Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!' -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு

Featured Replies

' காலம் உங்களை கவனித்துக் கொள்ளும் பொன்னார்!'  -தி.மு.க மா.செவின் ஃபேஸ்புக் பதிவு

மெரினா போராட்டம்

தி.மு.க நிர்வாகிகளில் அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் சற்று வித்தியாசமானவர். நடப்பு அரசியலை நையாண்டி செய்து கட்டுரைகளாகப் பதிவு செய்வதில் வல்லவர். மெரினா போராட்டம் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்தை விமர்சித்து, அவர் எழுதிய பதிவுகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. 

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மாணவர்கள் நடத்திய மெரினா புரட்சியின் விளைவால், அவசரச் சட்டம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவர் டெல்லி சென்ற காட்சிகளை, 'மர்மப் புன்னகை ஓ.பி.எஸ்' என்ற தலைப்பில் நையாண்டி செய்திருந்தார். இறுதியாக, 'இடைவேளைக்குப் பிறகான ரஜினி படம் போல பல காட்சிகள் சூடுபிடித்தன. கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதாக நினைத்து விளையாடிய மோடியும், ஓ.பி.எஸ்ஸும் மாட்டியிருப்பது ஜல்லிக்கட்டு திடலில்' என முடித்திருந்தார். குடியரசு தினத்துக்கும் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார் சிவசங்கர். அதில், ' இப்போ கூட எந்த அரசியல் கட்சியும் தனி நாடு கோரிக்கையைப் பேசல, பேசவும் மாட்டாங்க. ஆனா இளைஞர்கள்கிட்ட இருந்து கேஷுவலா கிளம்பிடுச்சி. அனல் பறக்கும் ஸ்டேடஸ்கள் தெறிச்சிது. 'நீ அனுமதி தரலன்னா, எங்க நாட்டுல ஜல்லிக்கட்டு நடத்திக்கிறோம்'; 'கிரிக்கெட்டில் வென்ற அண்டை நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகள்'; 'அண்ணா அப்போவே தமிழ்'நாடு'ன்னு தொலைநோக்கோடு தான் பேர் வச்சிருக்காரு'.

தி.மு.க அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர்இதெல்லாம் டிரெண்டிங்ல எழுதுனதுன்னு விட்டுட்டேன். ஒருத்தர் சீரியஸாவே எழுதி இருந்தாரு. 'வல்லரசா இருந்தது ரஷ்யா. கிட்ட நெருங்கவே முடியாது. கார்ப்பசேவ் வந்தாரு. பிரிச்சி உட்டுட்டாரு. இந்தியாவின் கார்ப்பசேவ் 'மோடி' வாழ்க !'. டி.வி விவாதத்துல அய்யநாதன் அழுத்திச் சொல்றாரு. " இந்திய ஒன்றியத்தின் அங்கமான தமிழ்நாடு"ன்னு. இன்னைக்கு ஃபேஸ்புக் வந்தா நிறைய கறுப்புக் கொடி ஃபுரொபைல் பிக்சர். இன்னொரு பக்கம் நாட்டுப்பற்ற வலியுறுத்தியும் நாடு ஒண்ணா இருக்கனும்னு வலியுறுத்தியும் வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் கோஷம் எல்லாம். இதை எல்லாம் அண்ணன் மான்கிபாத்துக்குத்தான் ரீ டைரக்ட் பண்ணனும். ஏன்னா அவர்தான் மனசு வைக்கணும். எல்லோரையும் மதிச்சி நடக்கனும். உரிமைய பறிக்கக்காம இருக்கணும். இத காங்கிரசுக்கும் CC போடணும். சரி, இந்தியா வாழ்க. அண்ணன் மோடிக்கு கொடியரசு தின வாழ்த்துக்கள். அடுத்த வருசமும் சொல்றது உங்க கைல தான் இருக்கு' என விளாசியிருந்தார் சிவங்கர். கடைசியாக, மாணவர்கள் போராட்டம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அவர் கொடுத்த பதில் உச்சகட்டம். 

அவருடைய பதிவுகள் இங்கே அப்படியே! 

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்மன்னிக்கவும் இதை சொல்வதற்கு, தரம் தாழ்ந்துவிட்டீர்கள் பொன்னார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்ற போது ஒரு மரியாதை உண்டானது. பல்வேறு இனம், சாதி மக்கள் நிறைந்த தொகுதி. 'எல்லோரையும் அரவணைப்பவர் போலும்' என நினைத்தோம். ஆனால் இன்று நீங்கள் கொடுத்த பேட்டி துளியும் உங்கள் அமைச்சர் தகுதிக்கு பொருந்தவில்லை. போராட்ட இடத்தில் எப்படி தொழுகை செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். தொழுகை செய்த அந்தப் புகைப்படத்தை பார்த்திருந்தால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய அந்த இடத்தை ஒழுங்கு செய்து கொடுத்தவர்கள் மற்ற மதத்தை சேர்ந்தவர்களாக இருக்க முடியும். அதில் யாருக்கும் சந்தேகமாக இருக்க இயலாது. ஏனென்றால் இஸ்லாமியர்களாக இருந்தால், அவர்களும் தொழப் போயிருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் இந்துக்கள்தான். அதிலும் ஒருவர் கிறித்துவர் அடையாளத்தை கழுத்தில் அணிந்திருந்தார். இப்படிப்பட்ட எல்லோரும் அன்போடு மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை குறை சொல்கிறீர்கள். இன்னொரு படம். போராடியவர்களுக்கு ஒரு குட்டி யானையில் இருந்து உணவு வழங்குகின்ற காட்சி. வழங்கிக் கொண்டிருந்தவர் குல்லா அணிந்திருந்தார். அவர் கேமராவைப் பார்க்கவில்லை. ஒருபுறமிருந்து படம் எடுக்கப்பட்டிருந்தது. கர்மமே கண்ணாக உணவு வழங்கிக் கொண்டிருந்தார். விளம்பரமே இல்லை. உணவை எல்லோரும் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மதம் தடுக்கவில்லை. அந்த மத நல்லிணக்கம் உங்களுக்கு பிடிக்கவில்லை. பர்தா அணிந்த ஒரு பெண்மணி, 'நான் தமிழச்சி. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும்' என உணர்வோடு குரல் கொடுத்தார். 

ஹிப் ஹாப் ஆதிஇப்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தமிழர் என்ற உணர்வோடு கலந்து கொண்டார்கள். ஆனால் உங்கள் கோளாறு பார்வைக்கு அந்தத் தொழுகை மாத்திரமே பட்டிருக்கிறது. வடநாட்டு அரசியலை இங்கு புகுத்த நினைக்கிறீர்கள். அது நடக்காது. அதற்கான இடம் இதுவல்ல. இது காவி பூமியல்ல, கருப்பு பூமி. உங்கள் பேட்டிக்கு முன்னோட்டம் தான் ஹிப்ஹாப் ஆதியின் பேட்டி. அவரும், 'இஸ்லாமியர், கருப்பு சட்டை' என்று குறை கூறியிருந்தார். குட்டியை விட்டு ஆழம் பார்த்துவிட்டு இன்று களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். உங்கள் குரலைத்தான் ஒரு காவல்துறை அதிகாரியும் ஒலித்துப் பார்த்தார். உளவுத் துறையோடு சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். பலிக்காது உங்கள் கனவு. இன்னும் சொல்லப் போனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்றிருக்கின்ற முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாயே திறக்கவில்லை. இதே குற்றச்சாட்டை அவரது வாயைத் திறந்து சொல்லச் சொல்லுங்கள், பார்ப்போம். டெல்லியில் டிராப்ட் போடுவதைத்தானே அவர் அறிக்கையாக வாசிக்கிறார். இதையும் அவரையே படிக்க சொல்லுங்கள். இளந்தமிழர்கள் மெரினாவில் காட்டிய மத நல்லிணக்கத்தை குலைக்க முயற்சி எடுக்காதீர்கள். மெரினா புரட்சியாளர்கள் மன்னிக்க மாட்டார்கள். திமுகவையும் குறை சொல்லி இருக்கிறீர்கள். அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால் மததுவேஷப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள். தொடர்ந்து மத துவேஷத்தை கையில் எடுப்பதாக இருந்தால், தமிழர் அடையாளமான வேட்டியை தயவு செய்து துறந்து விடுங்கள். உங்கள் மனம் கவர்ந்த அடையாளத்தோடே வெளியில் வாருங்கள். வேட்டிக்குள் இருக்கும், 'காக்கி டிரவுசரோடு' மாத்திரம் வாருங்கள். எது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள். 

உங்களை காலம் கவனித்துக் கொள்ளும்!

http://www.vikatan.com/news/tamilnadu/78952-time-will-take-care-of-you-pon-radhakrishnan-quotes-dmk-district-secretarys-fb-post.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.