுதின விழாவில் தமிழக முதல்வரே கொடியேற்றி, முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். விருதுக்குரியவர்களுக்கும் விருது வழங்கி கவுரவித்தார். 

முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கலை நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டு களித்தார் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி முடிந்த போதும் மாணவ- மாணவிகளை கைதட்டி அவர் உற்சாகப்படுத்தினார். பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் பங்கேற்ற முதல்வர் பன்னீர் செல்வத்தை  கண்டு அதிமுகவினர் வியப்படைந்தனர். 

மெரினாவில் நடந்த குடியரசுத் தின விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பங்கேற்கவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/78838-tn-cm-participated-with-his-wife-in-republic-day-parade.art

  • தொடங்கியவர்

குடியரசு தின விழாவில், முதல் முறையாக, முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றி, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பொது நிகழ்ச்சிகளில், இதுவரை தலை காட்டாத, அவரது மனைவி மற்றும் பேரக்குழந்தைகளும், துணிச்சலாக பங்கேற்றனர். விழாவுக்கு கூட்டம் வரக்கூடாது என்பதற்காக, சசிகலா ஆதரவு கும்பல் செய்த சதியும் அம்பலமாகி உள்ளது.

 

Tamil_News_large_1698213_318_219.jpg

சென்னையில், ஆண்டுதோறும், மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்படும். கவர்னர், தேசியக் கொடியேற்றுவது வழக்கம். தற்போது, தமிழகத்திற்கென தனி கவர்னர் இல்லை; மஹாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக பொறுப்பு கவர்னராக உள்ளார்.

அவர், மஹாராஷ்டிராவில் நடந்த, குடியரசு தின விழாவில் நேற்று பங்கேற்றதால், தமிழகத் தில், தேசியக் கொடியேற்றும் வாய்ப்பு, முதல் முறையாக, முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கிடைத்தது. நேற்று காலை, 7:45 மணிக்கு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து, உரிய அணிவகுப்புடன், போலீசார் அவரை அழைத்து வந்தனர்.

அவரது காரின் முன், ஆறு புல்லட் பைக், பின்னால், ஒன்பது புல்லட் பைக்குகளில், போலீசார் அணிவகுத்து வந்தனர். விழா நடக்கும் இடத்திற்கு வந்த முதல்வரை, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்,

தென்னிந்திய பகுதிகளின் தலைமை படைத் தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே. ஆனந்த்; தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, ரியர் அட்மிரல் அலோக் பட்னாகர்; தாம்பரம் வான்படை நிலைய அதிகாரி, ஏர் கமோடர் சீனிவாசன்; கிழக்கு மண்டலம், கட லோர காவல் படை கமாண்டர் ராஜன் பர்கோத்ரா ஆகியோரை, முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து, தமிழக போலீஸ், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சட்டம் - ஒழுங்கு கூடுதல், டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரையும், முதல்வருக்கு அறிமுகம் செய்தனர்.

காலை, 8:00 மணிக்கு, முதல்வர் பன்னீர் செல்வம்,தேசிய கொடி யேற்றி, மரியாதை செலுத்தினார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம், மூவர்ண கொடி மீது, மலர் துாவப்பட்டது. கொடியேற்றும்நிகழ்ச்சி முடிந்ததும், முப்படை அணிவகுப்பு நடந்தது.

ராணுவம், கடற்படை, ராணுவ கூட்டுக்குழல் முரசிசை, வான்படை, கடலோர காவல் படை, முன்னாள் ராணுவ படை, சி.ஆர்.பி.எப்., - சி.ஐ.எஸ்.எப்., மற்றும் ஆர்.பி.எப்., படைப்பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.அவர்களை தொடர்ந்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆண்கள், கமாண்டோ படை, தமிழக சிறப்பு காவல் படை பெண்கள், ஆயுத படைப்பிரிவு உள்ளிட்ட படைகளின் அணிவகுப்பு நடந்தது.

அணிவகுப்பில், டி - 90 டாங்கி, டி - 72 டாங்கி போன்றவை எடுத்துச் செல்லப்பட்டன. அணி வகுப்பு மரியாதையை, முதல்வர் பன்னீர் செல்வம், உற்சாகத்துடன் ஏற்றார்.

அணிவகுப்பு முடிந்ததும், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லி ணக்கப் பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக் கம், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக் கான சிறப்பு விருது ஆகியவற்றை, முதல்வர்

 

பன்னீர் செல்வம் வழங்கி பாராட்டினார்; அவர்களுடன், புகைப்படம் எடுத்துக் கொண் டார். பின், மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அடுத்து அரசு துறைகளின் சார்பில், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது.

அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கு பின், தேசிய கீதம் இசைக்க, விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர்பொள்ளாச்சி ஜெயராமன், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி மற்றும் வெளிநாட்டு துாதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

குடியரசு தின விழாவில், முதல்வர் பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, முதல் முறையாக பங்கேற்றார். சசிகலா எதிர்ப்பை பொருட்படுத்தாமல், துணிச்சலுடன் அவர் பங்கேற்றது, ஆளும் வட்டாரத்தில் ஆச்சரி யத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழா நிறைவு பெற்றதும், அவருக்கு தலைமை செயலர்,அரசு ஆலோசகர் மற்றும் அதிகாரி களை, முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். முதல்வரின் பேரக்குழந்தைகளும், விழாவில் முதல் முறையாக பங்கேற்றனர். கவர்னர் கொடியேற்ற வரும்போது, அவரை முப்படை வீரர்கள் அணிவகுத்து அழைத்து வருவர்.

இம்முறை முதல்வர் கொடியேற்ற வந்ததால், அவரை தமிழக போலீசார் அழைத்து வந்தனர். தமிழகத்தில் முதன் முறையாக, குடியரசு தின விழாவில் கொடியேற்றிய முதல்வர் என்ற பெருமையை, பன்னீர்செல்வம் பெற்றார். முதல்வர் கொடியேற்றுவதால், இந்நிகழ்ச்சி யில் மக்கள் கூட்டம் அதிகம் வருவதை தடுக்க, சசிகலா ஆதரவாளர்கள் சூழ்ச்சி செய்துள்ளனர்.

ஜெயலலிதா இருந்தபோது, அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும், மாவட்ட செயலர்களும் பங்கேற்பர். கட்சி நிர்வாகிகளும் அதிக அளவில் கூடுவர்.ஆனால், நேற்றைய விழாவிற்கு, அவர்களை வர வேண்டாம் என, சசிகலா குடும்பத்தினர் கூறி விட்டதாக தெரிகிறது.

இதன் காரணமாக, பெரும்பாலான எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை; அவர்கள், தங்கள் மாவட்டத்தில் நடந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.

கட்சி நிர்வாகிகளும், சசிகலா குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும் எனக்கருதி, அந்தப் பக்கம் வரவில்லை. மேலும், மெரினா கடற்கரைக்கு சென்றால், போலீசார் விட மாட்டார்கள் என்ற புரளியை கிளப்பி விட்டுள்ளனர்; இதனால், பொது மக்களும் அதிக அளவில் வரவில்லை.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1698213

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.