Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Featured Replies

gallerye_232657858_1698682.jpg

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதாவால் உருவாக் கப்பட்ட, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த நிர்வாகிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

 

Tamil_News_large_169868220170127230049_318_219.jpg

ஆட்டம் போட்டவர்களுக்கு மீண்டும் பதவி தரும் முடிவில், கட்சியின் பொதுச் செயலர் சசிகலா இருப்பதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, தீபா பக்கம் செல்வது பற்றி பெண் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த ஜெயலலிதாவால் கட்டம் கட்டப்பட்ட மன்னார்குடி உறவுகள் கட்சியிலும், ஆட்சியி லும் கோலோச்சத் துவங்கி இருக்கின்றன. சசிகலாவின் அரவணைப்பில் உள்ள, அவரின் அக்கா வனிதாமணியின் மகன் தினகரனுக்கும், அண்ணன் சுந்தரவதனத்தின் மகன், டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையே, அதிகார போட்டி நடக்கிறது.

கட்சி, ஆட்சி என ஒட்டுமொத்த அதிகாரமும் சசிகலா கைக்கு வந்துள்ளதால் அவரை யார் வழி நடத்துவது என்பதில் அவரது உறவினர்கள் அடித்துக் கொள்ள துவங்கியுள்ளனர். இதில்,
சசிகலாவின் தம்பியான, மன்னார்குடி திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே மோதல் வெடித்தது.அதில், தினகரனின் பக்கம் சசிகலா திரும்பியதால், அதிருப்தியடைந்த

திவாகரன், மன்னார்குடிக்கு கிளம்பி விட்டார். ஒருபுறம், அவரைச் சமாதானப்படுத்தும் படலம் நடக்கிறது.

இந்நிலையில், தினகரனும் அவருடைய மச்சானுமான வெங்கடேஷும், சென்னை, போயஸ் கார்டனில் தான் வலம் வருகின்றனர். கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்வுகளில், சசிகலாவின் நிழலாக நிற்கிறார் வெங்கடேஷ். இதைப் பார்த்து, வெங்கடேஷின் ஆதரவாளர் கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அத்துடன், கட்சி நிர்வாகிகள்பலரும், வெங்கடேஷ் வீட்டுக்குப் படையெடுக்கின்றனர்.

ஜெ.,வால் அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலராக நியமிக்கப் பட்டவர் வெங்கடேஷ். போட்ட ஆட்டம் காரண மாக, அந்த பதவி பறிக்கப்பட்டு, கட்சியிலிருந் தும் நீக்கப்பட்டார். இப்போது ஜெயலலிதா இல்லாததால், இழந்த பதவியை மீண்டும் பெற, அத்தை சசிகலாவிடம் பேசியுள்ளார்; சசிகலா வும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து, 'பாசறை செயலர் பதவி சீக்கிரம் கிடைத்து விடும்; நமக்கு எதிராக வேலை செய்தவர்கள் பட்டியலை தயார் செய்யுங்கள்' என, தன் ஆதரவாளர்களுக்கு, வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கடேஷுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் என, பெரிய கூட்டத்தையே ஜெயலலிதா நீக்கி இருந்தார். அவர்கள் அனைவரையும் திரும்ப சேர்க்கும் முயற்சியில் வெங்கடேஷ் இறங்கி உள்ளார்.

இது, பாசறை வட்டாரத்தை கவலையடைய செய்துள்ளது. குறிப்பாக, பாசறையில் இருக்கும்

 

பெண் நிர்வாகிகள் இத்தகவலை கேள்விப்பட்டு, அச் சத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். அவர்கள், தீபா பக்கம் செல்வது குறித்து தீவிரமாக பரி சீலித்து வருவதாக தெரிகிறது.
 

இதுகுறித்து, இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


வெங்கடேஷ், சசிகலாவின் உறவினர் என்பதற் காகவே பாசறை செயலராக நியமிக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களால், சொல்ல முடியாத தொந்தரவுகளை நாங்கள் சந்தித்தோம். ஆனால், சசிகலா பயத்தில் புகார் அனுப்ப, யாருக்கும் தைரியம் வரவில்லை.

வேலுார் மாவட்ட இளம்பெண்கள் பாசறையில் இருந்தோர் சிலர், அத்துமீறல்கள் குறித்து, 13 பக்க புகார் கடிதத்தை, ஜெயலலிதாவுக்கு அனுப்பினர். அதைப் பார்த்து கடுங்கோபமான ஜெயலலிதா, எவ்வித விசாரணையுமின்றி, பாசறைப் பொறுப்பிலிருந்து, வெங்கடேஷை உடனே வெளியேற்றினார்; அவரது ஆதரவாளர் களையும் நீக்கினார்.

சசிகலா உறவினர்கள், கூண்டோடு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட போது, வெங்க டே ஷும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது வரை, அ.தி.மு.க., வில் அவர் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஆனால், கட்சி யின் மூத்த நிர்வாகிகள் அவரின் கட்டளைக்கு பணிகின்ற னர். சசிகலாவின் ஆசியோடு, வெங்கடேஷ் மீண்டும் பாசறை செயலராக நியமிக்கப்பட் டால், அவரால் பாதிக்கப்பட்ட நாங்கள், கட்சியை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை,என்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1698682

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.