Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபாவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் முதல் நிகழ்ச்சியை தடுத்த சசிகலா டீம்

Featured Replies

தீபாவுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்  முதல் நிகழ்ச்சியை தடுத்த சசிகலா டீம் 

ஜெயா தீபா

தீபாவின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சியில் சசிகலா தரப்பு ஈடுபடுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஜெயலலிதாவின்  அண்ணன் மகள் தீபா, அரசியலில் ஈடுபடுவதாக சமீபத்தில் அறிவித்தார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அரசியல் பயணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தீபாவின் அரசியல் பயணம், அ.தி.மு.க.வில் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவுக்கு செக் வைக்கும் வேலையில் சசிகலா தரப்பு ஈடுபட்டு வருவதாக தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் தீபா பேரவையை தொடங்கி வருகின்றனர். 

 

 

 

தென்சென்னை தெற்கு மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளரும், தீபாவின் ஆதரவாளருமான வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், "அம்மா, மறைவுக்குப்பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவின் தலைமையில் செயல்பட அ.தி.மு.க.வின் உண்மையான தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். எங்களின் வற்புறுத்தலால், தீபாவும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். தினந்தோறும் தீபா வீட்டிற்கு செல்லும் அ.தி.மு.க.வின் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.


எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் தீபா கலந்து கொண்டார். அப்போது தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு காலை 6 மணியளவில் செல்ல முடிவு செய்திருந்தார். இதையொட்டி எம்.ஜி.ஆர். நினைவு இல்ல நிர்வாகிகளிடம் தகவல் முன்கூட்டியே தெரிவித்து இருந்தோம். அன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் தீபாவின் ஆதரவாளர்கள் அங்கு சென்றோம்.  அப்போது நினைவு இல்லத்தின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனடியாக நினைவு இல்ல நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டோம். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. 


இதையடுத்து நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு கதவை திறந்து உள்ளே சென்றோம். அப்போது எம்.ஜி.ஆரின் சிலையை சுத்தம் கூட செய்யவில்லை. காய்ந்த பூ மாலை அவரது சிலையில் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து சிலையை சுத்தம் செய்த பிறகு காலை 7.30 மணியளவில் தீபா, மாலை அணிவித்தார். தீபாவின் அரசியல் பயணம், சசிகலா தரப்புக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால்தான் தீபாவின் முதல் நிகழ்ச்சியை தடுக்க எம்.ஜி.ஆர். நினைவு இல்ல நிர்வாகிகளை அந்த தரப்பு மிரட்டி இருக்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பிப்ரவரி 24ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சென்னை அண்ணாநகரில் தீபாவின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தீபாவின் தலைமையில் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் நடத்த சபதம் எடுத்துள்ளனர்" என்றனர். 

 இதுகுறித்து எம்.ஜி.ஆர். நினைவு இல்ல அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் சாமிநாதன் கூறுகையில், "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் வழக்கமாக காலை 10 மணிக்கு மேல் திறக்கப்படும். ஆனால் தீபாவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் காலை 6 மணிக்கே வந்து கதவை திறக்கும்படி தகராறு செய்தனர். இதன்பிறகு அவர்களே சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து கதவை திறந்தனர். இந்த பிரச்னையை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை"என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/79031-sasikala-team-attacks-deepa-indirectly.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.